முதல் சினேகிதி
வசீகர் நாகராஜன்

என் அரிசியும் உன் பருப்பும்
கூட்டாஞ்சோறாய் பொங்கிட
பல்லாங்குழியும் பம்பரமும்
பண்டமாற்றாய் பரிமாறிட
தோட்டத்தில் பல் புதைத்து
முளைத்திடுமா என பந்தயமிட
விரல் குவித்து பின்சட்டை பிடித்து
வீடெங்கும் ரயில் சுற்றி வந்திட
எவருக்கும் தராத உன் பிரிய பொம்மை
என் வீட்டு கொலு அலங்கரித்திட
கனவில் கண்ட பேய்க் கதைகள்
கண்கள் அகல விரியப் பேசிட
கவலை மறக்க கதைகள் பேச
புன்னகை பூக்க பரிவாய் கேட்க
மீண்டும் நீ
வருவாயோடா தோழி ?
VNagarajan@us.imshealth.com
வசீகர் நாகராஜன்
About வசீகர் நாகராஜன் - ஆங்கில மூலம் : லேங்ஸ்டன் ஹுயுக்ஸ் (1902-1967)
வசீகர் நாகராஜன் - ஆங்கில மூலம் : லேங்ஸ்டன் ஹுயுக்ஸ் (1902-1967)
View all 15 articles →