ஆதிராஜ்
சுரக்கின்ற கண்ணீ£ரின்
சூடு தனியுமுன்னே
‘இருக்கின்றேன் அஞ்சேலெ’ன்
றெனைத் தொட்டுச் சொல்வாரோ?
தெருவாசல் வழி பார்த்துத்
தனிவாசஞ் செய்கின்றேன்!
மருவாசத்துடன் வந்து
மனவாசம் செய்வாரோ?
பாலோடும் பழமோடும்
பலகாரம் செய்து வைத்தேன்
நாலோடும் வந்தவர்க்கு
நல்விருந்து தருவாரோ?
மெய்வழியும் சோர்வொடு
மெதுநடையாய் வருவார்க்கு
கைவழிய நெய்யூற்றிக்
கண்வழியப் பாரேனோ?
என்னடி என்னடி என்பார்க்
கேது குறை வைத்துவிட்டேன்?
பொன்னடி பிடித்தபடி
புதுக் கதைகள் கேட்பேனோ?
கூப்பிட்ட குரலுக்கு
குதித்தோடி வருவேனோ?
சாப்பிட்ட மீதத்தைத்
தவமிருந்து பெருவேனோ?
மாளாத துயரத்தை
மானியமாய் வைத்தாரே!
மீளாமல் போனாரே
மீண்டுவரக் காண்பேனோ?
– ஆதிராஜ்
- பகுதி நேரக் கடவுளின் நாட்குறிப்பேடு! – அமிர்தம் சூர்யாவின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு
- நாடகர் தாசீசியஸ் 2006க்கான இயல்விருதினைப் பெற்றுக்கொண்டார்
- கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் !
- சுந்தர ராமசாமி என்கிற மாமனிதர்!
- மரணதண்டனை எதிர்ப்பாளர்களை தூக்கில் இட வேண்டும்
- தேசியம் என்பது கதையாடலா?
- சிவாஜி
- உலகத்துக்கு எழுதிய கடிதம்
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் பதினான்கு: ‘வேடிக்கையான குடிவரவுத் திணைக்கள அதிகாரி!’
- உள்ளங்கைச் சூடு
- ஒரு கடிதம்: தலைக்கேறும் மதப் பித்தால் தடுமாறல் சகஜம்
- கடிதம்
- வெசாவின் திண்ணை கட்டுரை எழுப்பிய கருத்துக்கள்
- சிலப்பதிகாரம் -குற்றாலக்குறவஞ்சி இசைக்குறுந்தகடுகள் வெளியீட்டு விழா
- புதுச்சேரி வட்டாரம்-வரலாறு சார்ந்த நாவல்கள்: ‘நீலக்கடல்’ குறிப்பாக…
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 5
- காதல் நாற்பது (25) கனத்துப் போன மனது !
- கருணாகரன் கவிதைகள்
- கடவுளும் கந்தசாமியும் (புதுமைப் பித்தனின் அழியா நினைவுக்கு.)
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 14
- அன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்!
- பெரியபுராணம்-133 (நிறைவு)
- மீண்டு வருவாரோ?
- கோயில்களில் பிறமதத்தார் – ஒரு முரண்பார்வை – பாகம் 2
- கொசு
- தள்ளு வண்டி
- பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
- கால நதிக்கரையில்……(நாவல்)-10
- உருகிய சாக்லெட்