புறநானூறு 343

0 minutes, 0 seconds Read
This entry is part [part not set] of 13 in the series 20010527_Issue

பரணர்


மீனொடுத்து நெற்குவைஇ
மிசையம்பியின் மனை மறுக்குந்து
மனைக்குவைஇய கறிமூடையாற்
கலிச்சும்மைய கரைகலக்குறுந்து
கலந்தந்த பொற்பரிசம்
கழித்தோணியாற் கரை சேர்க்குந்து
மலைத்தாரமுங் கடற்றாரமும்
தலைப்பெய்து வருநர்க்கீயும்
புனலங்கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்
முழங்குகடன் முழவின் முசிறியன்ன
நலஞ்சால் விழுப்பொருள் பணிந்து வந்து கொடுப்பினும்
புரையல்லோர் வரையல ளிவளெனத்
தந்தையுங் கொடாஅ னாயின் வந்தோர்
வாய்ப்பட விறுத்த வேணியாயிடை
வருந்தின்று கொல்லோ தானே பருந்துயிர்த்
திடைமயங் காரிடை நெடுநலூரே.

Series Navigation

author

பரணர்

பரணர்

Similar Posts