நாகூர் ரூமி
====
எப்போதுமே மோனத்திலிருக்கின்றன
உன் பாறையின் இதழ்கள்.
எனினும்
நுரையீரல் நிறைக்கிறது
அவ்விதழ்களின் நறுமணம்.
ஊழிப்பேரலைகள்
உருண்டுவந்தடைத்தாலும்
பாதை மாற்றிக்கொள்ளாது உன் மெளனம்.
வாக்குத் தவறுவதும்
வாழ்க்கை தவறுவதும்
ஒன்றுதான்.
பேச்சில் பயனில்லை
மூச்சைக் கவனி.
ஒரே பாடல்
ஒரே மெட்டு.
எனக்குத் தெரிந்த எந்த வரிசையிலும்
வைக்க முடியவில்லை
உன் பாடலை.
கனவுகள் காணாத உன் கண்களே
என் கனவுகளாகிப் போயின.
உன் நறுமணத்தை நான் நேசிக்கிறேன்
பஞ்சடைத்த நாசியுடன்
படுக்க வைக்கபட்ட என்
தலைமாட்டுப் பக்கம் வாசமூட்ட
அது பயன்படாத வரை.
உன் மெளன முட்டைகளை
நான் கவனமாக அடைகாப்பேன்
சம்மதக் குஞ்சுகள்
வெளிவரும் வரை.
(வெள்ளை ரோஜாவுக்கு)
ruminagore@gmail.com
1:51 PM 10/8/2005
- வித்யாசாகரின் ரசிகை
- பெரியபுராணம் – 60 (திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )
- உயிர் வாழ்தல் என்பது
- கவிதை
- நிர்மூலமாக்கிய ஹரிக்கேனால் நியூ ஆர்லியன்ஸ் நகர மாந்தர் வெளியேற்றம் [2] (Mass Exodus in New Orleans City After Hurricane Katrina
- விமர்சனக் குரல்களின் உலகம் (நான்காவது ஆணி – மலையாளச் சிறுகதைத்தொகுதி அறிமுகம்)
- தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம், சிறப்புப் பேரவை,சென்னை
- கவிஞர் புகாரியின் இருநூல்களின் இனிய வெளியீட்டு விழா
- கடிதம்
- கடிதம்
- காட்சி மாற்றங்கள்
- பாறையின் இதழ்கள்
- நாலு வயது
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-12)
- கஜினி திரைப்படம்- எழுத்தாளர்களுக்குச் சொல்வது….
- தவளை-மனிதர்களின் இயக்க வரலாறு குறித்து ஒரு நூல்
- வள்ளுவரை வசைப்பாடிய சிரிப்பு நடிகர் எஸ்.எஸ். சந்திரன்!
- சிந்திக்க ஒரு நொடி – கற்பும் கற்பிதங்களும்
- ரோஜாப் பூக்கள்
- அலறியின் மூன்று கவிதைகள்
- அப்பா (உள்ளது உள்ளபடி)
- கீதாஞ்சலி (44) எப்போதும் வருகிறானே! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )