கீதாஞ்சலி (94) நான் பிரியும் வேளை!

This entry is part [part not set] of 35 in the series 20061012_Issue

சி. ஜெயபாரதன், கனடா


நல்விடை கூறி என்னை,
அனுப்பி வைப்பீர்
நண்பர்களே,
நானும்மைப் பிரியும் வேளை!
வானம் பளிச்சென வெளுத்து விட்டது!
வனப்பு பொங்கு தென் பாதையில்!
எடுத்துக் கொண்டு செல்வது
என்ன வென்று எனைக் கேளாதீர்.
வெறுங் கையாய்ப் பயணத்தில்,
புறப்பட்டேன்,
பிறர் அளிப்பதை எதிர்பார்த்து!
அப்போது நான்
திருமண மாலை கழுத்தில்
அணிந்து கொள்வேன்!
பயணிகள் உடுத்திக் கொள்ளும்
பழுப்பு நிற ஆடை
ஏகும் எனக்கு ஏற்ப தில்லை!
போகும் பாதையில்
அபாயம் நிரம்ப உள்ளன!
ஆயினும் நெஞ்சில்
அச்ச மில்லை எனக்கு!
வானத்தில்
முளைத்தெழும் வெள்ளி,
என் பயணம்
முடியும் தருவாயில்!
எந்தன் அதிபதி வீட்டு முற்றத்தில்
அந்தி மங்கிய
துன்ப மயக் கீதங்கள்
அடித்துக் கொண்டு எழும்,
அவ்வேளை!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (October 8, 2006)]

Series Navigation