தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
இந்தப் பிறப்பில் நேராக நின்னைச்
சந்திக்கும் கட்டம்
எனக்கில்லை என்றாகி விட்டால்,
உனைத் தெரிசிக்கும் வாய்ப்பிழந்தேன்
என்பதை
உணர வேண்டும் நான்!
கணப் பொழுதேனும் நானதை
நினைக்கத் தவறேன்!
கனவிலும், நனவிலும்
தாங்க வேண்டும், நானந்த
மனவலியை!
வணிக உலகிலே
மணிக் கணக்காய் ஊழியத்தில் உழன்று,
தினமும் செல்வம் சேர்த்து
எனது பை நிரம்பி வழிந்தாலும்,
எதுவும் முடிவில்
சம்பாதிக்க வில்லை எனும் உணர்ச்சி
வெம்பி மேவுகிறது என்னை!
கணப் பொழுதேனும் நானதை
நினைக்கத் தவறேன்!
கனவிலும், நனவிலும்
தாங்க வேண்டும், நானந்த
மனவலியை!
பெரு மூச்சுடன் களைத்துப் போய்,
தெரு ஓரத்து மண்தூசியில்
தணிந்த கட்டில் மீது
குந்தும் வேளை, எனது
நீள்பயண மின்னும் கண்முன் உள்ளதென
நானுணர வேண்டும்!
கணப் பொழுதேனும் நானதை
நினைக்கத் தவறேன்!
கனவிலும், நனவிலும்
தாங்க வேண்டும், நானந்த
மனவலியை!
என்னறையில் தோரணங்கள் கட்டிப்
புல்லாங்குழல் இசை பொழிந்து,
சிரிப்பு வெடிகளில்
ஆரவாரம் செய்யும் போது,
வரவேற்று உன்னை நான் வீட்டுக்குள்
அழைக்க வில்லை யென
உணர வேண்டும்!
கணப் பொழுதேனும் நானதை
நினைக்கத் தவறேன்!
கனவிலும், நனவிலும்
தாங்க வேண்டும், நானந்த
மனவலியை!
*****************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (June 25, 2006)]
- திரைப்படங்கள் புதியவை – விடயங்கள் பழையவை
- பெரியபுராணம் – 94 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- சுவரில் ஒரு சி(ரி)த்திரம்;;
- பூம்புகார்ச் செல்வி கண்ணகி மீது புகார்!
- வடக்கு வாசல் இசை விழா
- கடவுள்களின் கலக அரசியல்
- நெய்வேலியில் ஆனந்த மழை!( 25-6-06)
- சமூக நீதியும், இட ஒதுக்கீடும் – சில மாற்றுச் சிந்தனைகள்
- செர்நோபில் அணுமின்னுலை விபத்துபோல் இந்திய அணுமின் நிலையங்களில் நேருமா? -10
- மயக்கம் தெளியவில்லை
- முறிவு
- கல்மரம் ஆசிரியர் – திலகவதி
- யாமறிந்த மொழிகளிலே…(கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ஐந்தாமாண்டு இயல்விருது விழா)
- கடித இலக்கியம் -11
- கேப்டனும் பேண்டேஜ் பாண்டியனும்
- கழிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே !
- கடிதம்
- கபாவில் சமாதியா
- காலம் 26 வது இதழ் வெளிவந்துவிட்டது
- தேசிய பாரம்பரியக் கலை பாதுகாப்பு மையம்
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 6. சட்டங்களும் அரசியலும்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-7)
- அபத்தம் அறியும் நுண்கலை – 2
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 27
- அணு சோதனையால் மாசுபட்ட மண் – வெளிவரும் சூழலியல் பயங்கரம்
- தமிழினத்தின் அழுகுரல் ..தமிழ்முரசுவுக்கு “நச்”சுனு இருக்கா..??
- தமிழகத் தேர்தல் 2006 – சிங்கப்பூர் ‘தமிழ்முரசு’ அமோக வெற்றி!
- மங்களவரி சுங்கபாண்டி – கருப்பு ஆப்பிரிக்காவின் பாரம்பரிய கணிதம்
- அருந்ததி ராய்
- அந்தக் காலத்தில் புஷ்பக விமானங்கள் இருந்தன
- இட ஒதுக்கீடு
- உதட்டில் மூட்டும் கொள்ளியடுப்பு
- பறவையின் தூரங்கள்
- தாஜ் கவிதைகள் .. 1
- கா எனும் குரல்…
- கேள்விகளும் பதில்களும்
- கீதாஞ்சலி (79) மனவலியைத் தாங்குவேன்!
- சுரதா
- மறைக்கப்பட்ட வரலாறு:அனார்ச்சாவின் கதை