This entry is in the series 20010505_Issue


பெரிய கத்தரிக்காய் –1

கடுகு –கால்ஸ்பூன்

உளுத்தம் பருப்பு –கால் ஸ்பூன்

துவரம் பருப்பு –கால் ஸ்பூன்

பெருங்காயம் –சிறு துண்டு

புளி –1நெல்லிக்காய் அளவு

உப்பு –அரை ஸ்பூன்

வற்றல் மிளகாய் –4

புளியை அரை ஆழாக்கு இருக்கிறாற்போல் கரைத்துக் கொள்ளவும். பிறகு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, வெங்காயம், மிளகாய் இவற்றைத் தாளித்துக் கொட்டி, உப்பு, கருவேப்பிலை, இவற்றைப் போட்டு அடுப்பில் வைத்து புளி வாசனை போக நன்றாகக் கொதிக்கவிடவும். இதற்குள் முழு கத்தரிக்காயை, ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து அதில் போட்டு சிறிது நேரத்திற்கு ஒரு முறை புரட்டி எடுத்தோ அல்லது தணலில் சுட்டோ எடுத்துக்கொண்டு (குக்கரில் சாதம் வைக்கும்போது மேலே கத்தரிக்காயையும் அரைமணி வைத்து எடுத்துக் கொள்ளலாம்.) தோல் உரித்து நன்கு பிய்த்து வைத்துக் கொள்ளவும். நன்கு கொதித்த புளிஜலம் சிறிது ஆறியவுடன் அதில் கத்தரிக்காயைப் போட்டுக் கையால் நன்கு பிசைந்து கலந்து வைக்கவும்.

Series Navigation