- மோதிக்கொள்ளும் காய்கள்
- வேத வனம் விருட்சம் 82
- நீதி நூல்களுக்கான இலக்கணமும், யாப்பு வடிவமும்
- கெண்டைமீன்குஞ்சும் குரான் தேவதையும் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய திறனாய்வு நூல் அறிமுகம்
- அதிகாரத்தின் சரடுகளை இழுக்க துடித்த ஒரு அராஜகவாதியின் கதை
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -11
- வாய் தந்தனவும் மறை தந்தனவும்
- தமிழ் இலக்கியக் களம் பிரபஞ்சன் மற்றும் இசையமைப்பாளர் ஷாஜி ஆகியோரைக்கொண்டு கலந்துரையாடல்
- From the renowned & controversial Georgian filmmaker
- தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர் மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து மே மாத இறுதியில் கவிதைப் பட்டறை
- ஓளி விசிறும் சிறுபூ
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) இரவில் அடிக்கும் காற்று ! கவிதை -7
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -14
- கடவுளின் ராஜினாமா கடிதம்
- சக்கர வியூகம்
- ஆணாதிக்கம்
- முள்பாதை 26
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி எட்டு
- வரிசை…………..!
- ஒரு நொடியின் ஆயிரம் பாகம்..
- பின்னிரவு முகம்
- மீளெழும் கனவுகள்..
- மவுனம் பயணிக்கும் தூரம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இடிக்கப்பட்ட ஆலயங்கள் கவிதை -27 பாகம் -2
- அமீரகத் தமிழ் மன்றத்தின் ’இனியொரு விதி செய்வோம்’ மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி
- ஐஸ்லாந்தின் பூத எரிமலைப் புகை மூட்டம் ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்தை முடக்கியது(கட்டுரை -1)
- மராத்தா- முகலாயர் – 27 வருட போர் – போரியல் ஆராய்ச்சி
- மனங்கவர்ந்த டோரேமோனும் அற்புத மனிதர்களும்
- இணையத்தில் தமிழ்
- முருகாற்றுப்படையில் கடவுளர் வழிபாடும், நம்பிக்கையும்
இளங்கோ

*
உச்சியின் விளிம்பிலிருந்து…
நழுவத் தொடங்கினேன்
காற்றை அவசரமாய் உள்ளிழுக்கிறது
நுரையீரல்..
காட்சியின் குழப்பங்கள்..
யாவற்றையும் பச்சை நிறத்தில்
வர்ணம் தீற்றுகிறது..
திடீரென்று பேரிரைச்சல்..
காதில் அடைப்பட்டு..
வியாபிக்கிறது எப்போதுமே அறிந்திராத
கனத்த மௌனமொன்று..
கீழ் உந்தும் உயிரும்
கவர்ந்து கொள்ளும் விசையும்…
ஒருங்கே ஆலிங்கனம் செய்தபடி..
முனகுகின்றன திசைகளை அறுத்து..
ஒரு நொடியின் ஆயிரம் பாகத்தின்
ஒற்றை மெல்லிய இடைவெளியில்
பள்ளத்தாக்கின் மென்மையை தொட்டுணர்ந்த
மறுகணம்..
உடைகின்றன எலும்புகள்…
நசுங்குகின்றன நரம்பு மண்டலங்கள்..
உடனே..
நொறுங்குகிறது மண்டைக் கூடு…
ரெண்டாய் பிளந்து வெளியேறும்
மூளையின் சொதசொதப்பு…
முதல் முறையாக..
ஆகாயத்தை…
பள்ளத்தாக்கை…
நீல பச்சை வர்ணத்தை…
வாழ்ந்ததாக நம்பிய உலகத்தை…
தரிசிக்கும்போதே…
அதன் மீது கவிகிறது…வழிகிறது..
இருள் மசிய ஒரு கருநீலப் பிரபஞ்சம்…
ரத்தக் கொப்பளிப்பை
இதயம் மட்டும்…பரப்புகிறது..
அப்பள்ளத்தாக்கெங்கும்…நிரப்பி விடும் ஆவலோடு..!
*****
–இளங்கோ