This entry is in the series 20071122_Issue

இமாம்.கவுஸ் மொய்தீன்



வெயிலிலும்
குளிரிலும்
மழையிலும்
புயலிலும்
துவளாது
தளராது
மாடாய் உழைத்து
ஓடாய்த் தேய்ந்தவர்!

இறக்கும் வரையிலும்
எவரையும் சாராமல்
சுயமாய்
உழைத்துச் சம்பாதித்த
சுயமரிதையாளர்!

இன்று
இறந்ததும்
குளிர் பதனப்
பேழையில்
கிடத்தி இருக்கின்றனர்
சிறகுகள் முளைத்ததும்
பொறுப்புகளைத் தவிர்த்து
பறந்து சென்று விட்ட
மக்கள்!
இறுதி மரியாதையாம்!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.


drimamgm@hotmail.com

Series Navigation