தொல்காப்பியக் கவிதையியலும் தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்களும் கருத்தரங்கம்

This entry is part [part not set] of 24 in the series 20090101_Issue

அ.ராமசாமி


பேரா. அ.ராமசாமி

தமிழியல் துறை ,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

திருநெல்வேலி -11

================================================================================================

ramasamy_59@hotmail.com

ramasamytamil@gmail.com

தொலைபேசி : 0462-2520879 / 9442328168

===================================================================== 31-12-2008

நண்பர்களே

வணக்கம்!

எமது தமிழியல் துறை செம்மொழி நிறுவனத்தின் உதவியுடன் 2009,மார்ச்,9,10,11 தேதிகளில் தொல்காப்பியக் கவிதையியலும் தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்களும் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றை நடத்திடத் திட்டமிட்டு வருகிறது. மூன்று நாட்கள் கருத்தரங்கில் வாசிக்கப்படும் கட்டுரைகளின் எண்ணிக்கையைக் குறைத்து விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது எனத்திட்டம். அத்தோடு கல்வித்துறை சார்ந்த புலமையாளர்களையும் கல்வித்துறை சாராத படைப்பாளிகள், திறனாய்வாளர்கள் போன்றவர்களையும் சந்திக்கச் செய்வதும் விவாதிக்கச் செய்வதும் நடக்கும் .

கட்டுரைகளும் விவாதங்களும் தொகுக்கப்பட்டுப் பின்னர் நூலாக்கப்படும். இக்கருத்தரங்கில் கட்டுரை வாசிப்பவர்களுக்குச் செம்மொழி நிறுவனம் முதல்வகுப்பு அல்லது இரண்டாம்வகுப்பு ஏசிக் கட்டணம் வழங்கவும், விவாதத்தில் பங்கேற்பவர்களுக்கு இரண்டாம் வகுப்புக் கட்டணம் மற்றும் தங்கும் படிகள் வழங்கப்படும்.

எமது பல்கலைக்கழக நிதியிலிருந்து மதிய உணவு வழங்க ஏற்பாடு உண்டு.

இக்கருத்தரங்கில் கட்டுரை வாசிக்க/ விவாதத்தில் பங்கெடுக்க எனத் தாங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.

கடிதம் அல்லது இணையம் வழியாகவும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

பதிலை எதிர்பார்க்கிறேன்.

தங்களின்

அ.ராமசாமி

Series Navigation

அ.ராமசாமி

அ.ராமசாமி