கடிதம் டிசம்பர் 23, 2004 – கயமை வேண்டாம்

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

ஹமீத் ஜாஃபர்


எவருடைய இதயங்களில் மாறுபாடு இருக்கிறதோ அவர்கள், அதில் குழப்பத்தை உண்டுபண்ணக் கருதி – (இத்தகைய வசனங்களில் தவறான) பல அர்த்தங்களையே தேடிப் பின்பற்றுவார்கள்….

-அல் குர்ஆன் 3:7

நேசக்குமார் என்பவர். தனக்கு எல்லாம் தெரிந்தது போல், இஸ்லாத்தை கரைத்துக்குடித்ததுபோல் இஸ்லாத்தையும், அதன் இறுதி தூதரையும், அதன் சட்ட திட்டங்களையும் தரம்தாழ்த்தி விமரிசித்து வருகிறார். ஒருவர் மற்றவரைப்பற்றி குறை கூறுமுன் அல்லது விமரிசிக்குமுன் தான் சரியாக இருக்கின்றோமா என்று பார்க்கவேண்டும். அப்போதுதான் அதில் பொருள் இருக்கும். நோய் தீர்க்கும் டாக்டர் நோயாளியாக இருக்கக்கூடாது, தீர்ப்பு வழங்கும் நீதிபதி சித்த பிரமை உள்ளவராக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அங்கு எல்லாமே குளறுபடிதான். நோயும் தீராது, நிரபராதியும் இருக்கமாட்டான்.

முதலில் இந்த நேசக்குமார் தனது மதத்தைப்பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டும், அதன் சட்டத் திட்டங்கள் சரியானதுதானா என்று புரிந்துக்கொள்ள வேண்டும். சிலர் இருக்கிறார்கள் அவர்கள், மற்றவர்கள் என்னென்ன செய்கிறார்கள், எங்கே போகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை தோண்டித்துருவி தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் தான் என்ன செய்கிறோம் என்று மட்டும் தெரியாது. இந்த வகையை சேர்ந்தவர்தான் இவர்.

இவர் சொல்கிறார்: ‘நான் கூடுமான வரையில் முஹம்மது நபி அவர்களை கண்ணியத்தோடும் மரியாதையுடனுமே குறிப்பிட்டு வருகிறேன். முஸ்லிம் அல்லாதவனாகிய என்னுடைய பார்வையில் நபிகள் செய்தவையெல்லாம் குற்றங்களாகவே தென்படுகின்றன. ‘ ராமாயணம்தான் படித்துக்கொண்டிருக்கிறேன், ஆனால் இடிப்பது என்னவோ பெருமாள் கோயிலாகப்போய்விடுகிறது என்பதுபோலிருக்கிறது. காமாலைக் கண்ணுடையானுக்கு காண்பது என்ன வெள்ளையாகவா தெரியும் ? யாருக்கு காது குத்துகிறீர் ? ஒரு மனிதர் மீது கண்ணியமும் மரியாதையும் செலுத்துவதென்றால், அவரது சொல் அல்லது செயல் அல்லது நடைமுறையில் மதிப்பு இருக்கவேண்டும். அவற்றின்மீது மதிப்பில்லாதபோது, தவறாக தெரியும்போது எந்த அடிப்படையில் அதற்குரியவரை மதிக்க முடியும் ? அவரின் அழகைப் பார்த்தா இல்லை அவரிடமுள்ள செல்வத்தைப் பார்த்தா ? இங்கு அந்தஸ்த்துக்கு பேச்சில்லை, அது சொல்லிலும் செயலிலிமிருந்து வெளிப்படுவது.

தான் ஒரு ஹிந்து ஆனால் பிராமணன் அல்ல என்று ஆதங்கத்தை வெளிப்படுத்திய திரு நேச குமார், சங்கராச்சாரியார் ஜெயில் வாசம் போயிருப்பதால் ஹிந்து மக்கள் மனம் தளர்ந்துவிடக்கூடாது, இப்போதுதான் உறுதியாக இருக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். ஒரு மதத் தலைவர் உள்ளே போனது எங்களுக்கும் வருத்தம்தான், ஆனால் என்ன செய்வது ? தினை விதைத்தால் வினை கிடைக்காதல்லவா ?! அம்பு திசை மாறி வராது, நீங்கள் விட்ட பானம் உங்களிடமே வந்து சேருகிறது.

கடவுள் என்ற வார்த்தைக்கு காலம், எல்லை, பரிணாமம், பரிமாணம், அறிவு, சிந்தனை, கற்பனை இவைகள் எல்லாவற்றையும் கடந்த ஓர் உள்ளமை என்ற விளக்கம் ஓரளவுக்குதான் பொருந்தும். முழுமையான விளக்கம் அளிக்க எந்த மனிதனுக்கு அறிவும் போதாது வார்த்தையும் கிடைக்காது. அத்தகைய கடவுளை நீங்கள் என்ன செய்து வைத்திருக்கிறீர்கள் ? பலவாக பிரித்தீர்கள், அவைகள் தனியாக இருக்கக்கூடாதென்று கல்யாணம் செய்து மனைவியை ஏற்படுத்தினீர்கள், மனைவி வந்தபிறகு குழந்தை வேண்டுமே! அவைகளையும் கொடுத்தீர்கள். ஒரு மனைவி பத்தாதென்று பல மனைவிகளை கொடுத்தீர்கள். (ஒரு முஸ்லிம் நான்கு திருமணம் வரை செய்துக்கொள்ள அனுமதி இருப்பதை சகிக்கமுடியாமல் ‘ ‘ஹா! முஸல்மான்லுக் ச்சார் ச்சார் ஷாதியான் கரேகா அவுர் தஸ்தஸ் பச்சா ஜனம் கரேகா ‘ ‘ என்ற சிங்கால்களின் ஒப்பாரி இன்னும் ஓயவில்லை. இந்திய திருநாட்டில் எத்தனை முஸ்லிம் நான்கு திருமணம் செய்து டஜன் கணக்கில் பிள்ளைகளைப் பெற்றுள்ளார்கள். ?)

‘சிவ ‘ என்றால் ‘குற்றமில்லாத சர்வ வல்லமையும் பொருந்திய அநாதியானது ‘ என்று பொருள். சிவம் என்பதற்கு சத்து, சித்து, ஆனந்தம் அடங்கிய சச்சிதானந்தம் என்று பொருள். அதாவது அங்கிங்கெனாது எங்கும் நிரைந்து ஆதியாய், அருவமாய், தன்னிலே தானாய், தனக்கு ஒப்புவமை இல்லாத ஏகனாகிய இறைவனாம் சிவபெருமானுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை …. ?

சக்தி இல்லையேல் சிவமில்லை, சிவமில்லையே சக்தி இல்லை என்று மூலத்தை(சிவம்) பின்னுக்கு தள்ளி, வல்லமையை(சக்தி) முன்னிலைப்படுத்தினீர்கள். நீ பாதி நான் பாதி என்று ஆண் பாதி பெண் பாதியாக ஆக்கியுள்ளீர்கள். மலமில்லாத அநாதிக்கு ஒரு கடவுளியை (பார்வதி) திருமணம் செய்து வைத்து இரண்டு பிள்ளைகளை கொடுத்து குடும்பத்தில் குழப்பத்தை உண்டுபண்ணி அதையும் இரண்டாகப் பிரித்தீர்கள். தந்தையை உள்ளே செல்ல அனுமதிக்காத மூத்தவனின் தலையை சீவி எந்தவகையிலும் பொருந்தாத யானை தலையை பொருத்தி குளக்கரையில் (பெண்கள் குளிக்குமிடத்தில்) உட்கார வைத்துள்ளீர்கள். ஐயா! நான் கேட்கிறேன் சர்வ வல்லமையுடைய கடவுளுக்குத் தன் மகனை தெரியவில்லை, கடவுளுக்கும் கடவுளிக்கும் பிறந்த கடவுள் குழந்தைக்கு தன் தந்தையை தெரியவில்லை. அப்படியானால் அந்த கடவுள்களுக்கு சக்தியே கிடையாதா ? தெய்வத்தன்மை இல்லாத கடவுளா ?

ராமாயண நாயகன் ஸ்ரீராம பெருமான் தன் மனைவி காணாமல் போனபோது அவரை கண்டுபிடிக்க ஹனுமான் என்ற விமானப்படை தேவைப்பட்டது. ஏன் ஸ்ரீராமர் கடவுள் என்றால் அல்லது கடவுள் அவதாரம் என்றால் கடவுள் சக்தி எங்கே போய்விட்டது ? சீதை பிராட்டியார் கண்டுபிடிக்கப்பட்டபின் அவர் கற்புடன் இருக்கிறாரா இல்லையா என்பது ராம கடவுளுக்கு தெரியவில்லையா ? அவருக்கு ஒரு ACID TEST. அதில் அவர் வேகவில்லை காரணம் கடவுளித்தன்மை. சீதா பிராட்டியாரை கண்டுபிடிக்கவும் அவர் கற்புடையவர்தானா என்பதை அறியவும் ஸ்ரீராம பெருமானுக்கு வல்லமை கிடையாதா ? நீங்களே உங்கள் வரலாற்று நாயகனை தரம் தாழ்த்தி வைத்துள்ளீர்கள். எங்களைப் பொருத்தவரை ஸ்ரீராம பிரானும் ஸ்ரீகிருஷ்ண பகவானும் வறலாற்று நாயகர்கள். ஏன் தீர்க்கதரிசியாகக்கூட இருந்திருக்கலாம்.

‘அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நம்முடைய) தூதர் வராத எந்த வகுப்பினரும் (பூமியில்) இருக்கவில்லை ‘ – அல் குர்ஆன் 35:24

‘ஒவ்வொரு தூதரும் (தன் மக்களுக்குத்) தெளிவாக விவரித்துக் கூறும் பொருட்டு, அவரவருடைய மக்களின் மொழியைக் கொண்டே (போதனைப் புரியுமாறு) நாம் அவர்களை அனுப்பிவைத்தோம் ‘ – அல் குர்ஆன் 14:4

‘நிச்சயமாக நாம் உமக்கு முன்னர் தூதுவர்கள் பலரை அனுப்பியிருக்கின்றோம். அவர்களில் சிலருடைய சரித்திரத்தைதான் நாம் உமக்கு கூறியிருக்கின்றோம். அவர்களில் பலருடைய சரித்திரத்தை நாம் உமக்கு கூறவில்லை ‘ – அல் குர் ஆன் 40:78

பெண் என்பவள் தன் கணவனுக்காக, தன் குழந்தைக்காக, தன் குடும்பத்துக்காக தன்னையே அர்பணிக்கும் குணம் கொண்டவள். தாய்மை என்ற அந்த பண்பு அவர்களுக்கே உரியது. உயர்ந்த இடத்தில் வைத்து போற்றப்படுகிற பெண்ணை கோயில்களில் கொங்கையை வெளிப்படுத்தி அரை நிர்வாணமாக்கி (சிற்ப) கலை என்ற பெயரில் அவமதித்துள்ளீர்கள். சிந்தையை சிதரடிக்கும் காம உணர்வை தூண்டும் சிற்பங்களுக்கு பஞ்சமில்லை. புராணமே அப்படித்தானே இருக்கிறது. அழகான பெண் இருந்திடக்கூடாது! இந்திரன், தனக்கு காமம் வந்தால் பிரம்மாவிடம் சொன்னால் அழகான பெண்ணை படைத்து கொடுத்திருப்பார். ஆனால் மாற்றான் தோட்டத்து மல்லிகை என்றால் சற்று மனம் அதிகமாகத்தானே இருக்கும் அதனால் விஸ்வாமித்திரரின் உடைமையை கைவைத்தார் ஆயிரம் யோனிகளை அவார்டாக வாங்கினார். எப்படி உடம்பில் அமைந்தது என்று கற்பனைக்கே எட்டவில்லை. இந்திரனுக்கும் சந்திரனுக்கும் ஆசை இருக்கும்போது சங்கராச்சாரியாருக்கு இருப்பதில் தவறில்லை.

இந்திரப் புராணம் இப்படியென்றால் மகாபாரதமோ ஒரு படி மேல். பாண்டவர்கள் ஐந்து பேருக்கும் ஒரே ஒரு திரெளபதி! ? இருந்தாலும் அந்த பாரம்பரியத்தை விடாமல் இன்னும் கட்டிக்காத்துக்கொண்டிருக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்காக பெருமைப் படவேண்டும். இல்லையில்லை ஜிந்தாபாத் போடவேண்டும்.

ஆசையை துறக்க இந்து மதத்தின் அத்துவைதம் போதிக்கிறது. ஆனால் ஆடையை துறந்துவிட்டு அங்கே(ஆண் உறுபில்) ஒரு பூட்டையும் மாட்டி விட்டுக்கொண்டு காசி வீதிகளில் சுற்றுலா வரும் நிர்வாண சாமிகள் முற்றும் துறந்தவர்கள். The world Highly polluted rever உங்களுக்கு புனித கங்கை.

கடவுள் கொள்கை:-

ஐயா கிருஸ்துவ மதத்திற்கென்று ‘பிதா, சுதா, பரிசுத்த ஆவி ‘ என்ற trinity கொள்கை உண்டு, இஸ்லாத்திற்கென்று ஒரு கொள்கை உள்ளது. அல்லாஹ்வை தவிர வேறு இறைவனில்லை. முஹம்மது (நபி) அவனது இறுதி தூதர் ‘ என்று. அதுபோல் உங்களுக்கென்று இந்து மதத்தின் கொள்கை என்ன ? ((அதைதான் குழி தோண்டி புதைத்துவிட்டார்களே!))

சுமார் 15 வருடங்களுக்கு முன் படித்த ஞாபகம், இந்து மதத்தில் சுமார் 26 உட்பிரிவுகள் உள்ளன. அவைகளில் உயர்வானது சைவ சித்தாந்தம், அந்த சைவ சித்தாந்தத்திலும் தென்னிந்திய சைவ சித்தாந்தம் மிக உயர்வானது என்று டாக்டர் லஷ்மணன் என்பவர் தனது இந்திய தத்துவ ஞானம் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இது சென்னை அரசாலும் இலங்கை அரசாலும் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தகைய சைவ சித்தாந்தத்தை மெய் நிலை கண்ட ஞானி வள்ளலார் ஐயா அவர்கள் தூக்கி எறிகிறார்கள். ‘வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வைக்கவேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறி யன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல் மண்ணைப்போட்டு மறைத்துவிட்டார்கள். அணுமாத்திரமேனும் தெரிவிக்காமல் பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதி என்றும் பெயரிட்டு, இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் முதலியவையும் ஒரு மனிதனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாக சொல்லியிருக்கின்றார்கள். ‘தெய்வத்துக்குக் கை கால் முதலியன் இருக்குமா ? ‘ என்று கேட்பவருக்கு பதில் சொல்லத்தெரியாது விழிக்கிறார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று பெயரிட்டுக்கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ‘

‘இதுபோல், சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்கவேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றி குழூஉக்குறியாகக் குறித்திருக்கிறதேயன்றி புறங்கவியச் சொல்லவில்லை. இவைகளுக்கெல்லாம் சாட்சியாக நானே இருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக்கொண்டிருந்தது இவ்வளவு வென்று அளவு சொல்லமுடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும், வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்கும் தெரியும். ‘ என்று மேட்டுக்குப்பம் சித்திவிளாகத்தில் விளக்கி உரையாற்றியுள்ளார்கள். ((-ஆதாரம்: திரு அருட்பா உரைநடைப் பகுதி))

‘நினைவின்றி நிற்பதுவே அகண்டமாகும்

நினைவின்றி நிற்பதுவே நிட்டையாகும்

நினைவின்றி நிற்பதுவே ஞானமாகும்

நினைவின்றி நிற்பதுவே மோட்சமாகும்

நினைவின்றி நிற்பதுவே சகசமாகும்

நினைவின்றி நிற்பதுவே பிர்மமாகும்

நினைவின்றி நிற்பதுவே சிவவுமாகும்

நினைவணுவு மில்லை யெலாம் பிர்மந்தானே. ‘

என்று ‘ரிபு கீதை ‘யும் விளக்குகிறது. ஆனால் இப்போது ரிபு கீதையுமில்லை, ஐயா அவர்கள் சொன்ன விளக்கங்களும் குப்பைக்குப் போய்விட்டன. மாறாக இப்போது இருப்பதெல்லாம் ‘Enything is God, Everything is God. ‘ என்ற பழயக்கடவுள். பாம்பு கடவுள்(பரமசிவன் கழுத்தில் இருப்பது), பசு கடவுள்(எனவே அதன் மூத்திரத்தை குடிக்கலாம்) ஆனால் படைப்பினங்களிலேயே உயர்ந்த படைப்பான மனிதன் கடவுள் இல்லை, மரித்துவிட்டால் தெய்வமாகிவிடுகிறான்.

மனிதன் படைக்கப்பட்ட விதமும் பூசப்பட்ட வர்ணமும்:-

‘நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கின்றோம். (அவனுடைய துர் நடத்தையின் காரணமாகப்) பின்னர் அவனை தாழ்ந்தோனிலும் தாழ்ந்தோனாக நாம் ஆக்கிவிடுகிறோம். ‘ – அல் குர்ஆன் 95: 4,5

‘ஆதமுடைய சந்ததியை, நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம். கரையில் (வாகனங்கள் மீதும்), கடலில் (கப்பல்கள் மீதும்), நாம் தாம் அவர்களை சுமந்து செல்(லும்படி செய்)கிறோம். நல்ல ஆகாரங்களையும் நாமே அவர்களுக்கு அளிக்கிறோம். நாம் சிருஷ்டித்த (மற்ற ஜீவராசிகளில்) அநேகவற்றின் மீது (பொதுவாக) நாம் அவர்களை மிக மிக மேன்மையாக்கி வைத்திருக்கின்றோம். ‘ – அல் குர்ஆன் 17: 70

‘அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உற்பத்தி செய்தான். அவரிலிருந்து அவரின் மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து அநேக ஆண் பெண்களை (வெளிப்படுத்தி) பரவச்செய்தான். ‘ – அல் குர்ஆன் 4:1

‘அவனே ஆரம்பத்தில் மனிதனை களிமண்ணைக் கொண்டே படைத்தான். பின்னர் ஓர் அற்பத் துளியாகிய (இந்திரிய) சத்திலிருந்து அவனுடைய சந்ததியை(உருவாக்கி) உண்டாக்கினான். ‘ – அல் குர்ஆன் 21:7,8

இப்படி மனிதன் படைக்கப்பட்ட விதத்தையும் அவனுக்கு அளிக்கப்பட்டுள்ள கண்ணியத்தையும் பல இடங்களில் விளக்கும் குர்ஆன், தவறு செய்பவனுக்கு தண்டனையும் உண்டு என்று கண்டிப்புடன் எச்சரிக்கிறது, ஆனால் இந்துக்களின் சாஸ்திர நூல்களில் ஒன்றான மனு சாஸ்திரம் மனிதர்களை பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு விதமாகப் படைத்து, அந்த நான்கு வகைக்கும் நான்கு விதமான பெயிண்டுகளை அடிக்கிறது.

‘எல்லா வல்லமையும் பெற்ற இறைவன், உலக நன்மைக்காக பிராமணர்களை தன் வாயிலிருந்து படைத்தான். இவர்கள் உயர் வகுப்பினர். இவர்கள் வேதம் கற்றுக் கொடுத்தல், யாகங்கள் புரிதல், கோவில் அர்ச்சகர்களாக இருத்தல், தர்மங்கள் வினியோகித்தல். அடுத்து ஷத்திரியர்களை தன் கைகளிலிருந்து படைத்தான். இவர்கள் போர் புரிதல், வேதங்களை ஓதுதல், ஆசைகளை அடக்குதல் ஆகிய கடமைகளை வகுத்தான். மூன்றாவதாக வைசியர்களை தன் தொடை யிலிருந்து படைத்தான். இவர்கள் உழவும் வாணிபமும் செய்யவேண்டும், ஆடு மாடுகள் மேய்க்க வேண்டும். கடைசியாக சூத்திரர்களை தன் பாதங்களிலிருந்து படைத்தான். இவர்கள் மற்ற மூன்று சாதியினருக்கும் அடிமையாயிருந்து ஊழியம் செய்யவேண்டும். ‘

‘இம் மனு சாஸ்திரம் உயர் ஜாதியான பிராமண வகுப்பினருக்கு, கடவுளர்களுக்குக் கொடுக்கப்படும் பெருமதிப்பைத்தரும் தனி உரிமைகளையும், தனிச்சலுகைகளையும் வழங்குகிறது. பிராமணர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்; படைப்புகளிலேயே மிக உயர்ந்தவர்கள்; உலகத்தின் எல்லா உடைமைகளும் அவர்களுடைய சொத்துக்கள்; அவர்கள்தான் உலகத்து எஜமானர்கள்; பிராமணர்கள் தங்கள் அடிமைகளாகிய சூத்திரர்களிடமிருந்து தாங்கள் விரும்பியவற்றையெல்லாம் பறித்துக்கொள்ளலாம்; சூத்திரர்கள் எத்தகைய குற்றம் செய்யாதிருந்த போதிலும் அவர்களிடமிருந்து பறித்துக்கொள்ளும் உரிமை பிராமணர்களுக்கு உண்டு. அடிமைகளாகிய சூத்திரர்களுக்கு எந்த உரிமையும் உடைமையும் கிடையாது; அவன் பெற்றுள்ள எல்லாப் பொருள்களும் அவனுடைய தலைவருக்குச் சொந்தமானவை. ரிக் வேதத்தை மனப்பாடம் செய்த ஒரு பிராமணன், உலகையே அழித்துவிடக்கூடிய பெருங்குற்றங்கள் செய்தாலும், பாவங்களை புரிந்தாலும் அவன் குற்றங்கள் எல்லாம் மன்னிக்கப்படும் (ஆகவே சங்கராச்சாரியர் போன்றோர் எதுவும் செய்யலாம்). மிக அவசியமான நேரத்திலுங்கூட, ஒரு பிராமணன்மீது எத்தகைய வரி விதிக்கவோ, கப்பத்தொகை விதிக்கவோ எந்த மன்னனுக்கும் அதிகாரமில்லை (ஆனதால் ஜெயேந்திரரை வெளியே விடவேண்டும், மன்னராட்சியானாலும் மக்களாட்சியானாலும் மனு சாஸ்திரப்படி நடப்பதுதான் தர்மம்). ‘

‘ஷத்திரியர்களும் வைசியர்களும் சூத்திரர்களுக்கும் மேலானவர்களாகக் கருதப்பட்டாலும், பிராமணர்களுக்கு மிக மிகக் கீழானவர்களே. பத்து வயது பிராமணச் சிறுவன் நூறு வயது ஷத்திரியனைவிட உயர்ந்தவன் ‘. ‘தீண்டத்தகாதவர் ‘ என்று எனக்கூறப்படும் இந்த சூத்திரர்கள், மிருகங்களில் தாழ்ந்தோராகக் கருதப்படுகின்றனர் ‘பிராமணன் ஒருவருக்குத் தொண்டு செய்வதை ஒரு சூத்திரன் தனக்கு கிடைத்த புண்ணியமாகக் கருதி மகிழவேண்டும்; அதற்காக அவன் எத்தகைய கூலியோ சன்மானமோ பெறவேண்டியதில்லை. சூத்திரர்கள் செல்வம் ஈட்டவோ அதனைச் சேர்த்துப் பாதுகாத்து வைக்கவோ கூடாது; ஏனென்றால் அது பிராமணர்களின் உள்ளத்தைப் புண்படுத்தும். ஒரு சூத்திரன், பிராமணனை அடிக்கக் கையையோ கம்பையோ நீட்டுவானாகில், அவன் கை வெட்டப்படவேண்டும்; அவனைக் கோபத்தோடு உதைப்பானாகில், அவன் கால்கள் துண்டிக்கப்படவேண்டும்; தீண்டத்தகாத ஒருவன் ஒரு பிராமணனோடு சரிசமமாக உட்கார முயன்றால் அவன் முதுகில் சூடு போடவேண்டும், அல்லது அவனை நாடு கடத்தவேண்டும்; ஒரு சூத்திரன் ஒரு பிராமணனைப் பழிப்பானாகில் அவன் நாக்கு பிடுங்கப்பட வேண்டும். ஆனால் ஒரு தீண்டத்தகாதவன் கொல்லப்பட்டால், அந்த கொலைக்குப் பகரமாக செலுத்தவேண்டிய பரிகாரத் தொகை, நாய், பூனை, தவளை, பல்லி, காகம், ஆந்தை ஆகியவற்றில் ஒன்றை கொன்றால் என்ன பரிகாரத் தொகை கொடுக்கவேண்டுமோ அந்த அளவேயாகும் ‘ என்று உங்கள் சட்ட நூலாகிய இந்த மனு சாஸ்திரம் கூறுகிறது.

இப்படி மனிதனுக்குப் பெருமை அளிக்கும் நீங்கள், இஸ்லாத்தையும், அதன் வேதத்தையும், அதன் தூதரையும், அதன் சட்டத்தையும் மறைமுகமாகவும் நேரடியாகவும் சுற்றிவளைத்தும் குறை கூறும் திரு நேசக்குமாரிடம் ஒன்று கேட்கிறேன்.

இஸ்லாத்திலும், கிருஸ்துவத்திலும் நடக்கும் திருமணங்களுக்கு அது எத்தனை வருடத்திற்கு முன்பானதாக இருந்தாலும் சரி ஆதாரப்பூர்வமான சான்றுகள் இருப்பதுபோல் உங்கள் மதத் திருமணங்களுக்கு அக்கினி சாட்சியும், முப்பத்தி மூவாயிரம் கோடி தேவர்கள் சாட்சியல்லாது ஒரு மனித சாட்சியுள்ள எழுத்துப்பூர்வமான ஆதாரம் காட்டமுடியுமா ?

இஸ்லாமியர்கள் எவரும் எந்த காலத்திலும் யாரும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் கடவுளாக ஏற்றுக்கொள்ளவுமில்லை, மனதால் நினைக்கவுமில்லை. முஹம்மது நபி (சல்) அவர்களை அல்லாஹ்வின் தூதராக(ரசூல்), முத்திரை நபியாக (காத்தமன்நபி. – கத்தம் என்றால் முத்திரை. முத்திரை வைப்பது என்றால் எல்லாம் முடிந்தபிறகு வைக்கப்படும் சீல், Finalized, Finished forever) உறுதியுடன் ஏற்றுகொண்டுள்ளனர். ஆனால் நீங்கள் தான், உங்களுடைய கோணல் புத்தியுடன் ‘இஸ்லாமிய வரலாறு காட்டும் முஹம்மது நபி அவர்களுக்கும் இஸ்லாமியர்கள் மனதில் கடவுளாக இன்று உருவகப்படுத்தப்பட்டிருக்கும் நபிகள் நாயகத்திற்கும்…. என்று உங்களது ‘இந்துத்துவா ‘வை திணிக்கிறீர்கள்.

‘எனது உம்மத்துக்கள்(நபி வழியை பின்பற்றுபவர்கள்) எழுபது பிரிவுகளாகப் பிரிவார்கள்… ‘ என்று அப்போதே நபிகள் நாயகம்(சல்) அவர்கள் சொல்லி விட்டார்கள். இஸ்லாத்தில் பல பிரிவுகள் இருப்பது உண்மைதான். ஆனால் எந்த பிரிவினரும் ‘லாயிலாக இல்லல்லாஹ் ‘ என்ற மந்திரத்தை தூக்கி எறியவில்லை. மிர்ஜா குலாம் முஹம்மது ஒரு இறைதூதர் என்று அஹமதிகள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்றால், அது அந்த பிரிவினரின் நம்பிக்கை. உலக முஸ்லிம்களின் நம்பிக்கையல்லவே ? அதை வேண்டாதவர்கள் மீது திணித்ததால்தானே துன்பம் அனுபவிக்கின்றனர். அதனால் உங்களுக்கு என்ன நஷ்டம் வந்தது ? நீங்கள் எதற்கு வக்காலத்து வாங்குகிறீர்கள் ? ஷியா சுன்னா சண்டை நடக்கிறதென்றால் அந்த சமூகத்து லோக்கல் தலைவர்கள் சும்மா இருக்காமல் உங்களைப்போல் குசும்பு செய்திருப்பார்கள். அது சண்டையாக பரிமணத்திருக்கும். ஏன் தமிழ் நாட்டில் நடப்பதில்லையா ? ஒரு லோக்கல் தலைவரைப் பற்றி தவறாக சொன்னால் அங்கு கலவரம் வெடிப்பதில்லையா ? ஒரே சமூகத்தின் இரண்டு பிரிவுகள் கத்தியை தூக்கிக்கொண்டு நிற்பதில்லையா ? எதோ புதிதாக கண்டுபிடித்ததுபோல் சொல்கிறீர்களே ?

எப்படி ஐயா உமது சமுதாயம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தாலும், கொள்கைகளாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது ? எந்த இஸ்லாமிய அமைப்பாவது உங்கள் கோயிலை இடித்ததா ? இல்லை எந்த மன்னராவது இஸ்லாமிய சட்டத்தை உங்கள் சமுதாயத்தின்மீது திணித்தனரா ? அல்லது இஸ்லாமிய கலாச்சாரத்தை உங்கள்மீது திணித்தனரா ? மாறாக இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களுக்கும் இந்து கோயில்களுக்கும் பாதுகாப்பு அளித்து வந்தனர். நீங்கள் காறி உமிழ்கிறீர்களே ஒளரங்கசீப்., அவர், சோமேஸ்வரநாத் ஆலயம், ஜகதாம்புரி ஷத்ரன்ஜே ஆலயங்களுக்கு மானியம் வழங்கியுள்ளார். திருப்பனந்தாள் சைவ மடத்தைச் சார்ந்த குமர குருபரர் ‘சகலகலா வல்லி மாலை ‘யை ஒளரங்கசீப், தன் அவையில் அரங்கேற்றச்செய்துள்ளார். காசி மாநகர் ஆலயத்திற்கு அளித்துள்ள அறக்கட்டளை ஒன்றில் அதே ஒளரங்கசீப் ‘பிற சமயத்தாரின் வணக்கஸ்தலங்களைப் பாதுகாப்பதில் உயிர்தியாகமும் செய்ய முஸ்லிம்கள் தயாராக இருக்கவேண்டும் ‘ எனக்குறிப்பிட்டிருப்பது உங்கள் சிந்தைக்கு எங்கே வரப்போகிறது ?

இஸ்லாமிய சட்டம் என்பது வேறு, வாழ்க்கை முறை என்பது வேறு. சரீஅத் சட்டம் உலக முஸ்லிம்கள் அளவில் ஒன்றுதான். ஆனால் வாழ்க்கைமுறை என்பது அந்தந்த நாட்டின் அல்லது அந்தந்தப் பகுதியில் நடைமுறையில் இருக்கும் கலாச்சாரத்தைப் பொருத்திருக்கிறது. அப்படித்தான் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். தமிழகத்து முஸ்லிம்களின் பழக்கவழக்கம் வட இந்தியாவில் காணமுடியாது. ஏன், மற்ற மானிலங்களில் காண்பது அரிது. இது முஸ்லிம்களுக்கு மட்டும் பொருந்தாது எல்லா வகுப்பினருக்கும் பொருந்தும்.

இஸ்லாத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருவதாக விதண்டாவாதம் செய்பவரே! ஒன்றை கேளுங்கள், ஒளரங்கசீப்பும் மற்ற மன்னர்களும் மானியம் அளித்ததுபோல் திப்பு சுல்தானும் ஆற்காட்டு நவாபுகள், கோயில்களுக்கு கொடுத்த கொடைகள் ஏறாளம். அதேபோன்று கூன் பாண்டிய விஜயரங்க சொக்கநாதர், அவரது மனைவி ராணி மங்கம்மாள், மராட்டிய மன்னர் பிரதாப் சிங் முதலானோர் இஸ்லாமியர்களது தர்காக்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் வாரி வழங்கிய கொடைகளும் ஏறாளம். மன்னர்கள் மட்டுமல்ல இன்று வாழ்ந்துவரும் மக்களும் மத மாறுபாடின்றி ஒருவருக்கொருவர் சகோதரத்துவத்துடன் இருந்துவருவது தமிழ் மண்ணுக்கே உரிய பண்பாடு. இதை கெடுத்துவிட உங்கள் கூட்டணி உட்பட எந்த சக்தியாலும் முடியாது .

ஒன்றை இறுதியாக சொல்கிறேன். இஸ்லாமிய மக்கள், அதன் சட்டத்திட்டங்களை ஏற்றுக்கொண்டு அங்கீகரித்துக்கொண்டுவிட்டார்கள். அதை யாராலும் எப்போதும் மாற்றமுடியாது. அதில் வரும் கஷ்ட நஷ்டங்கள், சுக துக்கங்கள் அந்த மக்களைப் பொருத்தது. அதில் தலையிட மாற்று மதத்தவர் எவருக்கும் உரிமை கிடையாது. அதேபோல் உங்கள் மதத்தில் சொல்லப்பட்ட அல்லது நம்பப்படுகிற விஷயத்தில் தலையிட மற்றவருக்கு உரிமை கிடையாது. எனவே நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்: முதலில் உங்களை நீங்கள் தூய்மைப் படுத்திக்கொள்ளுங்கள் பிறகு மற்றவர்கள் முதுகை சொறியலாம். ஆனால் இஸ்லாத்தின் மீது நேசக் கரம் நீட்ட நீங்கள் நினைக்கும்போது நாங்கள் பாசக் கயிறு வீச தயாராக இல்லாமலாயிருப்போம் ?

‘யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. ‘

இவண்,

Hameed Jaffer.

மின் அஞ்சல்: maricar@emirates.net.ae

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)

Series Navigation

ஹமீத் ஜாஃபர்

ஹமீத் ஜாஃபர்