பாரதி மகேந்திரன்
உ) வெங்காயம் சேர்த்த வாழைக்காய்க் கறி
தேவையானவை:
நன்கு முற்றிய வா;ழைக்காய்கள் – 3
சாம்பார் (சிறிய) வெங்காயம் – 200 கிராம்
எண்ணெய் – 100 கிராம்
கடுகு – 1 தே. க.
மிளகாய்ப் பொடி – 2 தே. க
உப்பு – 2 தே. க. அல்லது தேவைப்படி
முதலில் வாழைக்காய்களைத் தோல் சீவி, அவற்றைச் சிறு துண்டங்களாக அரியவும். பிறக கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் ஏற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகைப் போட்டு அது வெடித்த பின் உரித்து வைத்துள்ள வெங்காயங்களை அதில் போட்டு அது நன்றாக வேகும் வரை வதக்கவும். பின்னர், அரிந்து வைத்துள்ள வாழைக்காய்த் துண்டங்களை அதில் போட்டுக் கிளறிக் கலந்து, மிளகாய்ப் பொடியையும் உப்புப் பொடியையும் சேர்க்கவும். பிறகு ஒரு சல்லடைத் தட்டால் மூடி வைத்து மிதமான தீயில் அதை வேகவிடவும். அவ்வப்போது அடி பிடிக்காமல் இருக்கக் கிளறிவிடவும். நன்றாக வெந்து பிறகு இறக்கவும்.
இது சாதத்தில் பிசைந்து சாப்பிட ஏற்றதாகும். சிலர் வெங்காயத்துடன் உரித்த பூண்டுப் பற்களும் கொஞ்சம் சேர்த்து வதக்குவார்கள். இதனால் பூண்டு வாசனையுடன் இதன் சுவை கூடும். பெருங்காயப் பொடி அவசியம் இல்லை. ஆனால் சேர்ப்பதும் சேர்க்காததும் அவரவர் விருப்பம்.
mahendranbhaarathi@yahoo.com
பாரதி மகேந்திரன்
- கனடாத்தமிழர் வாழ்வும் வளமும்!
- சுவர்களில்லா உலகம் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’
- முஷாரப்பின் சுயபுராணம்: சொந்த கதையும் , நொந்த கதையும்
- மனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றி பாரிஸ் கருத்தரங்கு-3 (IPCC)
- சான்றோராகிய நிழல் வாழ்நர் எனும் வீரர்
- விளக்கு பரிசு பெற்ற அம்பைக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்
- இன்னும் சில ஆளுமைகள்
- எச்சரிக்கை
- An Invitation
- மண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் : நாஞ்சில் நாடனின் கலை
- என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?
- எனக்குப்பிடித்த கதைகள்- பாவண்ணனின் சாகித்ய சஞ்சாரம்
- கடித இலக்கியம் – 46
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 8 – உருண்டது உத்ராட்சக் கொட்டை !
- தாஜ் கவிதைகள்
- நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்குப் பாராட்டு விழா
- இரண்டாவது தமிழியல் மாநாடு “இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்”
- ஈழத்து நவீன நாடக முன்னோடி ஏ.சி.தாசீசியஸுக்கு இயல் விருது
- கருப்பையா மூப்பனாரும் காமராஜரும்…..மலர்மன்னனின் பூ உதிர்ந்த முள்கொத்து ……
- தைத்திருநாள் விழா கவியரங்கம்
- இலை போட்டாச்சு! – 16 வெங்காயம் சேர்த்த வாழைக்காய்க் கறி
- மடியில் நெருப்பு – 26
- பூக்கள் என் கவிதைகள்
- காதல் நாற்பது (10) உன்னைத்தான் நேசிக்கிறேன்
- திருட்டும் தீர்ப்பும்
- பெரியபுராணம்- 123 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
- கவிதை மரம்
- கவிதைகள்
- ஈசாநபியான இயேசுகிறிஸ்துவின் கருணைக்கு
- நாட்டுடமையாகும் நூல்களும் பரிவுத் தொகையும்: சில யோசனைகள்
- பெண்ணடிமையினையும் சமூக ஏற்றத் தாழ்வையும் மனுநீதி வலியுறுத்துகிறதா? –
- கிளிஜோசியக்காரரின் தேடல்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:7 காட்சி:1)
- நீர்வலை – (12)
- சிறகொடிந்த பறவை