இற்றைத் திங்கள் – ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஊழலை விட மோசமான நாடகங்களும்
மஞ்சுளா நவநீதன்

சுரேஷ் கல்மாடி தனியாளாக நின்று ஊழல் செய்தார் என்று ஒப்புக் கொள்வது எவ்வளவு கடினமோ அதே அளவு கடினம் ஸ்பெக்ட்ரம் ஊழல் வெறும் மூன்று பேருக்குள் முடிந்திருக்கும் என்று எண்ணுவதும்.
அதில்லாமல், ஊழலுக்குத் துணை போன தொழிலதிபர்கள் இன்னமும் விசாரணைக்குக் கொண்டு வரவில்லை. அரசியல் வாதிகளும், பெரும் தொழில் அதிபர்களும் ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக ஊழலில் ஈடுபடுவது தடைப் படவேண்டுமானால் விசாரணை அமைப்புகள் சுதந்திரமாக செயல்படவேண்டும். ஜனாதிபதிக்குத் தான் அவர்கள் தம் அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதி பதவியும், ஆளும் கட்சியின் கிளை போலச் செயல்படுவது இன்னொரு அவலம்.
”டைம்” பத்திரிகையின் உலகின் மிகப் பெரியா ஊழல் பேர்வழிகளில் ஒருவராக, ராஜாவும் இடம் பெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பித்திருக்கிறார். லிப்யாவின் கடாஃபி, இதாலியின் பிரதமர் பெருல்ஸ்க்கொனி போன்ற ஊழல் மன்னர்களில் வரிசையில் இவரும் இடம் பெற்றிருக்கிறார்.
ஆனால் ஊழலுக்கு தண்டனை வழங்குவது இந்தியாவில் எப்போது நடந்திருக்கிறது? சர்க்காரியா ஊழல் முதல் போஃபர்ஸ் ஊழல் வரையில் எந்த ஊழலும் அரசியல் அதிகார வர்க்கங்கலை தண்டிக்க முடியவில்லை. அரசியல் காய் நகர்த்தலுக்கும், கூட்டணி நிர்ப்பந்தக்களுக்கும், மிரட்டலுக்கும், பின்னணி பேரங்களுக்கும் பயன் படும் ஓர் ஆயுதமாகத் தான் ஊழல் பற்றிய விசாரணைகள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கலாசாரம் என்ற வியாதி இன்று நீக்கமற எல்லாக் கட்சிகளாலும் மேற்கொள்ளப் பட்டுவிட்டது. இதில் விதி விலக்குகள் எதுவும் இல்லை.
ஊழலைக் கட்டுப்படுத்த அல்லது சுதந்திர அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற அண்னா ஹஸாரேயின் கோரிக்கையை ஏற்று லோக்பால் மசோதா என்ற ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறது காங்கிரஸ் அரசு. குற்றச் சாட்டு கொண்டு வருபவர்களை தண்டிப்பதில் உள்ள அவசரம், குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை விசாரிப்பதிலும், அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதிலும் இல்லை என்று தோன்றும் படி உப்புப் பெறாத ஒரு மசோதாவைக் கொண்டு வந்து முன் நிறுத்தியிருக்கிறார்கள்.
——
nava.manjula@gmail.com
- யாழ்ப்பாணத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்
- தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….
- ரீங்கார வரவேற்புகள்
- வார்த்தையின் சற்று முன் நிலை
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1
- நட்பு
- சூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11
- அரசியல் குருபெயர்ச்சி
- தூசி தட்டுதல்
- நகர் புகுதல்
- தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி
- இவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1
- முகபாவம்
- சாலைக் குதிரைகள்
- திரிநது போன தருணங்கள்
- உதிரமெழுதும் தீர்ப்பின் பிரதிகள்
- முள்ளால் தைத்த நினைவுகளுடன்…..
- ஒரு பூ ஒரு வரம்
- பிரதிபிம்ப பயணங்கள்..
- இந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,
- இலக்கியத்திற்கு ஒரு ’முன்றில்’…!
- உனை ஈர்க்காவொரு மழையின் பாடல்
- ஜப்பான் டோகைமுரா யுரேனியச்செறிவுத்தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து(1999 Fatal Accident at Tokaimura Uranium Enrichment Factory)
- தானாய் நிரம்பும் கிணற்றடி! கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா!
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37
- இற்றைத் திங்கள் – ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஊழலை விட மோசமான நாடகங்களும்
- எழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்
- நாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான்
- இது மருமக்கள் சாம்ராஜ்யம்
- நம்பிக்கை
- மூலக்கூறுக் கோளாறுகள்..:_
- யார்
- இவைகள் !
- கை விடப்பட்ட திசைகள்..
- அகம்!
- அரசியல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -1)
- கவிஞர் வைதீஸ்வரனின் கட்டுரைத்தொகுப்பு ‘திசைகாட்டி’ குறித்து