ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு ‘விளக்கு ‘ அமைப்பின் விருது

This entry is part [part not set] of 29 in the series 20021215_Issue

நா கோபால் சாமி


அமெரிக்கத் தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் அமைப்பான ‘விளக்கு ‘ 2001-க்கான புதுமைப் பித்தன் இலக்கிய விருதை நாவலாசிரியை ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள் சி சு செல்லப்பா, பிரமிள் , கோவை ஞானி, நகுலன் பூமணி ஆகியோர். வெளி ரெங்கராஜன், கவிஞர் இன்குலாப், எழுத்தாளர் கோ ராஜாராம் ஆகியோர் கொண்ட நடுவர் குழு, ஹெப்சிபா ஜேசுதாசனை விருது பெறத் தெரிவு செய்துள்ளது.

ஹெப்சிபா ஜேசுதாசனின் ‘புத்தம் வீடு ‘ நாவல் பலவிதங்களில் தமிழ் நாவல் இலக்கியத்தில் சிறப்பான இடம் பெற்றுள்ளது. யதார்த்தத்தின் மிக ஆழமாய்க் கால் பதித்து, தம்முடைய மக்களின் வாழ்க்கையை சிறப்பாய்ப் பதிவு செய்துள்ளார், ஹெப்சிபா ஜேசுதாசன். இது வந்த காலகட்டத்தில் இருந்த கற்பனாவாதத்தின் போக்கை மிக ஆழமாய் இந்த நாவல் கேள்விக்குள்ளாக்கியது. இதன் பிறகு வெளிவந்த டாக்டர் செல்லப்பா, அனாதை, மானீ நாவல்கள் தமிழ் நாவல் பரப்பில் ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு மிக முக்கியமான இடம் ஒன்றை அளித்துள்ளது.

திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய ஹெப்சிபா ஜேசுதாசன், தன் கணவர் ஜேசுதாசனுடன் இணைந்து ‘தமிழ் இலக்கிய வரலாற்றை ‘ ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

பரிசளிப்பு விழாவும் அதையொட்டிய கருத்தரங்கும் திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது.

நா கோபால் சாமி

அமைப்பாளர்

விளக்கு தமிழிலக்கிய நிறுவனம்

மேரிலாந்து அமெரிக்கா.

Series Navigation

நா கோபால்சாமி

நா கோபால்சாமி

ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு ‘விளக்கு ‘ அமைப்பின் விருது

This entry is part [part not set] of 29 in the series 20021215_Issue

நா கோபால் சாமி


அமெரிக்கத் தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் அமைப்பான ‘விளக்கு ‘ 2001-க்கான புதுமைப் பித்தன் இலக்கிய விருதை நாவலாசிரியை ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள் சி சு செல்லப்பா, பிரமிள் , கோவை ஞானி, நகுலன் பூமணி ஆகியோர். வெளி ரெங்கராஜன், கவிஞர் இன்குலாப், எழுத்தாளர் கோ ராஜாராம் ஆகியோர் கொண்ட நடுவர் குழு, ஹெப்சிபா ஜேசுதாசனை விருது பெறத் தெரிவு செய்துள்ளது.

ஹெப்சிபா ஜேசுதாசனின் ‘புத்தம் வீடு ‘ நாவல் பலவிதங்களில் தமிழ் நாவல் இலக்கியத்தில் சிறப்பான இடம் பெற்றுள்ளது. யதார்த்தத்தின் மிக ஆழமாய்க் கால் பதித்து, தம்முடைய மக்களின் வாழ்க்கையை சிறப்பாய்ப் பதிவு செய்துள்ளார், ஹெப்சிபா ஜேசுதாசன். இது வந்த காலகட்டத்தில் இருந்த கற்பனாவாதத்தின் போக்கை மிக ஆழமாய் இந்த நாவல் கேள்விக்குள்ளாக்கியது. இதன் பிறகு வெளிவந்த டாக்டர் செல்லப்பா, அனாதை, மானீ நாவல்கள் தமிழ் நாவல் பரப்பில் ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு மிக முக்கியமான இடம் ஒன்றை அளித்துள்ளது.

திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய ஹெப்சிபா ஜேசுதாசன், தன் கணவர் ஜேசுதாசனுடன் இணைந்து ‘தமிழ் இலக்கிய வரலாற்றை ‘ ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

பரிசளிப்பு விழாவும் அதையொட்டிய கருத்தரங்கும் திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது.

நா கோபால் சாமி

அமைப்பாளர்

விளக்கு தமிழிலக்கிய நிறுவனம்

மேரிலாந்து அமெரிக்கா.

Series Navigation

நா கோபால்சாமி

நா கோபால்சாமி