சி. ஜெயபாரதன், கனடா
எந்தையும் தாயும் பூரித்து உலாவி,
முந்தையராய் ஆயிரம் ஆண்டுகள் நிலவி
சிந்தையில் கோடி எண்ணம் விதைத்த,
தாயக பாரதத்தை
வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று
வாயுற வாழ்த்தும் போதினிலே
எந்த மதவாடை அடிக்குது?
என்னுடன் பிறந்த பாரத
பந்துக்களே!
வந்தே மாதர மென்னும் கீதம்
சொந்த வழிபாடா
மதவாதி களுக்கு?
முந்தையப் போராட்டத்தில?்
மராட்டிய சிங்கங்கள்
முதல் விடுதலை முழக்கமாய்ப் பாடிப்
பிரிட்டன் வயிற்றைக் கலக்கிய
வந்தே மாதர கீதம்
வடிவ வழிபாடா?
வரலாறு நுகராது
சிறகொடிந்த ஈசல்கள்,
பிறந்த நாட்டை துறக்கின்றன!
அசோகனின் ஆழித் திலகம் ஒளிரும்
மூவர்ணக் கொடிக்கு
முடிவணங்கி மதிப்ப ளிப்பது
வடிவ வழிபாடா?
பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும்
கற்றவர்க்கு
நற்றவத் தெய்வம்!
மற்றவர்க்கு
வெற்றுத் தோற்றம்!
எம்மதமும் சம்மதம் என்று
பாரதம் வரவேற்றது,
நிம்மதியாய் வாழ!
பெற்ற தாயும் தெய்வந்தான்!
பிறந்த நாடும் தெய்வந்தான்!
நட்ட கல்லும் தெய்வந்தான்!
வெட்ட வெளியும் தெய்வந்தான்!
சக்தி, சிவனும் தெய்வந்தான்!
ஆசிய புத்தன் தெய்வந்தான்!
ஏசு மகானும் தெய்வந்தான்!
நபி நாயகம் தெய்வந்தான்!
குரு நானக் தெய்வந்தான்!
கீதையும், குறளும் தேவ நூல்தான்!
பைபிள், குரானும் தேவ நூல்தான்!
தெய்வ முள்ள தெனின் எல்லாம்
தெய்வந்தான்!
தெய்வ மில்லை எனின் எதுவும்
தெய்வ மில்லைதான்!
உலகக் கரங்கள் ஒன்று கோர்த்த
ஐக்கிய நாட்டுப் பேரவை,
ஒலிம்பிக் மேடையில்,
கொடி வணக்கம் செய்வது
வடிவ வழிபாடா?
பிறந்த நாட்டை வணங்காத பிள்ளைகள்
புறக்கணிப்பர் தம் முத்திரை!
************
Jayabarat@tnt21.com [October 4, 2006]
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:4, காட்சி:1)[முன்வாரத் தொடர்ச்சி]
- நியூஜெர்ஸி சிந்தனை வட்டம் நடத்திய திரைப்பட விழா
- வாழ்க்கை நெறியா இந்து மதம்
- மழைக்கால அவஸ்தைகள்
- புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (189 – 209)
- சுதந்திரத்துக்கான ஏக்கம் ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’-சல்மாவின் கவிதைத்தொகுப்பு
- பழமொழி படுத்திய பாடு
- வரிநெடும் புத்தகத்து என்னையும் எழுத வேண்டுவன் அல்லது கோயில் நான்மணிமாலை
- பாறைக்குட்டம் அனுப்பக் கவுண்டர் செப்பேடு
- கடித இலக்கியம் – 25
- ஓசைகளின் நிறமாலை -கோ.கண்ணனின் முதல் கவிதைத் தொகுப்பு வெளீயீட்டு நிகழ்வு குறித்த சில பதிவுகள்
- மெளன அலறல்
- கடிதம்
- கடிதம்
- சிறப்புச் செய்திகள்-2
- கருத்துக்கள் குறித்து சில கருத்துக்கள் – ரசூல், பாபுஜி,விஸ்வாமித்ரா,ரூமி, வெ.சா
- விலைபோகாத போலித்தனங்கள்.
- தீவீரவாதிகளுக்குப் பால் வார்க்கும் தமிழ் எழுத்தாளர்கள்
- மடியில் நெருப்பு – 6
- வந்தே மாதரம் எனும் போதினிலே !
- தாஜ் கவிதைகள்
- உறக்கம் கெடுக்கும் கனவுகள்
- கிளி சொல்ல மறந்த கதை
- பெரியபுராணம் – 106 திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கீதாஞ்சலி (93) உத்தரவு பிறந்து விட்டது!
- அப்சல் குரு : மரண தண்டனையா, மன்னிப்பா ?
- நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு! அத்தியாயம் பத்து தொடர்ச்சி: பண்டைய தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள்!
- பேசும் செய்தி -2
- ஏக இறைவன் கோட்பாட்டின் உள்ளார்ந்த வன்முறை
- தாய்லாந்து: அரசியலில் ராணுவம்
- தமிழ் நாட்டிற்கு தேசிய நோக்கிலான அரசு: சாத்தியமாகுமா?
- யசுகுனி ஆலயம் – பாகம் 2
- இரவில் கனவில் வானவில் (5)
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 5