கோவி.கண்ணன்
செய்தி : ரஜினி ரசிகர்கள் ரஜினியை வாய்ஸ் கொடுக்கச் சொல்லி போஸ்டர் யுத்தம் நடத்துகிறார்கள்.
இந்த சமயத்தில் திரு ரஜினியும், அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற தலைவருமான சத்திய நாராயணன் ரஜினியை சந்திக்கிறார்.
ரஜினி : என்ன சத்தி… இந்த அரசியல் வாதிங்களும்…. பத்திரிக்கை காரங்களும் … வம்புக்கு இழுக்கிறாங்கன்னு பாத்தா … நம்ம ரசிகர்களும் … .சே புரிஞ்சிக்கவே முடியலேப்பா
சத்திய நாராயணன் : தலைவா, இந்த தேர்த்தல்ல நீங்க எதாவது சொல்லனும்னு எதிர்ப்பார்க்கிறாங்க… எல்லோரும் நீங்க ஜெ…வ ஆதரிக்கனும்னு எதிர்பார்கிறாங்க … அப்பதான் ராமதாசுக்கு பாடம் கொடுக்க முடியுமாம் ?
ரஜினி : சத்தி ஜி … நீங்க என்ன சொல்லவர்ரீங்க … அது எப்டி சத்தி ஜி … ?
சத்திய நாராயணன் : நீங்க வழக்கமா சொல்ற ‘தாய் தான் முக்யம்னு, தாய் சொல்றபடி கேட்கனும்னு சொன்னிங்கன்னா, நம்ப ரசிகர்கள் புத்திசாலிங்க … அவுங்க ‘அம்மா ‘ ன்னு புரிஞ்சிக்குவாங்க … மத்த கட்சிகாரங்க யாருக்கும் சந்தேகம் வராது …
ரஜினி : ஐடியா நல்லாதான் இருக்கு … ஆனா அதுக்கு அவசியமில்லேன்னு நெனெக்கிறேன்.
சத்திய நாராயணன் : தலைவா … நீங்க கண்டிப்பா மறுபடியும் வாய்ஸ் கொடுக்கனும்.
ரஜினி : அது எப்படி சக்தி முடியும்… போன தடவே … பாபா பிரச்சனை .. ராமதாசை எதிர்த்தோம் … ஆன ஒன்னும் நடக்கலையே … 40 தொகுதிலியும் எதிர்கட்சிதானே ஜெயிச்சாங்க
சத்திய நாராயணன் : என்ன தலைவா, நீங்க தான அடிக்கடி சொல்லுவிங்க … பகவான் கீத்தையில சொல்லியிருக்காரு… இன்னிக்கு ஒனக்கு கிடக்கிறது… நாளைக்கு ஒனக்கு கிடைக்காது … வெற்றியோ தோல்வியோ நிரந்த்தரமில்லைன்னு …
ரஜினி : சத்தி … நீங்க என்ன சொல்லவர்ரீங்க ?.
சத்திய நாராயணன் : அதான் நேத்திக்கு பா.ம.க ஜெயிச்சிச்சு … இன்னிக்கு ஜெயிக்கக் கூடாது …
கோபமாக,
ரஜினி : யோவ் … அது வேற இது வேறய்ய்….ய்யா …
சத்திய நாராயணன் : தலைவா … நீங்க பெரிய மனுசன் … மறந்திர்ரீங்க … ஆன நம்ம ரசிகர்கள் … இன்னும் கொதிப்பு அடங்காம தானே இருக்காங்க …
ரஜினி : அதான் யாருக்கும் ஆதரவில்லேன்னு நான் தெளிவா சொல்லிட்டேன்ல்ல சத்தி ?
சத்திய நாராயணன் : நேத்திக்கு கட்சி ஆரம்பிச்ச விஜயகாந்த் இன்னிக்கு மாலையும் கழுத்துமா வர்ராரு பாத்திங்கல்ல… அவுரோட ரசிகர்கள் நம்ப ஆளுங்களை கேவலா பாக்கறத தாங்க முடியிலயே தலைவா
மிகக் கோபமாக,
ரஜினி : ந்நோ … ந்நோ … சத்தி … மத்தவங்க கூட என்னே கம்பேர் பண்றது … என் வழி … என் வழி தனி வழி … என்னோட யாரையும் கம்பேர் பண்ற ரசிகர்கள் வேண்டாம். இப்ப .. இப்ப போன போட்டு எல்லார்கிட்டயும் சொல்லிடு… இப்ப நமக்கு சிவாஜிதான் முக்யம்.
சத்திய நாராயணன் : அப்ப எலக்சன் … வாய்ஸ் …
ரஜினி : எலக்சன் அஞ்சு வர்சத்து ஒரு தடவே வரும்… ஆனா சிவாஜி ஒரு தடவே வந்த திரும்ம வர்ராது …
‘இன்னிக்கு வாய்ஸ் கொடுக்கலேன் ‘னு சொல்லுவாங்க இந்த பத்ரிக்கே காரங்க … அதே பத்ரிக்கே காரங்க ‘நாளெக்கு சும்மாருந்திருக்கலாம் ‘ அவுங்களே சொல்லுவாங்க. நாளெக்கு அவுங்க சொல்றத நான் இன்னிக்கெ செஞ்சுடுறேன்
சத்திய நாராயணன் : அப்ப நான் ரசிகர் மன்றத்தில என்ன சொல்றது …
ரஜினி : என்ன பெர்ரிய ரசிகனுங்க … அவுங்க ஒழுங்கா பாத்திருந்தா பாபா போயிருக்கும். இன்னெக்கு வாய்ஸ் குடும்பாங்க … எதாவது சொன்னால் … அத்ல பாதிபேரு … தலைவர் சொல்றது புடிக்கலேம்பாங்க … அதான் போன எம்.பி எலக்சென்ல பாத்தேன்ல …
ரஜினி சத்தியை பார்க்கிறார்
சத்திய நாராயணன் : …
ரஜினி : அதான் சொல்லிட்டேன்ல்ல … வேனாம் … எல்லாத்தையும் விட்டுடுவோம் … சிவாஜி … இந்த பேரத்தான் நாம இப்ப நெனெக்கனும் …
‘நாம சண்டேக்கு போக மாட்டோம் … எதிரிங்க தான் சண்டேக்கு வர்ராங்க ‘
‘நாம பலசாலி இல்லெ … எதிரிங்கதான் பலசாலி … ஆன நாம புத்திசாலி ‘
‘ஆண்டவன் எங்க.. எப்டி … எந்த.. காய நகத்தனுமோ அங்க.. அப்டி.. நகத்திக்கிட்டே இருக்கான் ‘
‘இந்த பதவி … பட்டம் … தேடிவந்தாலும் திரும்ம்பி பாக்கக்கூடாது … அதான் நமக்கும் நல்லது … மத்தவங்களுக்கும் நல்லது ‘
‘நான் வாய்ஸ் கொடுத்து … அப்புறம் சிவாஜிய… சிவ…சீன்னு சொல்லிட்டாங்கன்னா ? … பாவாம் எ.வி.எம் சரவணனும் … சங்கரும் ‘
‘சிவாஜி ஜெயிக்கனும் சக்தி … ஜெயிக்கனும். பாபா … நான் தான் நஷ்டப்பட்டேன் … வேறே யாரும் நஷ்டேப்படலே.. ‘
‘சிவாஜி நஸ்டம்னா … சிவாஜி ராவுக்கு நஷ்டம் … சிவாஜி கனேசன் பேருக்கே நஷ்டம் … நம்ப மராட்டிய மன்னன் மாவிரன் சிவாஜி புகழுக்கே நஷ்டம்… ‘
‘கஷ்டம் நம்மளோட இருக்கனும் … நம்பளால யாருக்கும் கஷ்டம் இருக்க கூடாது ‘
‘பாபாஜி பட்டம் பறக்கல …. என் கையிலேயே திரும்ப விழுந்துச்சி, சந்தரமுகி பட்டம் பறந்துச்சி … பறந்தது மட்டுமில்லாம டால் போட்டிச்சி … அது மாதிரி சிவாஜி குதிரெ ஜெயிக்கனும் … தோக்கக் கூடாது… ‘
‘பாபா… மூலையிலே முக்காடு…ன்னு சொன்ன ராமதாஸ் … சிவாஜி வாயிலே ஜிலேபின்னு சொல்லி ஜிஞ்சுபி பாடிட கூடாத்தில்ல ‘
சத்திய நாராயணன் : … ? ? ?
ரஜினி : என்ன கொடுமை சரவணன் சார் ‘ ன்னு ஏவிம் சரவணணை பாத்து சங்கர் சொல்லிட்டார்னா ? நாம எங்க போய் முட்டிகிறது சத்திஜி.
சத்திய நாராயணன் : சரி அதவிடுங்க தலைவா, இந்த சமயத்துல சிவாஜி பஞ்ச் டயலாக் ஒன்னு எடுத்துவுட்டிங்கன்னா, பசங்க வாய்ஸ் கேக்குறத மறந்துட்டு துள்ள ஆரம்பிச்சுடுவாங்க.
ரஜினி : சங்கர்ஜீ கோவிச்சுக்குவாரான்னு தெரியல்ல, சரி … நான் பேசி சரிப்பண்ணிக்கிறேன்.
‘காந்திஜி கையல இருந்தது கைத்தடி, இந்த சிவாஜி கொடுக்கப்போறது சவுக்கடி ‘
‘நேதாஜி (இந்தியர்களை இணைத்து) வெள்ளக்காரங்களுக்கு காட்டுனது தண்ணி, இந்த சிவாஜி (நதிநீரை இணைத்து) தமிழ்நாட்டுக்கு காட்டப்போறதும் தண்ணி ‘
‘பாபாஜி கை காட்டினா முத்திரை, இந்த சிவாஜி கை காட்டினா எதிரிங்களுக்கு இல்லை நித்திரை ‘
சத்திய நாராயணன் : சூப்பர் குத்து தலைவா, இது போதும் அடுத்த எலக்சன் வரைக்கும்.
கோவி.கண்ணன்
—-
geekay@singnet.com.sg
- கவிதைகள்
- அவுரங்கசீப்…. ? !!!
- சன் டிவி
- கடிதம்
- ‘விளக்கு ‘ குறித்து சில விளக்கங்கள்
- இஸ்லாமியப் பெண்ணியம் – ஹெச்.ஜி.ரசூல் நூல் வெளிவந்துவிட்டது
- உயிர்நிழல் கலைச்செல்வன் நினைவு-கூடல்
- வகாபிகளின் நவீன தீண்டாமை
- கடிதம்
- ரஜினி வாய்ஸ் ! ஒரு கற்பனை
- கழகக் கந்தன் என்கிற பரிஷத் முருகன்
- மாஜிகல் ரியலிசம் : கற்பனைகளின் எல்லைகளை கடந்து
- ரிகர்சனிசம்:பின்நவீனத்தின் இன்னொரு முகம்
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -4 (சென்ற வாரத் தொடர்ச்சி)
- சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-1 [The Approaching Global Thermage
- கவிதைகள்
- ரா கு கே து ர ங் க சா மி -4
- மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள்
- பெரியபுராணம் – 83 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கவிதைகள்
- அந்தக் கணம்
- கீதாஞ்சலி (67) வானும் நீ! கூடும் நீ! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- உள்ளுணர்வில் பலரும் ஹிந்துக்களே
- மகாத்மாவை இனி பரமாத்மா என்றே அழைப்போம்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக மின்நூலகம் – வசதிகளும் வாய்ப்புகளும்
- ரஃபீக் ஜகாரியா எழுதிய ‘நல்லிணத்துக்கான பாதை : எங்கே வழி தவறினர் இந்திய இசுலாமியர் ? ‘ – நூல் அறிமுகம்
- ஷரீஅத் குற்றவியல் – ஒரு மறுவிவாதம்
- கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 1
- என் கணவரின் மனைவி!
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 15
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-15) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- தண்டனை