கோமதிநடராஜன்
கையில் இருக்கும் வரை,
கந்தல் துணி.
கை விட்டுப் போன பின்,
பட்டுப் பீதாம்பரம்.
கண்ணில் தெரியும் வரை
கடங்காரன்
கானலாய் போன பின்
கருணாகரன்.
அருகில் நிற்கும் வரை
அடங்காப் பிடாரி
அடங்கிப் போன பின்
அஷ்ட லக்ஷ்மி.
பக்கத்தில் நின்ற வரை
பரம வைரி
பயணம் போன பின்
பால்ய சினேகிதன்
பார்வையில் பட்டவரை
பங்காளி
பறந்து போன பின்
பாசமுள்ள சகோதரன்.
ஒருவரை-
இருக்கும் போது
இடிக்கின்றோம்
இழந்த பின்னே
துடிக்கின்றோம்.
இனியாவது-
எட்டும் இடத்தில் இருப்பவரை
ஏளனம் செய்யவும் வேண்டாம்
பெட்டிக்குள் வைத்தபின்
பெருமை பேசவும் வேண்டாம்.
————————–
பார்வையில் பட்டவரைப்
பாராட்ட நமக்கோ,
மனமில்லை
பாராட்டும் போது அதைக்
கேட்க அவருக்கோ,
செவியில்லை.
இறைவா! உனக்கு ஒரு
வேண்டுகோள்.
அவயங்கள் அத்தனையும்
அடங்கிப் போனாலும்,
செவியை மட்டும், சில
மணித் துளிகள்
செயல் பட வைப்பாயா.
விடை பெறும் ஆத்மா
பாராட்டு மழையில் நனையட்டும்
உவகையுடன் உயிர்,
உடலை விட்டுப் ,பிரியட்டும்
- முள்பாதை 12
- நீ விட்டுச் சென்ற மழை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) < ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -3
- வேத வனம் விருட்சம் 67
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம்-6 மதுக்குடி அங்காடி (The Tavern)
- யாவரும் அறிவர்.
- அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள். (கட்டுரை: 5)
- இது பெரிய எழுத்து மற்றும் மலையாளக் கதைகள்
- முறிந்த பனை: சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம்
- ‘‘பண்டிதமணியின் திருவெம்பாவை உரைத்திறன்’’
- புதுவகை நோய்: இமி-4
- செவி மட்டும் செயல் படட்டும் .
- ஒற்றைக் காலுடன் நிற்கிறது கடவுள்
- எக்கியின் குடும்பம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -5
- நெனச்சது ஒண்ணு
- வேதக்கோவில்
- வேதக்கோவில் (முடிவு)
- ஆலமரம்
- நினைவுகளின் தடத்தில் – (41)
- பட்டாம்பூச்சிகள் சுதந்திரமானவை
- தூண்டிற்புழு
- வயிறு
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருது -2009