This entry is in the series 20010101_Issue


திலகபாமா சிவகாசி


அவளுக்கும்
அவனுக்கும்
இடையில்
இன்னொரு நிலா
பொறுமையில் பூமியாய் அவள்
தகிக்கும் சூரியனாய்
தாலி கட்டியவன்.
வந்து மறையும்
வண்ண நிலவாய்
பகலவன் ஒளியை
பறித்துக் கொண்டு
பூமிக்கும்
சூரியனுக்கும் இடையில்
புகுந்து விட்ட நிலா.

Series Navigation