திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060818_Issue

அரசியலும் சமூகமும்

நான்கு வருணக் கோட்பாடு, தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை – பகுதி 2

பிரகஸ்பதி அன்றைய அரசியல் சூழலைத் திரு. வேதநாயக சாஸ்திரி அவர்கள் கி.பி.1795-ல் எழுதிய இடங்கை, வலங்கையர் வரலாறு என்னும் நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார். "வடுக ராசாக்கள் நாளிலே ....... முதலாய அனேகங்காடுகளையழித்து நாடாக்கினார்கள். வடுக…

எண்ணச் சிதறல்கள் – சுதந்திர இந்தியா, இராணுவம், சட்டை-செரீன் – சாருநிவேதிதா, தாஜ், சின்னக்கருப்பன்

நேச குமார்"உனது குறைகளையும் மீறி உன்னை நான் விரும்புகிறேன்" என்றானாம் பைரன். இதை குறிப்பிட்டிருந்தார் குமுதத்தில் தமிழருவி மணியன். இந்திய சுதந்திர தினத்தன்று இதுதான் நினைவுக்கு வந்தது. எல்லாக்குறைகளையும் மீறி எனது நாடு உன்னதமானது.…

நம்மை உறுதியற்றவர்களாக, விட்டுக்கொடுப்பவர்களாக, எல்லாவற்றையும் சகித்துக்கொள்பவர்களாகப் பார்க்கிறார்கள்

ஆரி·ப் முகம்மது கான் இந்தியாவில் நடக்கும் பயங்கரவாதத்தின் நோக்கம் "காஷ்மீர் பிரசினையில் உதவுவது" இல்லை. பாகிஸ்தான் 1971இல் உடைக்கப்பட்டதன் அவமானத்துக்கு பழிவாங்குவதே காரணம். நேரடியான ராணுவ வெற்றிக்கு வழியில்லாதபோது, வன்முறை மூலம் பயத்தை உருவாக்கி…

யுக தர்மம் அறியாதவரா சின்னக் கருப்பன்?

மலர் மன்னன் சில மாதங்களுக்கு முன் ஒரு கூட்டத்தில் பேசுமாறு என்னை அழைத்திருந்தார்கள். நான் பேசும்போது யுக தர்மங்கள் குறித்தும் பேசவேண்டியதாயிற்று. களத்தில் ஆயுதம் இழந்து நின்ற ராவணனிடம் இன்று போய் நாளை வா…

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 12. திருநாட்கள்

குமரிமைந்தன் திருநாட்கள் எனப்படும் பெருநாட்கள் ஆண்டின் குறிப்பிட்ட நாட்களில் மக்களில் பெரும்பாலோரால் கொண்டாடப்படும் பண்டிகை எனப்படும் திருநாள்களே ஆகும். தமிழ்நாட்டில் இன்று பெருமளவில் கொண்டாடப்படுபவை தைப்பொங்கல். சித்திரைப் பிறப்பு, ஆடிப்பிறப்பு, ஆடி முழுக்கு, பிள்ளையார்…

பயங்கரவாதம் – பல தலையுள்ள பாம்பு – தேவை பலமுனை யுத்த தந்திரம், ஆயத்தம்

நரேந்திர மோடிபயங்கரவாதம் - பல தலையுள்ள பாம்பு - தேவை பலமுனை யுத்த தந்திரம், ஆயத்தம் பயங்கரவாத காலங்களில் அரசும், சமூகமும் பயங்கரவாதம் என்பது அரசாங்கங்களையும் சமூகங்களையும் , வன்முறை மூலம் பயமுறுத்தி அரசியல்…

எரிகிறதாம் அங்கு. ஈரமில்லை இங்கு.எம்மவர்க்கே அழுதழுது இதய ரத்தம் தீர்ந்து போச்சு.

அனல் தூங்கும் கண்ணன் அண்மையில் படிக்க நேர்ந்த மிக துரதிர்ஷ்டவசமான கட்டுரைகளில் ஒன்று திருவாளர். சின்ன கருப்பன் நேசகுமாருக்கு எழுதிய பதில். மற்றொன்று கவர்ச்சிகர பின்-நவீனத்துவ வார்த்தை ஜாலங்களால் மறைக்கப்பட்டு முன்வைக்கப்பட்டிருந்த திரு. பீர்…

மஞ்சுளா நவநீதன் கட்டுரையை முன்வைத்துச் சில கருத்துகள்

எஸ். இராமச்சந்திரன் மஞ்சுளா நவநீதனின் தமிழ் வாழ்க! தமிழறிஞர் ஒழிக!! என்ற கட்டுரை சொற்சிக்கனத்துடன், குழப்பமின்றிப் பொட்டில் அடித்தாற்போல் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக பிட்ஜின், க்ரியோல் மொழிகளைப் பற்றி எழுதியுள்ளது இது விஷயமாக நம்மை ஆழ்ந்து…

ஜிஹாத் எனும் இஸ்லாமிய கடமை!

இப்னு பஷீர் 'இஸ்லாம் என்றாலே பயங்கரவாதம்' என்ற துவேஷப் பிரச்சாரம் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரகர்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பரப்பப் பட்டு வருகிறது. ஊடகங்களின் துணையோடு இவர்களின் குரல் உரத்து ஒலிக்கிறது. உரக்கச் சொல்வதெல்லாம் உண்மையாகி…

சின்னக்கருப்பனுக்கு சில விளக்கங்கள்

நேச குமார்"ஷியா சுன்னி பிளவுக்கும் ஈரான் ஈராக் பிளவுக்கும் என்ன சம்பந்தம்? ஈராக்கின் பெரும்பான்மை ஷியா. ஈரானின் பெரும்பான்மையும் ஷியாதான். ." ஈராக் ஈரான் மீது போர் தொடுத்ததற்குக் காரணம், அங்கு ஏற்பட்ட ஷியா…

அறிவிப்புகள்

கடிதம்

வஜ்ரா ஷங்கர்திண்ணையில் வெளிவந்த எச். பீர்முகம்மது அவர்களின் "புறாக் வாகனம் உள்ளே போகிறது- டெல் அவிவிலிருந்து பெய்ரூட் வரை" என்ற கட்டுரை படித்தேன். லெபனான் ஹெஸ்பல்லா, இஸ்ரேல் பிரச்சனையத் தொடாமல், இஸ்ரேல் உருவான சரித்திரத்தைப்…

வேளாளரின் வரலாற்றுத் திரிபுகள் என்ற தலைப்பில் ப்ரவாஹன் எழுதியதற்கு

வேளாளரின் வரலாற்றுத் திரிபுகள் என்ற தலைப்பில் ப்ரவாஹன் எழுதியதற்கு என்னால் முடிந்த விளக்கத்தைக் கொடுத்துள்ளேன் . தெளிவாக கொடுக்க வில்லை என்றாலும் குறிப்புகளால் கொடுத்துள்ளேன் சந்தேகம் வந்தால் எனது மின்னஞ்சல் கொடுக்கவும் மூவேந்தர்கள் முக்குலத்தோரே…

கடிதம்

நாகூர் ரூமிஅன்புள்ள சின்னக் கருப்பன், திரு நேசகுமாரின் இஸ்ரேல் ஆதரவு கருத்துக்களுக்கு நீங்கள் சொல்லும் பதில்களோடு நான் உடன்படுகிறேன். இந்த உலகில் மதத்தைவிட மனித நேயம்தான் முக்கியமானது. முதலில் நாமெல்லோரும் மனிதர்கள். பின்புதான் மதம்…

கடிதம்

வஜ்ரா ஷங்கர் திண்ணையில் திரு. சின்னக்கருப்பன் அவர்கள் எழுதிய ஜூலை 27 அன்று வெளியான மத்தியகிழகுப் போரும் இந்தியாவும் என்ற கட்டுரை கண்டேன்... அவர் மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் பற்றி முழுவிபரங்கள்…

அர்ச்சகராகும் உரிமை மற்றும் வெங்கட்சாமிநாதனின் கேள்வி

கற்பக விநாயகம் 'அனைத்து இந்துக்களே ஒன்று திரளுங்கள்' என்று ஒரு குரல் 90களின் ஆரம்பத்தில் தமிழ்நாட்டிலும் இந்துத்துவ சக்திகளின் வாயில் இருந்து ஒலித்தது. இங்கிருந்த ஒரு சக்தி தேவதையும் அதனை வழிமொழிந்தபடியே செங்கல் எடுத்துக்…

சின்னக் கருப்பனுக்கு நன்றி!

இப்னு பஷீர் சென்ற வார 'திண்ணை'யில் திரு. சின்னக் கருப்பன் எழுதிய கட்டுரை, நடுநிலைக் கண்ணோட்டத்தில் நல்லதொரு அலசலாக அமைந்திருந்தது. இந்திய முஸ்லிம்கள் லெபனான் மக்களுக்காக அனுதாபப்படுவது அவர்கள் முஸ்லிம்கள் என்பதற்காக மட்டுமல்ல. மதங்களைத்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, மேலேறும் கடல் மட்டம், தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-9

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பச்சை நிறத்தை ஒட்டி ஓரளவு மினுமினுக்கும், இன்றைய மரங்களின் இலைகள்! ஆயினும் அவ்விதம் மின்னும் பசுமை தென்படுமா, கோலம் மாறும் போது, காலமும், கடல் மட்டமும்…

இலக்கிய கட்டுரைகள்

அன்பின் வழியது உலகம் – ( வழிப்போக்கன் கண்ட வானம் – பாவண்ணனின் கட்டுரைத் தொகுதி அறிமுகம் )

ஜெயஸ்ரீ இலக்கிய உலகில் பல முக்கியப் படைப்பாளிகள் தம் படைப்புகளோடும் பணிகளோடும் நின்றுவிடும் தருணத்தில் தம் சொந்தப் படைப்பாக்க முயற்சிகளிலும் மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் ஈடுபடுவதோடு பல அரிய முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்களைப் படித்து அவற்றை…

ஆழியாள் கவிதைத் தொகுதி

றஞ்சிசமூகத்தில் மாற்றம் விளைவிக்கும் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதமாக கவிதை இருக்க முடியும் என்கிறார் கவிஞர் டென்னிஸ் புரூடஸ். உலகத்தை வெறுமனே விமர்சனம் செய்வதோ அல்லது அதைப் புரிந்து கொள்வதோ மட்டும் போதாது ஒரு…

பெண்ணின் உள்மன வெளிப்பாடு 2006இலும் 1984இலும்

தேவமைந்தன் பெண்ணின் உள்மன உளைச்சல்கள் வெளிப்படுவதில் நிகழ்நிலையும் இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முந்திய இறப்புநிலையும் ஒன்றாகவே இருப்பதை, தற்செயலாக என் குறிப்பேடுகளைப் புரட்டும்பொழுது கண்டு வியந்தேன். இன்றைய நிலைக்கு, இந்தக் கட்டுரையில், மாலதி மைத்ரி முதலான…

கடித இலக்கியம் – 18

வே. சபாநாயகம் கடிதம் - 18 நாகராஜம்பட்டி 16-3-77 அன்புள்ள சபா, வணக்கம். பக்தி செய்வது ஒரு நல்ல மனநிலை. அது உத்தமமான பலன்களை உண்டாக்கும். பக்தியில் அதீத நிலை உண்டாகிற போது அதற்குப்…

கதைகள்

கற்கோவில்கள்

சிறில் அலெக்ஸ் "மக்கா எழும்பு. மடிக்குப் போணும் எழும்பு." எலிசபெத்தா மகன் சேவியரை எழுப்பினாள். "ராவைக்கு ராவ நார்கோலுக்குப் போய் படம் பாத்துட்டு கடலுக்குப் போவ எழும்பாம கெடக்காம் பாரு. எல எழும்புல." முனகிக்கொண்டே…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 34

ஜோதிர்லதா கிரிஜா துர்க்காவின் நெற்றியில் அடிபட்டு இலேசாக இரத்தம் கசியத் தொடங்கி யிருந்தது. மேடையில் தயாராக வைக்கப்பட்டிருந்த முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்த ஓர் இளைஞர் துர்க்காவின் நெற்றியைப் பஞ்சால் ஒற்றித் துடைத்து மருந்து…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-14)

சி. ஜெயபாரதன், கனடா"காதல் சம்பந்தப்பட்ட வரையில் பாலுணர்ச்சிகளைப் பொய்யாக எண்ணப் படுவதை நானொரு மனிதப் பாபமாகக் கருதுகிறேன். அதே சமயத்தில் காதல் முழுதாயின்றிப் பின்னமாக உள்ள போது ஏற்படும் உணர்ச்சிகளை போலித்தனமானத் தவறென்று நான்…

(அ) சாதாரணன்

கே. ராமப்ரசாத் ஒரு முறை அவர் என் அலுவலகத்துக்கு வந்திருந்தார். நான் எழுந்து அவரை வரவேற்றேன். அவர் தம் ஷூக்களைக் கழற்றியபடியே என்னைப் பார்த்து மெல்ல புன்னகைத்தார். நான் பதிலுக்கு ஒரு மரியாதை கலந்த…

மெழுகுவர்த்தி

எஸ். ஷங்கரநாராயணன் ஏ ப்ளஸ் பி - என்று அண்ணன் படிப்பான். குடுவையில் எதாவது வாயு சேகரிக்கும் முறை பற்றிப் படிப்பான். அக்பரின் சாதனைகள் படிப்பான். சர்க்கரை அதிகம் கிடைக்கும் எதோ நாடு பற்றிப்…

கவிதைகள்

பருவ மழை

ஸ்ரீமங்கை அன்று இப்படிப் பெய்யவில்லை மின்னல் வெட்டி காற்றை ஈரித்து நெட்டிலிங்க மரம் வளைத்து, முருங்கைக்கிளை சுளுக்கி, விஸ்தார வயல்களில் பெரிதாகப் பெய்யுமென மண்வாசனைக்காய் மூச்சடக்கிக் காத்திருக்கையில் அன்னியக்காற்றோடு மேல்திசைபோன மேகங்களை நினைவில் சுமந்து…

நீயும் காத்திரு

புதியமாதவி, மும்பை உன் மூச்சுக்காற்றின் புணர்ச்சியை விலக்கி என்னில் கருக்கொள்ளும் மனிதப்பூக்கள் போர்த்தொடுக்கும் போர்க்களத்தில் உன் கால்களுக்கு நடுவில் காலம் காலமாய் அமுக்கி வைக்கப்பட்டிருக்கும் என் தளைகள் உடைபடும், உன் தளைகளும்தான். என்னைக் கைதியாக்கியதில்…

பெரியபுராணம்- 100 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2827. மறையவரின் சூளாமணி போன்றவராகிய ஞானசம்பந்தரும் திருப்பூந்துருத்திக்கு அண்மையில் வந்தருள்கிறார் என்ற பெருவார்த்தையை வாகீசர் கேட்டருளினார் உடனே மகிழ்ந்தார் நம்மை ஆளுடைய பிள்ளையாரை நாம் எதிர் சென்று இறைஞ்சுவது முற்பிறவியில் செய்த நல்வினைப்பயன்…

எங்கள் தாயகமே…

பட்டுக்கோட்டை தமிழ்மதி O தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி நாட்டுப்பண் பாடும் நாட்கள்...நாட்கள்... O மூவண்ணக் கொடி உச்சிபோய் அவிழ உதிரும் பூக்கள்... O கொடிக் கம்பத்தின் கீழே கோடுகிழித்து வைத்த புள்ளிகளாய் பள்ளிப்பிள்ளைகள்... ஆடாமல்…

வாழ்க்கையை மாற்று தாயே!

தியாகு நிலையில்லா உலகும் நிக்காத பணமும் எங்களுக்கா மாரியம்மா ஏழைக்குதான் காளியம்மா! கடன் வாங்கி விதைச்சு புட்டோம் கதிரறுக்க காசில்ல வட்டி கடை காரனுக்கு வருசம்பூரா பணமிருக்கே! நிலையில்லா.............. அறுத்த நெல்லை குறைவாக வந்த…

கீதாஞ்சலி (86) – மரண தேவனுக்கு வரவேற்பு .. !

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா அதோ! மரண தேவன் எதிரில் நிற்கிறான், எனது வாசற் கதவருகிலே, உனது வேலையாள் அவன்! எவருக்கும் தெரியாத தூரக் கடல் கடந் தெனது வீட்டிற்கே, வந்து விட்டான் உந்தன்…

போர்ச் சேவல்

டீன்கபூர் திரை விலகி ஒரு நாள் திரை மூடும். வருந்தி கண்கள் அகழ்ந்த அருவியில் அமிழும். தேசங்களின் மீதம்;; கரைக்கப்படும். தவறியது மிதமாகி பனியாகி உருகிய சுதந்திரம் கொல்லன் வசைத்த இரும்பாகி இரும்பாகி. ஆயினும்…

நகைச்சுவை