அஜ்னபி
சுழலும் பல்சக்கரச் சிக்கலில்
இயங்கும் உலகம் கடிகாரம்
நிழலின் நீளம் குன்றுவதாக
சுருங்கும் மனிதம் சில நேரம்
முடிவிலியான
முட்களின் சுற்றோட்ட ஸ்ருதியாக
நிஷ்டை கலைத்திடும்
நிஷ்டூர இசையாக
குறுக்கிடல்களில் குழம்பி
தேடலில் தொலைகிறது
சகஸ்ராப்தம்…
வய்யக விரிவு வலையில்
சிக்குண்டு சிறகிழந்த
ஜந்துக்கள் நாம்…
அறிவதையும் அவஸ்தையாக்கி
அறிவியல் அழிவுகளில்
அரூபங்கள் ஆயினோம்
மழலையைத் தொலைத்தோம்
பசுமையைக் குலைத்தோம்
பழைமையை சிதைத்தோம்
ரசனையைப் புதைத்தோம்
சாதனங்களில் நுழைந்தோம் – வெறும்
சேதனங்களாய் விளைந்தோம்
பரம்பரைச் சொத்தாய்
பார்த்தீனியம் வித்தாய்
தொற்று நோய் விதைத்தோம் – பின்பு
தோற்றுவாய் கதைத்தோம்
சூழலை சுடுகாடாக்கினோம்
ஊழலை வாய்ப்பாடாக்கினோம்
விற்பனைப் பொருளாய்
விளைந்தது மனிதமும்
கற்பனையாயிற்று
கல்வியின் புனிதமும்
மின்சார விளக்குகளின்
வெளிச்சக் கவர்ச்சியில்
கலாசார வேர்களை
கருகிடச் செய்தோம்…
ஆய்வு குழாயில்
அன்பு பிறப்பிக்க முடியுமா?
புன்னகையை புதுப்பிக்க
பூச்சுக்கள் உதவுமா?
மரபணுச் சோதனையின்
மருத்துவச் சாதனைகள்
மனிதத்தை உயிர்ப்பிக்க
மாற்று வழி தந்ததுண்டா?
ஸின்த்தட்டிக் கனவுகள்
காணும் மனங்களில்
சிந்தனை செழித்து
சித்தாந்தம் ஒளிருமா?
இயற்கைக்கும் எமக்கும்
இடைவெளி வேண்டாம்
இருதயச் சலவையுடன்
இனியொரு விதி செய்வோம்
மனிதம் வளரவும்
ஈரப்பதம் அவசியம்
மனசில்..!
அஜ்னபி
ajnabhii@yahoo.co.in
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -8
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது -1
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது – 2
- தேசிய பல்துறை ஆய்வரங்கம்
- அந்த காலத்தில் நடந்த கொலை – மானிஃபெஸ்டோ – 2
- “காவடிச் சிந்து புகழ் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்”
- முனைவர், புலவர் த.கோடப்பிள்ளை
- அன்புள்ள ஆசிரியருக்கு
- ஏலாதி இலக்கிய விருது 2009 முனைவர் பொ.நா.கமலா மற்றும் விஸ்வாமித்திரன் திறனாய்வு நூல்களுக்கு பரிசு.
- இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – நிகழ்ச்சி நிரல்
- கருத்துப் பரிமாற்றம் கதவுகளைத் திறக்கும்
- உன்னதம் – ஆகஸ்டு 2009 இதழ்
- PURAVANKARA Presents “BRIEF CANDLE”
- சமஸ்க்ருதம் பற்றி அறிய முயற்சிக்கவேண்டும்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 49 << கடற் புதிர்கள் >>
- என். விநாயக முருகன் கவிதைகள்
- வேத வனம் –விருட்சம் 47
- ஒலிகளாலான உலகு (நல்லி-திசையெட்டும் இலக்கிய விருது 2009ல் வாசிக்கப்பட்ட உரை)
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! கடுகு விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள்(Compact Stars&Preon Stars) (கட்டுரை:62 பாகம்-1)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -1 (மரணம் விடும் அழைப்பு)
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினேழாவது அத்தியாயம்
- ஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..
- முதல் முதலாய்த் தோற்ற நாள்
- மழை
- அதிர்ஷ்டம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது
- நினைவுகளின் தடத்தில் – (34)
- Portnoy’s Complaint – அடையாளமழித்தற் கலை – புத்தக விமர்சனம்
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- நெஞ்சு பொறுக்குதில்லையே…
- மனப் பொழிவு
- குழாய் தின்ற தண்ணீர் துளிகள்…..
- நட்சத்திரவாசி
- ஊழிக் காலம்
- போதிமரங்கள்
- கார்காலம்
- www.மனிதம்.com
- குப்பைப் பூக்கள்..!
