author

செய்தி

செய்தி

கடலை அழிக்கிறது மனிதக்குலம்

நூற்றாண்டு நூற்றாண்டுகளாக மனிதன் உலகத்தின் கடல்களில் வாழும் திமிங்கலம் போன்ற பெரும் மீன்களை அழித்தும், அதிகப்படியாக மீன்பிடித்தும் உலகத்தின் கடல்களை வெற்றிடமாக ஆக்கி வருகிறான். இதுவரை எவ்வளவு அழிந்திருக்கிறது, எவ்வளவு கடல்வளத்தை மீட்டெடுக்க முடியும் என்பது இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை 14 பல்கலைக்கழகங்களும், பல நாட்டு அறிவியல் அமைப்புக்களும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியின் பயனாக, கடல்வளத்தின் அழிவைப்பற்றி வரலாற்று ரீதியாக ஒரு முடிவுக்கு வர முடிகிறது. வால்ரஸ், கடல்பசு, கடல் ஆமைகளும், பெரும் காட் மீன் களும் […]

G8 உச்சிமாநாடு விளக்கம் (கேள்வி பதில்கள்)

G8 உச்சிமாநாடு ஜெனோவா (இத்தாலி) நகரத்தில் 20-22 சூலை அன்று நடைபெற இருக்கிறது. இதற்கு உலகத்தலைவர்களும் இந்த மாநாட்டு எதிர்ப்பாளர்களும் ‘உலகமயமாதலை ‘ விவாதிக்க வருகிறார்கள். G8 உச்சிமாநாடு என்றால் என்ன ? அதற்கு ஏன் எதிர்ப்பு ? G8 மற்றும் G7 என்பது என்ன ? G7 அல்லது ஏழுவரின் குழு என்பது தொழில்மயமான, பணக்கார ஏழு உலகநாடுகளின் கூட்டமைப்பு. இதில் அமெரிக்கா (USA), ஜப்பான், ஜெர்மனி, ஃப்ரான்ஸ், பிரிட்டன், இத்தாலி மற்றும் கனடா ஆகிய […]

க்ரெக் மக்கா (McCaw) செய்த செல்லுலார் தொலைபேசி புரட்சி

இந்தியாவின் தெருவெங்கும் இப்போது செல்லுலார் தொலைபேசிகள். இங்கேயே இப்படியென்றால், மற்ற நாடுகளில் இதன் வீச்சு இன்னும் அதிகம். பின்லாந்தில் சுமார் 90 சதவீதம் பேர் செல்லுலார் தொலைபேசியில்தான் நண்பர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். இந்தப் புரட்சிக்கு யார் காரணம் ? சமீபத்தில் ஓ. கேஸி கார் எழுதிய ‘காற்றிலிருந்து பணம் ‘ என்ற புத்தகத்தைப் படித்தேன். இதில் செல்லுலார் தொலைபேசி என்ற புரட்சிக்குக் காரணமான க்ரெக் மக்கா அவர்களைப்பற்றி விலாவாரியாக வாழ்க்கை வரலாறும் அவரது சாதனைகளைப் பற்றியும் புத்தகம். […]

இந்தவார அறிவியல் செய்திகள் – சூலை 1, 2001

ரஷ்யாவும் ப்ரான்சும் இணைந்து விண்வெளி பயணங்களை மேற்கொள்வது பற்றி பேசி வருகின்றன. ரஷ்யாவின் சோயுஸ் விண்கலங்களை ஃப்ரான்ஸ் நாட்டின் கோரோ விண்மையத்திலிருந்து செலுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்தது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஒரு புதிய துணைக்கோளை விண்ணுக்கு அனுப்பியிருக்கிறது. இந்த துணைக்கோளின் முக்கிய வேலை, இந்த பேரண்டம் துவங்கியபோது இருந்த மகா வெடிப்பு காலத்து பழங்கால ஒளியைச் சேகரிப்பதுதான். சென்ற சனிக்கிழமை கேப் கெனவரால் என்ற விண்மையத்திலிருந்து இது விண்ணுக்கு ஏவப்பட்டது ஜெலட்டின் என்ற பொருள் […]

கவுஊ‘குவ ணஎழக்ஷஊ‘நு தம€ழி ஞூ€பஙுஉக்ஷவுஉவை ஓ‘ைஉமூ‘வ —உ‘ழெநைண ழுசுஞூலு ஓள—சண்வ ழுளூக்ஷஉ‘ ஷகுவ கத்ணஒஏ க€அஙஎணுஙுஉ க்ஷச‘நுநண€உ பஉளெணுஙுŽளூஐ ஸ்ரீநுந ச‘ஒஎகுவ ஹ்ள€ூ பஊந ச‘ சஙெஎணுஙுŽளூஐ —ப‘டூஸ்ரீநு சூவஞ ஸழூமூஐ எகுமூ‘பக்ஷபு ச‘லு எசுஙஎணுஙுŽளூஐ ஜஞூஙூஉமூ‘வ உறூஉ‘டாஉழூ கதூஉலு ணஒஎஙு உஒஎ ர€ச் பதூஙூஉலு ஸஉ€ப ஜை—ச‘ணுழூஉழூ ஸலூஒஎணுஙுŽத்ளூச் வுுஞூச் வுஙுஉஅவ ஸ்யூஙஎணுஙுŽத்ளூஐ ஜஒஊ€ச்€ழனவ எணுஒஎ எணுஒஊப‘டாி —ஞூடானவ ப€ூஒ —ஊ‘டூக்ஷபு‘த் கவுஊசுஒஊ‘லு ணஎழக்ஷஊ‘நு தம€ழி ஞூ€பஙுஉபு‘வஊ‘த்! ===================================================

க்ளோப் & மெயில் பத்திரிக்கையில் போல் பாட் இறந்ததும் ராபர்ட் ஃபுல்போர்ட் எழுதிய கட்டுரை (Robert Fulford ‘s column about Pol Pot G

போல் பாட் இறந்ததும் அடுத்த நாள் நியூயார்க் டைம்ஸ் இதழில் முதல் பத்தியில் கொட்டை எழுத்தில், ‘ஏன் ? தன்னோடு தன் பதிலை எடுத்துக்கொண்டு போகிறார் போல்பாட் ‘ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது. போல்பாட் அவர்களும், அவரது கேமர் ரூஜ் கட்சியும் சுமார் ஒரு பத்துலட்சம் கம்போடிய மக்களை ( அன்றைய மக்கள் தொகையில் ஏழில் ஒரு கம்போடியர்) கொன்று 20 ஆண்டுகள் கழித்து டைம்ஸ் ஏன் கொன்றார்கள் என்ற கேள்விக்கு பதிலை அறிய ஆர்வமாக […]

ர்வாண்டா, ஏன் எப்படி இனப்படுகொலை நடந்தது

ஏப்ரல் 1994இலிருந்து சூன் 1994 வரை இருந்த 100 நாட்களில் சுமார் 8 லட்சம் ர்வாண்டா மக்கள் இறந்தவர்களில் பெரும்பாலானோர் சிறுபான்மை டுட்ஸி ஜாதியைச் சேர்ந்தவர்கள். கொன்றவர்களில் பெரும்பாலானோர் பெரும்பான்மையாக இருக்கும் ஹுடு ஜாதியைச் சேர்ந்தவர்கள். ர்வாண்டா போன்ற வன்முறை நிறைந்த நாட்டுக்குக் கூட இந்த அளவு படுகொலைகளும், அது நடந்த வேகமும் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. ர்வாண்டா ஜனாதிபதியான சுவெனில் ஹாப்யாரிமானா (ஹுடு இனத்தைச் சேர்ந்தவர்) 1994 ஏப்ரலில் விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டு இறந்ததிலிருந்து […]

சொல்லேர் உழவர்

பசுபதி மண்நேய நல்லுரத்தில் மார்க்ஸீய செம்புனல்பாய் பண்ணைப் பயிர்பெற்ற பாராட்டைக் காணீர்! தொராந்தோ இயல்விருது சொல்லேர் உழவர் சுராவின் எழுத்துக்கோர் ஷொட்டு. [ பிரபல எழுத்தாளர் திரு சுந்தர ராமசாமி (சு.ரா) க்குக் கனடாவில் உள்ள டொரான்டோ பல்கலைக் கழகத்தின் தென் ஆசியப் பிரிவும், ‘தமிழ் இலக்கியத் தோட்ட ‘மும் இணைந்து மே 25, 2001 -அன்று ‘இயல் விருது ‘ வழங்கிய நிகழ்ச்சி கண்டு எழுதியது.]

The Hitchhiker ‘s Guide to the Galaxy எழுதிய டோக்ளஸ் ஆடம்ஸ் மறைவு

ஒரு அறிவியல்கதையாகவும், ஒரு கேலிச்சித்திரமாகவும், நகைச்சுவையாக எழுதப்பட்ட The Hitchhiker ‘s Guide to the Galaxy என்ற புத்தகத்தை எழுதிய பிரித்தானியரான டோக்ளஸ் ஆடம்ஸ் தன் 49ஆவது வயதில் சாண்டா பார்பரா என்ற கலிபோர்னிய நகரத்தில் மே 12ஆம் தேதி 2001இல் மாரடைப்பால் மறைந்தார். The Hitchhiker ‘s Guide to the Galaxy என்பது பிரிட்டிஷ் பிராட்கேஸ்டிங் கார்பரேஷனில் தொடராக 1978இல் வெளிவந்தது. கிரகங்கள் கிரகங்களாகப் போகும் இரண்டு பிரயாணிகளின் நகைச்சுவை பயணக்கட்டுரை போல […]

கேள்வி: உலகமயமாதலின் உச்சம் என்ன ?

பதில்: இளவரசி டயானா கேள்வி: எப்படி ? பதில்: ஒரு ஆங்கிலேய இளவரசி ஒரு எகிப்திய காதலனோடு ஃபிரஞ்ச் சுரங்கப்பாதையில் டச்சு எஞ்சின் பொறுத்திய ஜெர்மன் காரை பெல்ஜிய டிரைவர் ஸ்காட்ச் விஸ்கி குடித்துவிட்டு ஓட்ட பின்னால் இத்தாலிய பத்திரிக்கையாளர் துரத்த எங்கோ இடித்துவிட்டு காயப்பட்டு அமெரிக்க டாக்டர் பிரேசிலிய மருந்துகள் கொடுத்து சிகித்சை செய்ய … செத்துப் போகிறாள் ***