இனிக்கும் கழக இலக்கியம்

This entry is part [part not set] of 39 in the series 20101002_Issue

நந்திதா


திண்ணை இணையக் குழுவிற்கும் என் இதயத் தமர்ந்த ஆசான் தமிழ நம்பிக்கும் வணக்கம்

நந்தமிழ் மொழியே நானிலத் துயர்ந்தது
வந்த மொழியெலாம் வளங்கண் டோங்கிட
சொந்த மொழியிது சோர்ந்தது காணீர்
அந்தச் சோர்வினை யான்போக் குவனென
வந்தனன் தமிழ நம்பியாந் திருமகன்
எந்த னிதயம் இறுமாப் பெய்திட
தந்தனன் எமக்குத் தமிழி னிலக்கணம்
எந்தை யகத்தியன் இங்குற் றனனோ
அந்தப் பரணன் அவனோ இவனென
செந்தமிழ் தன்னில் செய்யுள் செய்முறை
சந்தம் சீர்தளை சாற்றுவன் காணீர்
எந்த இடமெனில் ஈகரை யாமே.

என்றும் மாறா அன்புடன்
நந்திதா

Series Navigation

author

நந்திதா

நந்திதா

Similar Posts