நகரத்தார்களும் ஆன்மீகமும்

This entry is part [part not set] of 44 in the series 20100807_Issue

நந்திதா



பெருமதிப்புக்குரியீர்
வணக்கம்
முனைவர் திரு மு பழனியப்பன் அவர்கள் அளித்த கட்டுரை மனமகிழ்வளிக்கிறது, நான் நகரத்தார் இனத்தைச் சார்ந்தவள் இல்லை. ஆயினும் அவர்களைப் பற்றிச் சிறிதளவு அறிந்தவள்,
நகரத்தார் குடும்பங்களில் ஒரு வழக்கம் இருந்ததாக எனது பெற்றோர்கள் கூறி இருக்கின்றனர், அது வருமாறு, நகரத்தார் தங்கள் குடும்பப் பெண்டிருக்கு ஏதாவது நகை வாங்குவதாக இருந்தால் அது போன்ற ஒரு நகையைத் தாங்கள் வணங்கும் தெய்வத்திற்கு அளித்து விட்டுத்தான் வாங்குவார்கள் என்பதாகும்
2. அவர்களால் உபகாரச் சம்பளம் பெற்றுப் படித்துப் பட்டம் பெற்றவர்கள் ஏராளமானவர்கள்,
3. வெயில் காலத்தில் அவர்கள் வீதி தோறும் தண்ணீர்ப் பந்தல்கள் திறந்து நீர் மோர் நல்ல குளிர்ந்த நீர் முதலியவற்றை இலவசமாக அளித்து வருதலைக் கடனாகக் கொண்டிருந்தார்கள் என்பனவாகும்
கட்டுரையில் வயிநகரம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது, அது வயிநாகரம் என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன், கட்டுரை ஆசிரியர் விளக்கம் வேண்டுகிறேன்,
அன்புடன்
நந்திதா

Series Navigation

author

நந்திதா

நந்திதா

Similar Posts