புறநானூற்றில் மனித நேய கொள்கைகள்- பெருஞ்சோறு கொடுத்தது குறித்து…

This entry is part [part not set] of 24 in the series 20100326_Issue

ப்ரவாஹன்.


புறநானூற்றில் மனித நேய கொள்கைகள் By முனைவர் துரை. மணிகண்டன் கட்டுரை கண்டேன்..

இதில் முதல் எடுத்துக்காட்டாக.. பெருஞ்சோறு கொடுத்தது குறித்து… ஏதோ பாரதப் போரில் இரு தரப்பாருக்கும் சேரமான் உதியன் சோறு போட்டது போல இம்முனைவர் எழுதியிருக்கிறார்..

முற்றிலும் அரைகுறைப் புரிதலுடன்..சொல்லின் நேர்ப்பொருளில் இதை எடுத்துக்கொண்டுள்ளார் க. ஆ. (கட்டுரை ஆசிரியர்)

உண்மையி.. இப் பெருஞ்சோறு என்பது மூதாதையர்களுக்கு அவர்களின் நினைவு நாளில் கொடுக்கப்படும் பிண்டமாகும்…

இதைத்தான் தொல்காப்பியம் (புறத்திணையியல் 7 ஆம் நூறபா)

“பிண்டம் மேயப் பெருஞ்சோற்று நிலையும்” என்கிறது..

“பிண்டத்திரளையும் பேய்க்கிட்ட நீர்ச்சோறும்” என்று பெரியாழ்வார் சொல்வதும் இதுதான்… இந்தப் பிண்டத்தைப் பெருஞ்சோறு என்று புறநானூறு குறிப்பிட்டுள்ளதேயன்றி.. ஏதோ.. சேரமான் உதியன் கேட்டரிங் காண்டிராக் எடுத்ததைப் போல முனைவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள் எனில்… அவரது மாணவர் நிலையை எண்ணி பரிதாபம் கொள்வதைத் தவிர வேறென் செய?

ப்ரவாஹன்.

Series Navigation

author

தாரிக் அலி (தமிழில்: ப்ரவாஹன்)

தாரிக் அலி (தமிழில்: ப்ரவாஹன்)

Similar Posts