நாள்: சனிக்கிழமை (13-02-2010)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)
முதல் பகுதி: (3 PM-4 PM) – இலக்கியம்
இந்த மாதம் இலக்கியப் பகுதியில் நாடகவியலாளர் திரு. வெளி ரெங்கராஜன் அவர்கள் கலந்துக் கொள்கிறார். தமிழ் நாடகத் துறை வளர்ச்சி மற்றும், அதன் வரலாறு குறித்து பேசவிருக்கிறார்.
இரண்டாம் பகுதி: (4.30 PM – 5.30 PM) – குறும்பட வழிகாட்டல்
இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட இயக்குனர், திரு. பண்டி சரோஜ்குமார் அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் இயக்கம் உள்ளிட்ட பல்வேறுபட்ட தனது அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறார். இயக்கம் குறித்தான நுணுக்கங்களையும் வாசகர்களுக்கு பயிற்றுவிப்பார். வாசகர்களும் இயக்கம் மற்றும் இதத் தொழில்நுட்பத் துறை சார்ந்த தங்கள் ஐயங்களை அவரிடம் கேட்டு விடைப் பெற்றுக் கொள்ளலாம்.
பண்டி சரோஜ்குமார் அவர்கள் சமீபத்தில், கிஷோர் நடித்து வெளியான போர்க்களம் திரைப்படத்தின் இயக்குனர் ஆவார்.
மூன்றாம் பகுதி: (5.30 PM – 6.30 PM ) – குறும்படங்கள் திரையிடல்
இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.
குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு
சுவடுகள் ரமேஷ் 08 நிமிடங்கள்
நடந்த கதை பொன்.சுதா
17 நிமிடங்கள்
மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:
இந்தப் பகுதிக்கு இந்த மாதம் திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு. விஜய் மில்டன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.
விஜய் மில்டன் அவர்கள் "சாமுராய்", "காதல்", "காதலில் விழுந்தேன்" ஆகியத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஆவார். மேலும், "அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது" திரைப்படத்தின் இயக்குனர் ஆவார்.
இந்த மாதம் முதல் மூன்று தமிழ்க் குறும்படங்களுடன் ஒரு சர்வதேச குறும்படமும் திரையிடப்படும். எப்படி சர்வதேச அளவில் குறும்படங்கள் வடிவமைக்கப்படுகின்றன என்பதை, அனைவரும் குறிப்பாக கிராமப்புறத்தில் இருந்து வரும் ஆர்வலர்கள் தெரிந்துக்கொள்ள இந்தக் குறும்படங்கள் உதவி புரியும். அந்த வகையில் இந்த மாதம் திரையிடப்படும் சர்வதேச குறும்படம், Adam Davidson இயக்கிய "The Lunch Date". இந்தக் குறும்படம் 1991 ஆம் வருடத்தின் சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதினை வென்ற குறும்படமாகும்.
மேலும் இந்த மாதம் முதல் அரங்கில் குறும்பட விற்பனையும் நடைபெறும். அனைவரும் குறும்பட இயக்குனர்களை / தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்த குறும்படங்களை விலைக்கு வாங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.
மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -4 பாகம் -1
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) கவிதை -23 பாகம் -1 ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம்
- சீதாம்மாவின் குறிப்பேடு ஜெயகாந்தன் -1
- மொழிவது சுகம்: ஒளியும் நிழலும்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -4
- ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்
- ஒளிமழை
- நிரப்பிச் செல்லும் வாழ்க்கை அசோகமித்திரனின் “நினைவோடை”
- ஹெச்.ஜி.ரசூல் எழுதிய புதிய திறனாய்வு பின்நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாம்பிரதிகள்
- பன்முகத் தமிழறிஞர் ஈழத்துப்பூராடனார்
- முஹம்மது யூனூஸ் அவர்களுக்குப் பாராட்டு விழாவும் நூல் வெளியீட்டு விழாவும்
- வேலிகளைத் தாண்டும் வேர்கள் -கவிதை நூல் வெளியீட்டு விழா.
- எழுத்தாளர் எஸ். அர்ஷியாவின் ‘ஏழரைப் பங்காளி வகையறா’ நாவல் வெளியீட்டு விழா
- சிதறிய கவிதைகள்
- மற்றுமொரு மாலைவேளைக்கான காத்திருப்பு
- முள்பாதை 16
- கலியாணம் பண்ணிக்கிட்டா……
- யார் கூப்டதுங்க…?
- கலைஞர் தாக்கரே ஜெயராம் – இல்லாத வெளிக்குழுவும் எப்போதும் நம் குழுவும்
- கடைபிடி; முதல் படி!
- மார்க்ஸை தலை கீழாக நிற்க வைத்த போலந்தில் – ஒரு விலாங்கு மீன்
- முன்னறிவிப்பின் பழுத்த மஞ்சள் நிறம்..!
- இடர்மழை
- வேத வனம் -விருடசம் 72
- ஊமை மொழிகள்..
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 17 வது குறும்பட வட்டம். (பதிவு எண்: 475/2009)