அருண் & குணா
தொடக்க விழா: சனிக்கிழமை (10-10-2009)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)
அன்பார்ந்த வாசகர்களே.
தமிழ் ஸ்டுடியோ.காம் தொடர்ந்து நடத்தி வரும் குறும்பட வட்டம் எனும் மாதந்திர நிகழ்வு தொடர்ந்து பன்னிரண்டு மாதங்கள் நடைபெற்றுள்ளது. சென்ற அக்டோபர் மாதம் கடற்கரையில் முப்பது ஆர்வலர்களுடன் தொடங்கிய இந்த இந்த வட்டம் இன்று சற்றே விரிவடைந்து நானூற்றி ஐம்பது உறுப்பினர்கள், முப்பது சிறப்பு அழைப்பாளர்கள், முப்பத்தி மூன்று குறும்படங்கள் திரையிடல், நான்கு குறும்படங்கள் தயாரிக்க உதவி, என தன் கிளை விரித்து பரவியுள்ளது. இந்த வெற்றிக்கு வாசகர்களாகிய உங்கள் ஆதரவே முதன்மையான காரணம்.
முன்னரே நாம் சொன்னது போன்று பன்னிரண்டு குறும்பட வட்டங்கள் சோதனை அடிப்படையில் நடைபெற்று வந்தது. இனி குறும்பட வட்டம் புதுப் பொலிவுடன் நடைபெற உள்ளது. தமிழ் நாடு அரசின் திரைப்பட இயக்க சட்டத்தின் கீழ், திரைப்பட இயக்கமாக பதிவு பெற்ற ஓர் அமைப்பாக தொடர்ந்து இயங்க உள்ளது.
எதிர் வரும் சனிக்கிழமை (10/10/09) தமிழ் ஸ்டுடியோ – குறும்பட வட்டத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த தொடக்க விழாவிற்கு, திரைப்பட இயக்குனர் திரு. அறிவழகன் (ஈரம் திரைப்பட இயக்குனர்) தலைமை தாங்க, திரைப்பட இயக்குனர் திருமிகு. நந்தினி (திரு திரு துறு துறு திரைப்பட இயக்குனர்) அவர்கள் தொடங்கி வைக்கிறார்.
திருமிகு. சிவகாமி ஐ. ஏ.எஸ். மற்றும் பத்திரிக்கையாளர் திரு. மாலன் அவர்கள் சிறப்புரை ஆற்ற, திரைப்பட பாடலாசிரியர் திரு. நா. முத்துக்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்குவார்.
மேலும் இந்த தொடக்க விழாவில் இதுவரை குறும்பட வட்டத்தில் திரையிடப்பட்ட குறும்படங்களின் சிறந்த மூன்று மற்றும் ஒரு சிறப்பு குறும்படம் திரையிடப்பட்டு அதற்கான சான்றிதலும் வழங்கப்படும்.
இந்த விழாவிற்கான அழைப்பிதழ் இணைக்கப்பட்டிருக்கிறது. விழாவிற்கு உங்கள் அனைவரையும் இனிதே வரவேற்கிறோம்.
மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.
அழைப்பிதழ்
—————————
அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம்
www.thamizhstudio.com
9840698236, 9894422268
—————————
—
அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம்
www.thamizhstudio.com
9840698236, 9894422268
- இது(ரு) வேறு வாழ்க்கை
- 15 வது கவிஞர் சிற்பி இலக்கிய விருது 2010
- மலேசியாவின் கலை இலக்கிய இதழ் ‘வல்லினம்’.
- தமிழ்ஸ்டுடியோ குறும்படவட்டம் (பதிவு எண்: 475/2009)-தொடக்க விழா
- வடமராட்சி இலக்கிய நிகழ்வுகள்
- பாடிப்பறந்த ‘வானம்பாடி’ கவிஞர் பாலா
- சாகித்திய அகாதமி: ரஸ்யாவில் உலகப்புத்தகக்கண்காட்சியில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன்
- நினைவுகளின் தடத்தில் – (35)
- பிரான்சிஸ் கிருபா கவிதைகள் – ஒரு பார்வை
- அன்புள்ள ஆசிரியருக்கு
- அறிவியலும் அரையவியலும் -2
- உயிரின் துடிப்பு
- தனிமையிலிருந்து தப்பித்தல்
- உள்வெளிப்பயணங்கள்
- வேத வனம் விருட்சம் 54
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -3
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 55 << சொந்த இல்லம் நோக்கி >>
- தொடரும்
- என் வரையில்…
- உன்னைப்போல் ஒருவன்
- நவீனத்துவம் – பின்நவீனத்துவம் கேரள மாநிலத்தில் தேசிய கருத்தரங்கம்
- குறுக்கெழுத்துப் புதிர் – அக்டோபர் 2009
- அடைக்கலப் பாம்புகள்
- ஆகு பெயர்
- அறிவியல் புனைகதை-9: நித்யகன்னி ரூபவாஹினி
- நினைவுகளின் பிடியில் ..
- மழைச்சாரல்…..
- தெய்வம் நீ என்றுணர்
- ஒரு புகைப்படத்தைப் பொருள்பெயர்த்தல்
- அந்த ஏழுகுண்டுகள்…..(1)
- தினேசுவரி கவிதைகள்
- தொடர்பில்லாதவை
- அகில நாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கி மனிதரில்லா ஜப்பான் விண்வெளிப் பளு தூக்கி !
- முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ (1564-1642)
- பாத்திரத் தேர்வு
- சேரா துணை..
- சாயங்கால அறை
- புரிய இயலாத உனது அந்தரங்கம்
- சுழற்றி போட்ட சோழிகள்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -2
- படம்