பி.ஏ.ஷேக் தாவூத்
சமூக அக்கறையுடன் எழுதுவதாக சொல்லிக் கொள்ளும் நண்பர் சின்னக்கருப்பனின் கட்டுரையிலும், அதிலிருந்து நான் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலிலும் சமூக அக்கறை இல்லாததாலேயே மீண்டும் எதிர்வினையாற்ற வேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டிருக்கிறேன். இந்தியாவில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர் அதாவது இருவேளை உணவைக் கூட வயிறார உண்ணும் நிலையில் இல்லாதவர்கள். நீங்கள் குறிப்பிடும் வறுமை இவர்களை எல்லாம் திருடுவதிலோ அல்லது விபச்சாரத்திலோ தள்ளிவிடவில்லை. மாறாக கடுமையான உடலுழைப்பை கொடுத்து தம் பசியை போக்கி கொள்ளுகின்றனர். எவர்களையும் சுரண்டி தின்னாமல் வாழும் இவர்கள் எம்முடைய பார்வையில் அம்பானிகள் டாடாக்களை விட ஆயிரம் மடங்கு மதிப்பு மிக்கவர்களும் கூட. இவர்களில் 100 ல் ஒரு பகுதியினர் கூட இத்தகைய ஈனச்செயலான திருடுவதையோ அல்லது விபச்சாரத்தையோ தங்களது பிழைப்பாக எடுக்கவில்லை. திருட்டையும் விபச்சாரத்தையும் செய்பவர்கள் உடலுழைப்பை செய்யாமல் சொகுசாக வாழவேண்டும் என்ற குறுகிய மனநிலையில் இதை செய்கிறார்கள் என்பது தான் நிதர்சனம். பசிக்காக தான் இதை செய்கிறார்கள் என்று ஒரு வாதத்திற்காக வைத்துகொண்டாலும் இத்தகைய இழிசெயல்களை செய்வதற்கு பதிலாக பிச்சையெடுத்து பசியாற்றிக் கொள்ளலாமே. திருட்டு, விபச்சாரத்தை பற்றி திரைப்படத்தில் காண்பிப்பதை மட்டுமே நிஜமென்று நம்பியிராமல் நிஜ உலகத்தின் நிலவரங்களையும் சின்னக் கருப்பன் அறிந்து கொள்ள வேண்டும்.
திருட வருகின்ற திருடனிடம் கூட மனிதநேயம் பார்க்கச் சொல்லும் சின்னக் கருப்பன் அவர்களே, நீங்கள் பேருந்தில் செல்லும்போது உங்கள் பையிலிருந்து ஒரு ஆயிரம் ரூபாயை எடுக்கும் ஜேப்படி திருடனிடம் உனக்கு 500 ரூபாய் எனக்கு 500 ரூபாய் வைத்து கொள்வோம் என்றா (ஜெயகாந்தன் பாணியில் ) சொல்வீர்கள்? அல்லது திருடர்களைக் கூட மனிதநேயத்துடன் பார்ப்பதால் நீங்கள் வசிக்கும் இல்லம், கதவுகள் இல்லாமலா இருக்கின்றன? அல்லது கதவுகள் இருந்தாலும் தாழிடப்படாமலா இருக்கின்றன?
இன்றைக்கு திருட்டுக்கும் விபச்சாரத்திற்கும் நம்முடைய நாட்டில் கொடுப்பது குறைந்தபட்ச தண்டனைகளே. அதனால்தான் 25 முறை 50 முறை சிறை சென்றவர் என்றெல்லாம் பலரால் சாதனை செய்ய முடிகிறது. நம் நாட்டில் குற்றங்கள் பெருகி கொண்டே வருகிறதேயொழிய குறைந்தபாடில்லை. ஆனால் நீங்கள் சொல்கிற கையை வெட்டுகிற சட்டங்கள் உள்ள நாட்டில் திருட்டுகள் மிகவும் குறைவு என்ற சுடும் உண்மையை நீங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
சமூக அக்கறையுள்ள ஒருவன் கடமையுணர்ச்சியுடன் கூடிய மனிதநேயத்தைத்தான் வெளிப்படுத்த முடியும். உதாரணமாக எல்லையில் நாட்டை காக்கும் பொருட்டு அந்நிய நாட்டு வீரர்களுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு அவர்களின் உயிரை பறிக்கும் அதே இராணுவ வீரன் தான் நாட்டில் பெருவெள்ளம் ஏற்படுகின்றபோது மக்களின் உயிரை தம்முயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றுகிறான். மனித உயிர்களை மாய்க்கிறார்கள் என்பதற்காக இராணுவ வீரர்களுக்கெல்லாம் மனிதநேயமே இல்லை என்று சின்னக் கருப்பன் சொல்லுவாரா? இத்தகைய சித்தாந்த குழப்பத்திலிருந்து சின்னக் கருப்பன் போன்றவர்கள் விடுபட வேண்டும் என்பதற்காகவே நாம் இதை எழுதுகிறோம்.
இந்திய தேசத்தின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்து இருப்பதற்கு அடிப்படை காரணம் இந்த நாட்டில் பேணப்படும் தனிமனித ஒழுக்கங்களே. அந்த தனிமனித ஒழுக்கத்தை தகர்த்து தரைமட்டமாக்க எவர் முயற்சித்தாலும் அதற்கு எதிராக களம் காண்பது தனிமனித ஒழுக்கத்தை பேணும் ஒவ்வொருவருடைய கடமையாகவே நாம் கருதுகிறோம். சிலருக்கு மனரீதியான சில குறைபாடுகள் இருக்கும். உதாரணமாக பார்க்கும் பல பெண்களை எல்லாம் காமக் கண்கொண்டு பார்த்து அவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள நினைப்பது அதில் ஒருவகை என்பது உளவியல் நிபுணர்களின் கருத்து. இதைப்போன்றதொரு குறைபாடுதான் ஓரின சேர்க்கையை விரும்பும் மனிதர்களின் உள்ளத்திலும் இருக்கிறது. அதாவது தன்னினத்தை சேர்ந்த ஆணுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள நினைக்கும் மற்றொரு ஆணின் மனது எண்ணுவதும் இதில் ஒரு வகை. இதுவும் ஒரு உளவியல் குறைபாடு தான். ஓரின சேர்க்கையை ஆதரிக்கும் நண்பர் சின்னக் கருப்பன் முன்னதையும் ஆதரிப்பாரா? பிறன்மனை நோக்காமை பேராண்மை என்றல்லவா நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதற்கும் அனுமதி கேட்டு ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டார். மனம் ஒத்துப்போய் இருவர் எது செய்தாலும் குற்றமில்லை என்பது இவர்களின் வாதம். போதை பொருள் விற்பவனும் போதை பொருளை உபயோகிப்பவனும் மனம் ஒத்துப்போய் தானே செய்கிறார்கள். இவர்களும் தங்களுடைய செயல்களுக்கு சட்டரீதியான அனுமதி கேட்டால் இந்த நாடு தாங்குமா?
“ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” இது தனிமனித ஒழுக்கத்திற்கு இந்த நிலம் கொடுக்கும் உச்சபட்ச மரியாதை. இங்கு உயிரை விட தனிமனித ஒழுக்கம் உயர்வானது. இத்தகைய தனிமனித ஒழுக்கத்தை தகர்க்கும் ஒரு செயலான ஓரின சேர்க்கை கண்டிக்கத்தக்கது. அதை ஆதரிப்பவர்கள் ஆட்சியாளர்களேயானாலும் கண்டிக்கத்தக்கவர்களே.
– பி.ஏ.ஷேக் தாவூத்
- கடித விமர்சனம் – 7 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)
- நாஞ்சில் நாடன் படைப்புகளில் பெண்கள்
- ஓவியர் ஏ.பி. சந்தானராஜ் (1932 – 25.5.2009)
- தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல்- 2
- தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல் – 1
- துரோகிக்கு மிகவும் நன்றி
- வாஷிங்டன் டிசியில் ஜெயமோகன் மாபெரும் பொதுக்கூட்டம்
- சங்க இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள மரபு பாலியல்
- வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்
- நிலவிலிருந்து செவ்வாய்ச் சென்று மீளும் நாசாவின் ஓரியன் பயணத் திட்டம் ! (கட்டுரை : 1)
- பால்டிமோர் கனவுகள்
- இந்திராபார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா
- ” புறநானூற்றில் கைக்கிளை “
- நண்பர் சின்னக்கருப்பனுக்கு நட்புடன் சில கேள்விகள்
- இஸ்லாம் குறித்த நேசக்குமாரின் கட்டுரை: வஹ்ஹாபியிடம் என் சில கேள்விகள், மேலும் நேசக்குமாருக்கு என் சில விளக்கங்கள்
- ஒரு பதிவை முழுமை செய்கிறேன்
- மழை கோலம்
- வேத வனம் விருட்சம்- 43
- உதிரிகள் நான்கு
- ஜாதி மல்லி
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிமூன்று
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்
- விரியும் வலை
- காதலிக்க ஒரு விண்ணப்பம்
- சோறு
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திஐந்து
- அரசியல் சூறாவளியால் அதிர்ந்த இங்கிலாந்து
- மேம்பால இடிதல்களும் மேல்பூச்சு நடவடிக்கைகளும்
- அடிவானத்திலிருந்து நகரத்திற்கு
- குதிரைகள் கடந்து செல்லுதல்
- ஆரோக்கியத்தின் பாடல்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 46 எப்போது விளக்கொளி மீளும் ?
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஒரு காதலனின் அழைப்பு கவிதை -14 பாகம் -1
- அலைதலின் பின்னான குற்றச்சாட்டு