நண்பர் சின்னக்கருப்பனுக்கு ஒரு கேள்வி?

This entry is part [part not set] of 39 in the series 20090709_Issue

பி.ஏ ஷேக் தாவூது


நீங்கள் ஓரின சேர்க்கைக்கு ஆதரவளிப்பதை பற்றியெல்லாம் எமக்கு எந்த கவலையுமில்லை.
ஆனால் நீங்கள் எடுத்த வைத்த ஒரு (குப்பை) வாதத்தை
(/* மதரீதியில், என்னுடைய மத புத்தகத்தில் என் கடவுள் இப்படி சொல்லியிருக்கிறார் ஆகையால், ஓரினப்பாலுறவை தடை செய்யவேண்டும் என்று பேசுபவர்கள், இந்த மனிதர்களை படைத்ததாக இவர்கள் நம்பும் அவர்களது கடவுள், ஏன் இந்த மனிதர்களை இப்படி படைத்தார் என்பதையும் தாங்களே கேட்டுக்கொள்ளவேண்டும். இவர்களுடைய கருத்தியலிலேயே இருக்கும் இந்த முரண்பாடு இவர்களுக்கு ஒளி காட்டட்டும். */ ) விபச்சாரிகளும், திருடர்களும், குடிகாரர்களும் தங்களுக்கான உரிமையாக இதே வாதத்தை எடுத்து வைக்கலாம் அல்லவா? அவர்களையும் கடவுள்தானே படைத்திருக்கிறார் இந்த குணநலன்களோடு. (ஒருவேளை விபச்சாரிகளையும் , திருடர்களையும் , குடிகாரர்களையும் அரவணைத்து ஆதரித்தது எம்முடைய கலாச்சாரம் என்று அடுத்த பாட்டு பாடினாலும் அதைப்பற்றியும் எமக்கு கவலயில்லை. )


P.A.Shaik Dawood.
(உதிரம் கொடுத்து உயிர் காப்போம்.
மக்களிடையே மனிதநேயம் வளர்ப்போம்.)
pasdawood@gmail.com

Series Navigation

author

பி.ஏ ஷேக் தாவூது

பி.ஏ ஷேக் தாவூது

Similar Posts