கடிதம்

This entry is part [part not set] of 35 in the series 20080731_Issue

தேவமைந்தன்


அன்புள்ள திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம். வாழ்த்துகள்.
திண்ணை 24/07/2008 கண்டேன். மேன்மேலும் பொலிவு பெற்று வரும் திண்ணை.காம் வலையேட்டில் தொடர்ந்து எழுதுவதைக் காட்டிலும், ஒரு கிழமை விடாமல், எப்படியாவது இணையமலசும் நடுவங்களுக்குச் சென்று நம் ஏட்டை – அதன் படைப்புகளை வாசித்து விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அந்த வகையில் இந்தக் கிழமையும் வெளிவந்துள்ள ஆபிரகாம் கோவூர் தொடர்பான நண்பர் தமிழநம்பி அவர்களின் கட்டுரையையும் மதுமிதா அவர்களின் நேர்காணலையும் ‘கண்ணதாசன் இரசித்த கம்பன்’ என்னும் நண்பர் பெஞ்சமின் இலெபோ அவர்களின் கட்டுரையையும் “வெறுப்பும் வேதனையும் – மார்க்கெரித் துராஸின் ‘காதலன்” என்னும் நண்பர் பாவண்ணன் அவர்களின் ஆய்வுரையையும்(இது வாசிக்கப்பெற்ற நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன்; ஆனால் இருந்து கேட்க வாய்ப்பில்லாமல் போனது) தொடர்ந்து வரும் நம் ஜெயபாரதன் ஐயா அவர்களின் நாடக மொழியாக்கத்தையும் அறிவியலாக்கத்தையும் மற்ற நம் திண்ணை நண்பர்களின் கருத்தாக்கங்களையும் வாசித்து இன்புற்றேன்.
அன்புடன்,
தேவமைந்தன்


passoupathi@sify.com

Series Navigation

author

தேவமைந்தன்

தேவமைந்தன்

Similar Posts