தாரெ ஜமீன் பர் (தரையில் நட்சத்திரங்கள் : அமீர்கானின் திரைப்படம் ) ::: ஓர் அற்புத அனுபவம்

author
0 minutes, 0 seconds Read
This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

நீ”தீ”


நேற்று தான் இந்த திரைப்படத்தை பார்த்தேன். நள்ளிரவு ஒரு மணிக்குதான் பாதிபடம் முடிந்திருந்தது. அதுவரை அமிர்கான் வரவில்லை. சரி இனி சனி ஞாயிறு இரண்டு நாள் ஊர் சுற்றிவிட்டு திங்கள் அன்று தான் வந்து மீதியை பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கும்பொழுது திரையில் அமிர்கானின் வருகை. கோமாளி வேஷத்துடன் அதன்பின் தூங்க மனம் இடம் கொடுக்கவில்லை. முழுமையாக முடித்தேன். இரவு 2மணியாகிவிட்டது.
மிகவும் அருமையான படம்.
திரையிலே அல்லது சிடியிலோ பாருங்கள்.
குழந்தைகளை விட பெரியவர்கள்தான் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் .
1. இந்த திரைப்படத்தை பற்றிய திண்ணை கட்டுரை ( கோவிந்த் எழுதியது )படத்தை பார்த்த பின்தான் நான் வாசித்தேன்.
2. அதே போல 17.01.2008 அன்று நான் ஒரு கவிதை எழுதினேன். அதில் ஒரு வரி இப்படி வரும்.

ஃஃஃஃராமசாமி வாத்தியார் போன்று யாரேனும்
புரிதலுக்கான மொழியை சுட்டிக்காட்டியும் ஃஃஃஃ
இந்த திரைப்படத்தை பார்த்துமுடித்தபோழுது என்முன் வந்து சென்றார். ராமாசாமி வாத்தியார்.


hsnlife@yahoo.com

Series Navigation

Similar Posts