பேராசிரியர் அம்மன்கிளி முருகதாசு அவர்களின் ஒப்பாரிப்பாடல்கள் குறித்த கட்டுரை

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

lமுனைவர் மு.இளங்கோவன்


lபேரன்புடையீர் ஐயா வணக்கம்.
திண்ணை கண்டேன்.மகிழ்ச்சி.
பேராசிரியர் அம்மன்கிளி முருகதாசு அவர்களின் ஒப்பாரிப்பாடல்கள் குறித்த கட்டுரை சிறப்பு.ஈழத்தில் வழக்கில் உள்ள ஒப்பாரிப்பாடல்களை நன்கு அறிமுகம் செய்துள்ளார்.

நாட்டுப்புறப்பாடல்கள் என்ற வகையில் மக்களிடம் அறிமுகமாகத் தக்க காதல்,பக்தி சார்ந்த பாடல்களே இதுவரை நாட்டுப்புறப்பாடகர்களால் திரைப்படம், வானொலி,தொலைக்காட்சிகளில் பாடப்பட்டுள்ளனவே தவிர உழைக்கும் பெரும்பான்மை
மக்களின் கலைவெளிப்பாடுகளான நடவுப்பாடல்கள்,ஒப்பாரிப்பாடல்கள் சரியாக இன்னும் அறிமுகம் ஆகாமல் உள்ளன. இப்பாடல்களைப்பதிவு செய்தபொழுது பல்வேறு இலக்கண, இலக்கியக்கூறுகள்,வடிவங்கள் உள்ளமையை அறியமுடிகின்றது.

சிங்கப்பூரிலும்,மலேசியாவிலும் நாட்டுப்புறப்பாடல்களின் துணையோடு நான் தமிழ் இலக்கண வகுப்புகளை நடத்தியபொழுது அனைவரும் வியந்தனர். நம் மரபும் தமிழ் இலக்கணக்கூறுபாடுகளும் பொதிந்துள்ள ஒப்பாரிப்பாடல்கள் தமிழகத்தில் மட்டுமல்லாமல் தமிழர்கள் பரவிவாழும் இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் உள்ளமை ஒப்பீட்டு ஆய்வுக்குத்துணை செய்யும்.
கட்டுரையாளர்க்குப் பாராட்டு.

முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

Series Navigation

author

முனைவர் மு.இளங்கோவன்

முனைவர் மு.இளங்கோவன்

Similar Posts