கடிதம்

This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue

ஜடாயு


அன்புள்ள முத்துலிங்கம் ஐயா,

49-வது அகலக் கோடு என்ற அந்தக் கதை அருமையாக இருந்தது.. உங்கள் ஒவ்வொரு கதையும், கடைசி வரியைப் படிக்கையில் ஒரு பெருமூச்சு, ஒரு குறுநகை அல்லது ஒரு விகசிப்பை வரவழைக்கும் – இதுவும் விதிவிலக்கல்ல..

சில வருடங்கள் முன் இந்தக் கோடு வழியே போயிருக்கிறேன்.. இந்தக் கதையில் வருவது போன்ற எந்த எண்ணங்களும், உணர்ச்சிகளும் இல்லாமல், ஒரு சராசரி டூரிஸ்டாக மாலை நேர நயாகராவை ரசித்தபடி.. ஆனால் ஒரு தேர்ந்த கதைசொல்லியான நீங்கள் அந்தக் கோட்டின் வழி ஒரு உலகத்தையே திறந்து காட்டுகிறீர்கள்… அற்புதம் சார்!

“அது அங்கே இருக்கிறது”” என்ற கட்டுரையும் அருமை.. அறிவுத்தேடல் என்பதும், இயற்கையின் ரகசியங்களை ஓயாமல் தேடுவதும் மானுடன் என்ற உயிரியின் இயல்பு என்று அழகாக சொல்லியிருக்கிறீர்கள். “ஞானத்தை விடவும் புனிதமான பொருள் ஒன்றை இங்கு நாம் அறியவில்லை” (ந ஹி ஞானேன ஸத்ருசம் பவித்ரம் இஹ வித்யதே) என்ற கீதை வரிகளை அந்தக் கட்டுரை நினைவூட்டியது.

அன்புடன்,
ஜடாயு


jataayu.b@gmail.com

Series Navigation

author

ஜடாயு

ஜடாயு

Similar Posts