கோட்டை பிரபு
நாட்டின் வளர்ச்சியில் நல் அமைப்புகளின் சேவை
�கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையில் பீடுஉடையது இல்�. [குறள்]
எனும் குறளுக்கிணங்க செயல்பட்டுவருகிறது. தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம்,நெம்மக்கோட்டையில் அமைந்துள்ள நல் இனிய இயக்கம் எனும் அமைப்பு.
கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக ஊரின் வளர்ச்சிக்கும், தனிப்பட்ட குடும்ப நிகழ்ச்சிகளின் வெற்றிக்கும் ,சீரிய பணியாற்றி வருகிறது இவ்வியக்கம். அரசியல் சார்பற்ற, மக்கள் நலனை மட்டுமே மனதில் நிறுத்தி தனது கட்டுக்கோப்பான உறுப்பினர்களின் மகத்தான சேவையில் இன்றும் மிளிர்ந்து நிற்கிறது.
நல் இனிய இயக்கம், ஊரின் அடிப்படைத் தேவைகளுக்காக பணி சார்ந்த அதிகாரிகளிடம் மனுக்கொடுத்தல், கோவில் திருவிழாக்களில் அனைத்துவித பணியினை ஏற்று சிறப்புற முடித்தல் மற்றும் ஊரார் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவர்களின் சுமை குறையும்வண்ணம் அனைவரும் இணைந்து செயலாற்றுதல், அன்னதான நிகழ்ச்சிகள், விழாக்காலங்களில் சிறுவர் ,பெரியவர் என அனைத்து தரப்பினரும் கலந்து இன்புறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் போன்ற அவர்கள் மேற்கொள்ளும் பணிகள் எண்ணிலடங்கா…,
இவ்வியக்கம் ஆரம்பித்த காலந்தொட்டே இதன் தலைவராக விளங்கிவரும் M.பிரகாசம் அவர்களும், இயக்கத்தின் ஆற்றல் மிகு செயலாளர் முருகேசன் அவர்களும், இறைப் பணியில் தம்மை இடையறாது ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் சினிவாசன் அவர்களும் மற்றும் இதன் ஒவ்வொரு உறுப்பினரின் தன்னலமற்ற சேவையினால் இப்பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளனர் என்று சொன்னால் அது மிகையல்ல,.
இவ்வியக்கத்தின் மக்கள் சேவையினைப் பாராட்டி ஆலங்குடி ரோட்டரி கிளப் பலமுறை
நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பு செய்துள்ளது.
�நாட்டின் வளர்ச்சிக்கு நல் அரசுகள் தேவை
ஊரின் வளர்ச்சிக்கு நல் அமைப்புகள் தேவை�
என்பதை உணர்ந்து செயலாற்றிவரும் நல் இனிய இயக்கத்தின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களைக் கூறிக்கொள்வது..,
என்றும் அன்புடன்,
கோட்டை பிரபு
- கால நதிக்கரையில்……(நாவல்)-19
- நாங்கோரி என்ற உறுப்பினர்
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 3
- கவிதைகள்
- பூரண சுதந்திரம் ?
- காதல் நாற்பது – 34 உன்னை நாடும் என்னிதயம் !
- Letter sent to The Indian Embassy Bangkok Thailand
- தியேட்டர் லாப் – சங்கீதப் பைத்தியம் – பம்மல் சம்பந்த முதலியார் மேடையேற்றம்
- பிழைதிருத்தம் 12. – நகர்புறம் – நகர்ப்புறம்
- சிங்கையில் இந்தியச் சுதந்திர தினவிழா
- அமரர் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை (சு.வே) அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு
- ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு நீர் வெளியேற்றமும் ! (ஜூலை 17, 2007)
- புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம்,நெம்மக்கோட்டையில் நல் இனிய இயக்கம் எனும் அமைப்பு.
- மருத்துவர் ராமதாஸ் அவர்களின் முயற்சிகள் – பொய்க்கப்போகிற நம்பிக்கை எரிநட்சத்திரங்கள்
- இலை போட்டாச்சு – 33 அக்காரவடிசில்
- தமிழ்த்தேசியப் பாவலர் பெருஞ்சித்திரனார் (10.03.1933 – 11.06.1995)
- புரட்சியும், சிதைவும்
- சுவாரஸியம் என்பது என்ன ? அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள்
- அதனால் என்ன…
- சுதந்திர தின நாள்
- மண்ணின் பாட்டு
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -4 ஆண்டனி & கிளியோபாத்ரா முடிவுக் காட்சி
- மரணயோகம்
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் இருபத்திமூன்று: சட்டத்தரணி அனிஸ்மனின் அலுவலக்த்தை நோக்கி!
- முடிவு
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 23
- அன்றைய யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி
- பள்ளிகளில் இலக்கியக் கல்வி: வீழ்ந்துவரும் விழுமியங்கள்
- எதிர் எதிர் அணிகள் இணையும் புள்ளிகள்
- இந்தியாவின் மணியாண்டுச் சுதந்திர நாள்
- பத்வா என்றோரு நவீன அரக்கம்
- சக்தி சுரபி : உயிரி – சமையல் எரிவாயு கலன் அறிமுகம் – சமையலறைக் கழிவிலிருந்தே சமையல் எரிவாயு
- முந்திரி @ கொல்லாமரம்
- எனி இந்தியன் பதிப்பகம் நடத்தும் கருத்தரங்கு