கடிதம்

0 minutes, 1 second Read
This entry is part [part not set] of 30 in the series 20070726_Issue

செல்வி


அன்புடன் ஆசிரியர் அவர்களுக்கு.

1.மஞ்சுளா நவநீதன் அவர்கள் எழுதிய சிவாஜியை வரவேற்ப்போம் என்ற கட்டுரையில் 1500 ரூபாய் கொடுத்து இப்படத்தை பார்ப்பது சட்டத்தை மீறிய செயல் இல்லை என்கிறார். பின்னர் ஏன் பிளாக் டிக்கெட் விற்பவனை போலிஸ் கைதுசெய்கிறது?
படத்தில் கதையை எதிர்பார்ப்பது ஒரு நியாயமான எதிர்ப்பார்ப்புதானே. இத்தனை எதிர்பார்ப்பு இல்லாத பாட்ஷாவின் பக்கத்தில் கூட இந்தப்படம் போகவில்லையே என்கிற ஆதங்கம் இல்லாமல் இல்லை.

2. மலர்மன்னன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரை மிகவும் சிந்திக்கதூண்டியது. இஸ்லாமிய சகோதரர்களும் தங்களிடையே உள்ள இதுபோன்ற மனிதர்களை அடையாளம் கண்டு பெரிய இழப்புகளுக்கு அவர்கள் காரணமாகக்கூடிய சூழலைத் தவிர்க்க வேண்டும். இது இந்தியாவின் அமைதியான எதிர்காலத்துக்கு உதவும்.

3. சமிபத்தில் ஜப்பானில் எற்பட்ட நிலநடுக்கம் அணுக்கழிவை கடல்நீரோடு கலக்க காரணமாகி விட்டது பற்றிய செய்தி மிகவும் அதிர்ச்சியை தந்தது. மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு பெயர்போன ஜப்பானில் இப்படியென்றால் நம்நாட்டின் கதை என்னாவது. திரு ஜெயபாரதன் அவர்கள் இதை பற்றியும் கழிவுகளின் கதிரியக்க பரவலின் பாதிப்பு பற்றியும் எழுதிட வேண்டும்.

செல்வி.


rm_slv@yahoo.com

Series Navigation

author

செல்வி

செல்வி

Similar Posts