நாகூர் ரூமி
‘பிறைநதிபுரத்தானுக்கு பதில்’ என்ற கட்டுரையில் வெ.சா. “நாகூர் ரூமி satanic verses-க்கு ஆதரவாக எழுதப்போக இப்போது அவர் தன் இஸ்லாமிய புனிதத்துவத்தை நிரூபிக்க எப்படியெல்லாம் ஆவேச ஆட்டம் ஆட வேண்டியிருக்கிறது” என்று போகிற போக்கில் எழுதியிருந்ததை படிக்க நேர்ந்தது.
நான் சல்மான் ரஷ்டியின் தடை செய்யப்பட்ட நாவலான சடானிக் வெர்சஸுக்கு ஆதரவாக எதுவும் எழுதவில்லை. அந்த நாவல் தடை செய்யப்பட்ட விஷயம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் ஒரு கடிதம் எழுதினேன். அதில், சல்மான் ரஷ்டி அவருடைய Midnight’s Children என்ற நாவலில் தொழுகையை உயர்த்தும் விதத்தில் எழுதியிருக்கிறார் என்றும், பிரதமர் ராஜீவ் காந்திக்கு அவர் எழுதிய திறந்த கடிதத்தில் இஸ்லாத்துக்கு விரோதமாக தான் எதுவும் எழுதவில்லை என்றும் கூறியிருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டி, இந்த காரணங்களினால் இஸ்லாத்துக்கு விரோதமாக எழுதும் ஒரு எழுத்தாளராக அவர் இருக்கமாட்டார் என்று நான் நினைக்கிறேன் என்றும், ஒரு புத்தகத்தைத் தடை செய்தால் அதைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம்தான் அதிகமாகும். எனவே இந்த நாவலைத் தடை செய்வது அதன் விற்பனையும் புகழும் அதிகமாகவதற்கு உதவி செய்யும் என்று எழுதினேன்.
அதைத் தவறாகப் புரிந்து கொண்ட சிலர் நான் இஸ்லாத்துக்கு விரோதமாக எழுதிவிட்டேன் என்றும், சல்மான் ருஷ்டியின் தடை செய்யப்பட்ட நாவலுக்கு ஆதரவாக எழுதிவிட்டேன் என்றும் சொன்னார்கள். (பல நாட்களுக்குப் பிறகு, அந்த நாவலின் பகுதிகள் பல படிக்கக் கிடைத்தது. அதிலிருந்து ரஷ்டி மிகவும் மோசமாகத்தான் எழுதியிருந்தார் என்று தெரிந்து கொண்டேன்).
நடந்தது இதுதான். அதற்குள் வெ.சா. என்னென்னவோ எழுதிவிட்டார். இஸ்லாத்தின் புனிதத்தை நான் நிரூபிக்க வேண்டியதில்லை. அதை இஸ்லாமே நிரூபித்து விட்டது. உண்மைகள் எல்லாமே புனிதமானவைதான்.
வெ.சா. பற்றிய என் கடந்த கால விமர்சனத்தை இன்னும் அவரால் மறக்க முடியவில்லை போலிருக்கிறது!
அன்புடன்
நாகூர் ரூமி
ruminagore@gmail.com
- அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – படக்கவிதைப் பிரிவு
- காதல் நாற்பது (24) வாழ்வு வாழ்வதற்கே !
- தி.மு.க அரசின் தவறுகளில் மற்றொன்று!
- குருவும் சீடனும் (ஞானத்தேடலின் கதை) – புத்தக அறிமுகம்
- நளாயினியின் கவிதைவெளி – நளாயினி தாமரைச் செல்வனின் ‘உயிர்த்தீ’ மற்றும் ‘நங்கூரம்’
- கோயில்களில் பிறமதத்தார் – ஒரு முரண் பார்வை – பாகம் 1
- தமிழக அரசியலில் உள்ள வேண்டாத போக்குகள்
- அன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த படக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி நடுவர் ஆசிப் மீரான் கருத்துரை
- அக்கறையும் ஆதங்கமும் இணைந்த குரல்
- போரின் தடங்கள்
- The Elephant and Tree (யானையும், மரமும்)
- கடிதம் – ஆங்கிலம்
- சிவாஜி படத்திற்கு மற்றுமொரு “பில்டப்பு”
- மெய் எழுத்து மாத இதழ் வெளியீடு
- கனவு – சேவ் – திருப்பூரில் குறும்படப் பயிற்சிப் பட்டறை
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 20
- கடிதம்
- சிங்கப்பூர் மலேசியத் தமிழ் இலக்கியம் – நேற்று, இன்று, நாளை ” கருத்தரங்கமும், கலந்துரையாடலும்
- பசோலினி : கலையும், விளையாட்டும்
- ஈ. வே. ரா பற்றிய திரைப்படத்தால் தெரியவரும் தகவல்கள்
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் பதின்மூன்று: வேலை வேண்டும்!
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 4
- கால நதிக்கரையில் …. – அத்தியாயம் – 9
- அணுவுக்கு உலையா? வாழ்வுக்கு உலையா? கூடங்குளம் அணுமின் திட்டம்
- கூடங்குளம் அணுமின் திட்டம்: மக்கள் கருத்தாய்வு கூட்டம் – ஒரு பார்வை
- தமிழக அரசியல் – இன்று!
- ;
- ராஜ முக்தி
- 2008 ஆண்டுக்குள் வெண்ணிலவைச் சுற்றப் போகும் இந்தியாவின் மனிதரில்லா விண்ணூர்தி
- தமிழ் நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும் – இன்றைய சித்திரம்
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 13
- California Tamil Academy (CTA)(a non-profit organization)in the Bay Area