ஆர் ஸ்ரீநிவாசன்
திண்ணையில் அன்பர் ஒருவர் எழுதியிருந்தார், ஜிகாத் (நவீன கால) – இதற்கான உள்ளாற்றல் மார்க்ஸீயம், மாவோயிசத்திடம் இருந்து
பெறப் படுகிறது என்று. மிக்க நன்று.
தங்களுக்குத் தேவைப் படும் போது மார்க்ஸீயத்தையும், கம்யூனிசத்தையும் எடுத்துக் கொள்வார்கள்.
Once the essence of man and of nature, man as a natural being and nature as a human reality, has become evident in practical life, in sense experience, the quest for an alien being, a being above man and nature (a quest which is the avowal of the unreality of man and nature) becomes impossible in practice.
இது மார்க்ஸ் சொன்னதுதான். ஏற்றுக் கொள்வார்களா? நிற்க.
‘புதிய காற்று’ என்ற பத்திரிக்கையில் ஒருவரின் பேட்டியில் படித்ததாக ஞாபகம். கேள்வியின் சுருக்கம் இது. உங்களுக்கு (முஸ்லீம்களுக்கு) கம்யூனிஸ்டுக்கள் எப்போதும் ஆதரவு அளிக்கிறார்களே, அவர்களின் பல கொள்கைகள், உதாரணத்திற்கு கடவுள் மறுப்புக் கொள்கை, உங்களோடு ஒற்றுப்போகவில்லையே? இதையெல்லாம் எவ்வாறு எடுத்துக் கொள்கிறீர்கள்?
அதற்குண்டான பதில், உங்களுக்கு நண்பர் ஒருவர் இருக்கிறார், அவரை வீட்டுக்கு அழைக்கீறீர்கள், அவருக்கு சாப்பாடு போடலாம், ஆனால் அதே சமயம் அவர் உங்களின் தாயையோ, சகோதரியையோ படுக்கைக்கு அழைத்தால் சும்மா விடுவீர்களா? என்ற தொணியில் பதில் போகிறது.
மார்க்ஸியத்தின் படி குழந்தை பெறுவதைத் தடுப்பது (குடும்பக் கட்டுப்பாடு) குற்றமாகாது.
கடவுளைப் பற்றி மார்க்ஸியத்திற்கு கவலை இல்லை. அது தேவையும் இல்லை. கம்யூனிஸம் கொடி கட்டிப் பறந்த ருஷ்யாவில்
அனைவருக்கும் பொதுச் சட்டம் தானே அமலில் இருந்தது. மார்க்ஸியம் அதைத்தானே வேண்டுகிறது.
பொதுச் சட்டம் தேவையா? இல்லையா? நன்மையா? தீமையா? என்றெல்லாம் விவாதிக்க வரவில்லை.
ஜிகாத் சரியா, தவறா என்றும் விவாதிக்க வரவில்லை.
ஜிகாத்தின் உள்ளாற்றல் மார்க்ஸீயம், மாவோயிசத்திடம் இருந்து பெறப் படுகிறது என்று சொல்லி ஏன் ஒரு அறிவு ஜீவித் தனமான
முத்திரையை அதற்கு வழங்க வேண்டும்.
ஏன் மார்க்ஸியத்தை வைத்து நியாயப் படுத்த வேண்டும்?
அதை வைத்து ஒன்றை சீர் தூக்கிப் பார்த்து விட்டால் எல்லாம் சரியா?
பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் இருந்து ஆரம்பித்து நேற்றைய குஜராத் சம்பவம் வரை அனைத்தையும் ஒருவர் மார்க்ஸியத்தை வைத்து நியாயப் படுத்தி விட்டால் ஏற்று கொள்வீர்களா?
அல்லது கோவை குண்டு வெடிப்பிலிருந்து ஆரம்பித்து நேற்றைய பம்பாய் சம்பவங்கள் வரை அனைத்தையும் ஒருவர் மார்க்ஸியத்தை வைத்து நியாயப் படுத்தி விட்டால் சரியாகி விடுமா?
நியாயப் படுத்த முடியுமா என்று கேட்காதீர்கள்?
ஏகப்பட்ட அறிவு ஜீவித்தனமான வாதங்களை முன் வைத்து எதையும் எதைக் கொண்டும் நியாயப் படுத்தலாம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
srivasan@synopsys.COM
- அறிவிப்பு
- மொகித்தே – நாஞ்சில் நாடன் – தொகுப்பு – மும்பாய் சிறுகதைகள்
- கலை இலக்கியம் எதற்காக?
- புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (21-43)
- அய்யனார்
- வணக்கம் துயரமே – 1
- இங்க்புளூ சாரியும், மிட்டாய் ரோஸ் பனியனும்
- தந்தையாய் உணர்தல்
- புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
- மடியில் நெருப்பு – 1
- வலி
- புதுப்பட்டிச் செப்பேடு
- பெரியபுராணம் – 102 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- இஸ்ரேல்: எஸ். வி. ராஜதுரை கட்டுரை : பொய்களும் பாதி உண்மைகளும்
- வந்தே மாதரம்- தவறான நிலையில் பாரதிய ஜனதா கட்சி
- தீவிரவாதத்திற்கான தீர்வு!
- மூவேந்தரும் முக்குலத்தோரும் – சில விளக்கங்களுக்குப் பதில்
- திரும்பவும் வெண்மணிச் சோகம் எனும் பழங்கதை
- பாலஸ்தீனத்தை முன்வைத்து பின்நவீனத்துவ பெருங்கதையாடலாக ஒரு ஜிகாத்
- கடிதம்
- Painting Exhibition of V.P.Vasuhan
- ஜிகாத் மார்க்ஸீயத்திலிருந்து வந்ததா?
- துவக்கு இலக்கிய அமைப்பு மாற்று கவிதையிதழோடு இணைந்து நடத்திய மாபெரும் கவிதைப் போட்டி முடிவு
- விடுதலைக்கு முன் புதுக்கோட்டை
- குறைபட்ட என் பதில்கள்
- ஜோகிர்லதா கிரிஜா அவர்களது தொடர்கதை
- நியூ ஜெர்சி திரைப்படவிழா – தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை
- கடித இலக்கியம் – 20
- கையடக்க ஓவியங்களில் ‘கீத கோவிந்தம்’
- இந்த இஸ்லாமிய இளைஞரின் பாதம் பணிந்து…
- பயங்கரவாதம் – பல தலையுள்ள பாம்பு – தேவை பலமுனை யுத்த தந்திரம், ஆயத்தம்
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 13. மொழி
- நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு! அத்தியாயம் பத்து: பண்டைய தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள்!
- யாரைத்தான் நம்புவதோ தோழா !
- பிறைசூடிய ஹவ்வா
- கீதாஞ்சலி (88) பாழடைந்த ஆலயம்!
- பூட்டானிலிருந்து யாத்திரிகர்களும், மந்திரவாதிகளும், கோப்பையும்
- புதுச்சேரிப் பழமொழிகள் – அடையாளப்படுத்துதல்
- வேட்டையாடு விளையாடு
- மேமன்கவியின் நான்கு கவிதைகள்
- மார்க்க வழி நடந்த மௌலானா முகமது அலி