இஸ்ஸத்
அன்புள்ள ஆசிரியருக்கு,
உங்கள் வலை பத்திரிகையை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். படைப்புகள் மிகவும் சிறப்பாகவுள்ளன.
குறிப்பாக இஸ்லாமிய படைப்பாளிகளின் அறிவுபூர்வமான கட்டுரைகள் நம்பிக்கை கொடுப்பதாக இருக்கிறது. இருப்பினும் இஸ்லாமிய படைப்பாளிகள் இன்றைய இந்திய முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் தலையாய பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை விட்டு விட்டு மதத்துக்குள் உள்ள சிறிய நம்பிக்கை சம்பந்தமான பிரச்சினைகள் பற்றியே விவாதம் புரிகின்றனர்.
இந்திய முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் தலையாய பிரச்னைகள் என நான் கருதுபவைகளை கீழே பட்டியலிட்டுள்ளேன்:
1.மதக்கலவரங்களில் முஸ்லீம்கள் கொல்லப்படுவது சொத்துக்கள் அழிக்கப்படுவது
2.மதவெறி இயக்கங்களின் சிறுபான்மை துவேசம்.
3.வறுமை
4.வேலைஇல்லாமை
5.சரியான அரசியல் தலைமை, வழிகாட்டுதல் இல்லாமை
6.ஊடகங்களில் எல்லாமுஸ்லீம்களும் தீவிரவாதிகள் போல் சித்தரிக்கப்படுவது
7.அரசு மற்றும் காவல்து¨ற் அடக்குமுறைகள்
8.கல்வியில் பின்தங்கியிருப்பது
9. அரசு பணிகளில் போதிய ஒதுக்கீடு இல்லாமை.
10.ஓட்டு அரசியல் கட்சிகளை நம்பி ஏமாறுவது.(குறிப்பாக தமிழகத்தில் தி மு க – அதி மு க )
11. முஸ்லீம்களுக்கென்று சரியான வெகுஜன ஊடகங்கள் இல்லாதிருப்பது.
12.கலாச்சார சீரழிவுகள்
13. மதக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு இஸ்லாமிய இளைய சமுதாயம் தீவிரவாதத்தில் தள்ளப்படுவது.
ஆக இத்தனை வாழ்வாதாரமான பிரச்சினைகள் இந்திய முஸ்லீம்களுக்கு இருக்கும்போது இஸ்லாமிய படைப்பாளிகள் வஹாபி சஹாபி பிரச்சினைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். ஏற்கனவே இந்தப்பிரச்னை காரணமாக குடும்பங்களில் ஆரம்பித்து சமுதாயம் வரை முஸ்லீம்கள் பிளவு பட்டு இருக்கின்றார்கள்.
மதவெறி இயக்கங்கள் வலுப்பெற்று வரும் இன்றய சூழலில் மதசார்பற்ற ஜன நாயக சக்திகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய அடித்தட்டு மக்களை
ஒன்று திரட்டுவதும் பரவும் பாசிச அபாயங்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இஸ்லாமிய படைப்பாளிகளின் தலையாய கடமையாக உள்ளது.
அன்புடன்
இஸ்ஸத்
துபாய்
aizzath@hotmail.com
- கடிதம்
- ஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 2
- மிஸ் இந்தியா
- எதிர்மறைகள்
- “வலைப்பதிவர்களுக்கான” மாதாந்திரப் போட்டி
- கடிதம்
- உறைதலும் உயிர்ப்பித்தலும் – இரா.முருகனின் “மூன்று விரல்”
- நூல் அறிமுகம் : மார்ட்டின் கிரே-யின் வாழ்வெனும் புத்தகம் : அந்த வானமும் இந்த வார்த்தையும்
- பூமகனின் உயிர்க்குடை : பிச்சினிக்காடு இளங்கோ கவிதைகள்
- சங்க இலக்கியங்களில் தமிழர்களின் மரபுசார் உழவுத்தொழில்
- கடிதம்
- கடிதம்
- ஓ போடு – ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்
- கரை மேல் பிறக்க வைத்தார்
- ஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 1
- கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 3
- திரு.சீ.இராமச்சந்திரன் அவர்களின் ஆய்வுக்கட்டுரை குறித்து: ஆகாயக்கடலும், லிங்கமும்
- விஸ்வாமித்ராவுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்
- கடிதம்
- கடிதம்
- சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-3
- பென்ரோஸ் வரைபடங்கள். (Penrose diagrams)
- தொழிற்சங்கங்களும் மத்திய மாநில அரசுகளும்
- பயங்கர மனநோயாளிகள்
- ராஜ்குமார் மறைவும் பெங்களூர் வன்முறையும்
- எடின்பரோ குறிப்புகள் – 12
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-17) (Based on Oscar Wilde’s Play Salome)
- டர்மெரின் – 2
- உம்மும்மா நேசித்த ஊசிக்கிணறு
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 17
- புலம் பெயர் வாழ்வு (9) – சிங்கப்பூர் போல எமக்கும் ஒரு நாடு வேண்டும்
- ‘ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’ – என்னதான் இருக்கிறது?
- சினைமுட்டைப்பை மாற்று சிகிச்சை – ஒரு சகாப்தம் இந்தியாவில்
- குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
- நீங்கள் மகத்தானவர்!
- பெரியபுராணம் – 85 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- பாயடி பாரதமே! பாய் !
- கீதாஞ்சலி (69) வாழ்க்கை நதியின் பெருமை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- இவை எழுதப்பட்ட காலங்கள்–1
- வளங்குன்றா வளமைக்கு வழிகாட்டும் ஹிந்து திருக்கோவில்கள்
- அ வ னா ன வ ன்