சுகுமாரன்
எடின்பரோ குறிப்புகளில் சின்னதாக ஒட்டுவேலை செய்ய உத்தேசம்.
தேவராஜன் மாஸ்டரும் ஓ.என்.வியும் இணைந்து நாடக கானங்களை சராசரி
மலையாளியின் தேசிய கீதங்களாக மாற்றியது ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும்.
எழுபதுகளில் இரண்டு மாஸ்டர்களும் சினிமாவில் சூப்பர் தாரகைகளாகி விட்டனர்.அப்புறம்
இரண்டு நட்சத்திரங்களும் டூ விட்டுக்கொண்டு விட வயலார்-தேவராஜன் என்றும்
ஓ.என்.வி.-சலீல் சௌத்ரி என்றும் இரண்டு மெல்லிசைப் பத்ததிகள் உருவாயின.
இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் தேவராஜன் மாஸ்டர் எழுதப்பட்ட கவிதைகளுக்குத்
தான் இசையமைத்தார் என்பதும் சலீல்தாவின் மெட்டுகளுக்குப் பாந்தமான வரிகளை
ஓ.என்.வி உருவாக்கினார் என்பதும்.
தேவராஜன் மாஸ்டரின் இசையில் மிகக் குறைவாகப் பாடியவர் எஸ்.ஜானகி.
ஜானகியின் குரல் கள்ளக்குரல் என்பது மாஸ்டரின் அபிப்பிராயம்.அவருடைய
ஆஸ்தான காயிக தமிழ்ப் பெண்ணான பி.மாதுரி.அடுத்து அவருடைய ·பேவரிட்
பி.சுசீலா.
கமல்ஹாசனை முதலில் பின்னணி பாடவைத்தவரும் தேவராஜன் மாஸ்டர்தான்.
‘அந்தரங்கம்’ படத்தில் இடம்பெறும் ‘ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்கவந்தாள்’
என்ற பாடல்தான் கமல்ஹாசனைப் பாடகராக்கியது.
கம்யூனிஸ்ட் சக யாத்திரிகரும் நாத்திகருமான தேவராஜனின் இசைதான் சபரிமலை
ஐயப்பனை தினம்தோறும் தாலாட்டுகிறது. சம்பிரதாயமான முறையில் பாடப்பட்டு
வந்த ஹரிவராசனம் கீர்த்தனம் இப்போது பாடப்படுவது தேவராஜன் மாஸ்டர்
சிட்டைப்படுத்திய மத்யமாவதி ராகத்தில் யேசுதாஸின் குரலில்.
எம்.எஸ்.திருப்பூணித்துறை பற்றிய குறிப்பில் ‘பெருந்தச்சன்’படத்தின் இயக்குநர்
ஹரிஹரன் என்று குறிப்பிடப்பட்டிருப்பது சரியல்ல.அது அஜயன் இயக்கிய படம்.
அஜயனின் அப்பாவும் கேரளத்தின் கலாச்சார அரங்கில் பெரும் நட்சத்திரமாக
ஜொலித்தவர்.நாடகம் போட்டு ‘நிங்ஙள் என்னெ கம்யூனிஸ்டாக்கி’ என்று
பலரையும் சிவக்கச் செய்தவர். பெயர்- தோப்பில் பாசி.
சுகுமாரன்
n_sukumaran@rediffmail.com
- கடிதம்
- ஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 2
- மிஸ் இந்தியா
- எதிர்மறைகள்
- “வலைப்பதிவர்களுக்கான” மாதாந்திரப் போட்டி
- கடிதம்
- உறைதலும் உயிர்ப்பித்தலும் – இரா.முருகனின் “மூன்று விரல்”
- நூல் அறிமுகம் : மார்ட்டின் கிரே-யின் வாழ்வெனும் புத்தகம் : அந்த வானமும் இந்த வார்த்தையும்
- பூமகனின் உயிர்க்குடை : பிச்சினிக்காடு இளங்கோ கவிதைகள்
- சங்க இலக்கியங்களில் தமிழர்களின் மரபுசார் உழவுத்தொழில்
- கடிதம்
- கடிதம்
- ஓ போடு – ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்
- கரை மேல் பிறக்க வைத்தார்
- ஆத்மா, அந்தராத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்… 1
- கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 3
- திரு.சீ.இராமச்சந்திரன் அவர்களின் ஆய்வுக்கட்டுரை குறித்து: ஆகாயக்கடலும், லிங்கமும்
- விஸ்வாமித்ராவுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்
- கடிதம்
- கடிதம்
- சூடேறும் பூகோளம், மிகையாகும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-3
- பென்ரோஸ் வரைபடங்கள். (Penrose diagrams)
- தொழிற்சங்கங்களும் மத்திய மாநில அரசுகளும்
- பயங்கர மனநோயாளிகள்
- ராஜ்குமார் மறைவும் பெங்களூர் வன்முறையும்
- எடின்பரோ குறிப்புகள் – 12
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-17) (Based on Oscar Wilde’s Play Salome)
- டர்மெரின் – 2
- உம்மும்மா நேசித்த ஊசிக்கிணறு
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 17
- புலம் பெயர் வாழ்வு (9) – சிங்கப்பூர் போல எமக்கும் ஒரு நாடு வேண்டும்
- ‘ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’ – என்னதான் இருக்கிறது?
- சினைமுட்டைப்பை மாற்று சிகிச்சை – ஒரு சகாப்தம் இந்தியாவில்
- குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
- நீங்கள் மகத்தானவர்!
- பெரியபுராணம் – 85 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- பாயடி பாரதமே! பாய் !
- கீதாஞ்சலி (69) வாழ்க்கை நதியின் பெருமை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- இவை எழுதப்பட்ட காலங்கள்–1
- வளங்குன்றா வளமைக்கு வழிகாட்டும் ஹிந்து திருக்கோவில்கள்
- அ வ னா ன வ ன்