விஸ்வாமித்ரா
சென்ற வாரத் திண்ணையில் திரு.பெரியசாமி என்பவர் எழுதிய கடிதத்தில், கோவிந்தராஜன் என்ற விமர்சகர் எப்படி படத்தின் குறைகளை எடுத்து எழுதப் போயிற்று என்ற ரீதியில் குற்றம் சாட்டுவதுடன் விமர்சகருக்கு உள்நோக்கம் இருக்கலாம் என்றும் அவதூறு கூறுகிறார். ஒரு திரைப்படம் வெளியாகும் பொழுது அதைப் பாராட்டியும், விமர்சித்தும் கருத்துக்கள் வருவது இயற்கையே. ஒரு திரைப்படத்தில் குறை கண்டு பிடிப்பதே குற்றம் என்று அவர் எழுதியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. குற்றம் கண்டு பிடிப்பதும் விமர்சகர்களின் வேலைகளில் ஒன்றுதானே ? இதில் கடுமையாக கண்டனம் செய்ய என்ன இருக்கிறது என்பது புரியவில்லை ? குறைகளைச் சுட்டிக் காட்டுவது குற்றமா என்ன ? சேரன் படங்களின் மீது இருக்கும் எதிர்ப்பார்ப்பினால்தானே இது போன்ற விமர்சனங்கள் எழுகின்றன ? ஆறு, மஜா போன்ற படங்களுக்கா இது போன்ற விமர்சனங்கள் வருகின்றன ? இணைய தளங்களில் அது போன்ற படங்கள் கண்டு கொள்ளப் படுவது கூட இல்லையே ? இந்தியா டுடே பத்திரிகையும் கூட இதே போன்ற விமர்சனத்தைதானே எடுத்து வைக்கிறது ? இந்தக் குறைகள் எல்லாம் ஒரு திண்ணையில் எழுதிய ஒரு விமர்சகரின் கண்ணுக்கு மட்டும் தென்பட்டவை அல்ல. நான் தேடிய வரையில் இதே படத்திற்கான விமர்சனங்கள் மேலும் சில இணையத்தில் கிட்டின. இது போல் இன்னும் பல பார்வைகள் பல்வேறு இணைய தளங்களில் வைக்கப் பட்டிருக்கலாம். தவமாய் தவமிருந்து படம் பற்றிய பின்வரும் விமர்சனங்களையும் பெரியசாமி போன்றவர்கள் படித்துப் பார்த்தால் இணைய விமர்சனங்களின் வெளிப்படையான போக்குகள் பிடிபடலாம்.
http://dhool.com/blog/ ?item=films-rounup-thavamaai-thavamirundhu-tamil http://www.maraththadi.com/article.asp ?id=2818
http://thoughtsintamil.blogspot.com/
http://www.maraththadi.com/article.asp ?id=2822
அச்சுப் பத்திரிகைகளில் இது போன்ற சுதந்திரமான வெளிப்படையான விமர்சனங்கள் வருவதில்லை. அச்சுப் பத்திரிகைகளின் வழா வழா கொழா கொழா விமர்சனங்களுக்குப் பழக்கமாகி விட்ட நமது இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும், ரசிகர்களுக்கும் இது போன்ற வெளிப்படையான கருத்துக்களும் விமர்சனங்களும் கடும் அதிர்ச்சியைத் ஏற்படுத்துகின்றன என்பது எதிர்வினைகளைக் காணும் பொழுது புரிகிறது. திண்ணையில் வந்த விமர்சகரின் பார்வையுடன் நானும் முழுவதும் ஒன்று படவில்லையெனினும் கூட அதைத் தெரிவிக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். விமர்சகர் தெரிவித்த கருத்துக்களில் தவறு இருந்தால் பதிலுக்கு கண்ணியமாகச் சுட்டிக் காட்டலாம் ஆனால் குறை சொல்வதே குற்றம் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள இயலாது.
விஸ்வாமித்ரா
viswamitra12347@rediffmail.com
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 2
- நிலாக்கீற்று -3
- ‘ராமய்யாவின் குடிசை ‘ – பாரதி கிருஷ்ணக்குமாரின் கீழ்வெண்மணி விவரணப்ப(ா)டம்
- ‘இலக்கியத்தில் பெண்கள் ‘ என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியான கவிஞர் திலகபாமாவின் கட்டுரை குறித்து
- தவமாய் தவமிருந்து – ஒரு பின்னோட்டம்
- நான் கண்ட சிஷெல்ஸ் – 4.அரசியலும் ஆட்சியும்
- அகமும் புறமும் (In and Out)
- வாஷிங் மெஷினும், மனுஷனும்!!
- விளக்கு பரிசு பெற்ற கவிஞர் ஞானக்கூத்தனுக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்
- தவமாய் தவமிருந்து பட விமர்சனத்தின் மீதான எதிர்வினைகள் குறித்து
- கடிதம்
- உயிர்மையின் இரண்டு விழாக்கள் இருபது புத்தகங்கள்
- ‘சிதறும் நினைவுகள் ‘–நேரான நினைவு நோக்கி
- பனிரெண்டு மாதங்கள் கழித்து நாகபட்டினத்தில் சுனாமி பாதிப்பு மாந்தருக்கு வாழும் வசதிகள், சுனாமி அபாய அறிவிப்பு
- அப்பாவி ஆடுகள்
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-3) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- மஹான்
- கன்னிமணியோசை
- பயம்
- எல்லாம் ஒலி மயம்
- ராஜாஜியும் அவரது கல்வித் திட்டமும்: உண்மையைப் பதிவு செய்யத் தானாகவே வருகிறது வாய்ப்பு!
- ‘வாக்களிக்கப்பட்ட பூமி ‘ – சிண்ட்ரோம் ( ‘Promised land ‘ Syndrome) – 1
- ஆகையினால் ‘அருட்செல்வர் ‘ இவர் என்பதாய் அறியலானேன்
- ரிஷபன் கவிதைகள்
- பெரியபுராணம் – 71 – திருஞான சம்பந்த நாயனார் புராணம்
- கீதாஞ்சலி (55)
- நிவாரணம் வந்தது மனிதம் போனது!
- உன்னதம் இலக்கிய இதழ்.