ஒரு கடிதம்

This entry is part [part not set] of 23 in the series 20050609_Issue

ச. பெரியசாமி


வாஸந்தி அவர்களின் கட்டுரை படித்தேன். கன்னடர்கள் நீக்குப்போக்காக இருப்பதற்குக்காரணம் அவர்கள் மாநிலம் பெரியது. கடந்த காலங்களில் தமிழர்களும் அப்படித்தான் இருந்தார்கள். அதற்காக மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டி வந்தது. கடந்த ஐ நூறு ஆண்டு கால அன்னியர் ஆட்சியினால் தமிழர்களுக்கு வரலாறே இல்லாமல் போனது. தமிழ் நாட்டில் மராட்டி, கன்னடம், சமஸ்கிருதம், உருது, தெலுங்கு ஆகியன மட்டும் வளர்ந்தன. தமிழும் தமிழர்களும் வளரவில்லை. ஆதரவு கொடுக்கப்படவில்லை.தமிழ்ப் பேசும் நிலப்பகுதி சுருங்கிப்போய் வெறும் ஆயிரம் ஆண்டு மரபு மட்டும் கொண்ட தெலுங்கருக்கும் கன்னடருக்கும் பெரிய நிலப்பரப்பு உருவானது. ஆகையினால் தமிழ் ச்சாதியை இன்றைய நிலைமைக்கு குறை கூற முடியாது. பெங்களூர் வட இந்திய கலாச்சார சாயல் கொண்ட ஒரு நகரமாக இன்று மாறிப்போனதற்கு கன்னடர்களின் இந்த நீக்குப்போக்கே காரணம். மற்றபடி கட்டுரையில் மற்ற கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே.

ச. பெரிய சாமி.

reperian@rediffmail.com

Series Navigation

author

ச. பெரியசாமி.

ச. பெரியசாமி.

Similar Posts