ராதா
திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு,
கடந்த வாரத்திண்ணையில் ரெ.கார்த்திகேசுவின் கடிதம் வெளியாகி இருக்கிறது. http://www.thinnai.com/le0127051.html அவர், திண்ணை வாசகர்கள் கவனத்திற்கு
வலைப்பதிவொன்றில் http://dystocia.blogspot.com/2005/01/blog-post_17.html
முன் வைக்கப்பட்டுள்ள கருத்துக்களை கொண்டுவர விரும்புகிறேன்.அறிவியல் புனைகதை
என்ற தலைப்பில் வெளியாகும் கதைகள்தாம் அறிவியல் புனைகதைகள் என்று கருதப்பட
வேண்டியதில்லை.அப்படி ஒரு முத்திரையின்றி ஒரு அறிவியல் புனைகதை திண்ணையில்
வெளியாகியுள்ளது, நித்யா என்ற தலைப்பில் http://www.thinnai.com/st1104041.html
ஜெயமோகன் கதைகள் குறித்து மேலே சுட்டப்பட்டுள்ள வலைப்பதிவில் http://dystocia.blogspot.com
சில பதிவுகள் உள்ளன. இந்த ஒன்பது கதைகளிலும் ஒரு தேர்ந்த பதிப்பாசிரியருக்கு பொறுமையை சோதிக்குமளவிற்கு பல வேலைகள் காத்திருக்கின்றன. உதாரணமாக,புத்தகமாக வெளியிடும் போது பக்க எண்ணிக்கையினைக் கூட்டிக்காட்ட உதவும் பகுதிகள் கதைகளில் உள்ளன, மற்றபடி இவற்றால் வேறு பயனேதுமில்லை. இலக்கிய பிரதி, தொழில் நுட்பம்,கணினி, இணையம் குறித்த விவாதங்களுடன் ஒப்பிடுகையில் கார்த்திகேசு வியக்கும் கதையில் ஒரு ஆரம்ப கட்ட புரிதல் கூட இல்லை. மாறாக தன்னை முன்னிலைப்படுத்துவது தூக்கலாகத் தெரிகிறது. மெடாபிக்ஷன் metafiction குறித்த அவரது புரிதலில் உள்ள பிரச்சினையைத் தான் இக்கதை காட்டுகிறது. இக்கதைகளை படித்து விட்டு அறிவியல் புனைகதைகளே இப்படித்தான், சிறப்பான அறிவியல் புனைகதைகளுக்கு இவை ஒரு உதாரணம் என்ற தவறான புரிதல் வாசகர்களுக்கு ஏற்படாது என்று நம்புகிறேன். என்னுடைய மதிப்பீட்டில் இக்கதைகளுக்கு நூற்றுக்கு முப்பது மதிப்பெண் தரலாம்.
ஜீன் திருடனின் விநோத வழக்கு கதை ஜேம்ஸ் மூர் வழக்கினை நினைவுபடுத்துகிறது.கதாசிரியர் அதை குறிப்பிடாவிட்டாலும் அதை இதனுடன் தொடர்புபடுத்தி பார்க்க முடியும். நான் இதை விளக்கப்பப்போவதில்லை, இருக்கவே இருக்கிறது கூகிள். ஜேம்ஸ் பாய்ல் இதைக் குறித்து Shamans, Software and Spleens : Law and the Construction of the Information Society என்ற நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்.
திண்ணையில் வெளியாகும் என் கடிதங்கள் பற்றி சிலர் எனக்கு மின்னஞ்சல்கள் அனுப்பியுள்ளனர், அவர்களுக்கு என் நன்றிகள்.கருத்துக்களை எனக்கு மின்னஞ்சலில் தெரிவிப்பதை விட திண்ணைக்கு அனுப்புவதே பொருத்தமாயிருக்கும்.
வணக்கத்துடன்
ராதா
- துணை – பகுதி 3
- கசப்புகளைக் கரைக்கும் குழந்தைமை -கடற்கரய் கவிதைகள் அறிமுகம்
- ‘காதல் ‘ :::: யதார்த்தத்தை நோக்கிய தமிழ்சினிமா பயண மைல்கல்
- சித்திரங்களின் தளமும் கவிதைத்தளமும்(தமிழ்மணவாளன் கவிதைத்தொகுதி அறிமுகம்)
- எழுத்தின் மீது ஒடுக்குமுறை
- தமிள் வால்க
- கடிதம் பிப்ரவரி 3,2005
- கடிதம் பிப்ரவரி 3,2005
- கடிதம் பிப்ரவரி 3,2005
- கடிதம் – பிப்ரவரி 03, 2005 – திருமாவின் தனித் தன்மை
- கடிதம் பிப்ரவரி 3,2005
- பிப்ரவரி 3, 2005 – இந்த வாரம் (ஏசி , காண்டலீசா ரைஸ், ஆயில்)
- உறவு
- கவிக்கட்டு …. 47
- பேரழிவுச் சூலாயுதம்!
- பெரியபுராணம் – 29
- அற்றைப் பொழுதுக்கும் அப்பால்
- சுநாமி ஊழியம்
- கழிவு நீர் பாசனம் ! நல்லா சாப்பிடுங்க சார் !
- உலகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சி (Supercontinent Splitting & Drift to Smaller Continents)
- ஒவ்வாமை
- விழிப்பு
- அறிவியல் கதை! – ‘ஆத்மாவின் புத்துயிர்ப்பு! ‘
- டச்சு கலை உலகை மிரட்டும் இஸ்லாமிய அடிப்படைவாதம்
- தமிழ்ச்சிறுமியும் நியூஸ்லாந்தும் , நாடுகடத்தலும் -பாலியல் வல்லுறவும் தமிழ்ச்சமுதாயமும். ‘நொந்துகொள்வதும்,புரிந்துகொள்வதும்.
- உலகப் பயங்கரவாதப் பூச்சாண்டியும் வர்க்கப்போரும்–மூன்றாவது உலகப்போராய் நடைபெறும் மூலதனக்காப்பு யுத்தம்.
- சென்ற வாரங்களில் (பெப்ரவரி 3, 2005) கோவா, பிகார், ஈராக், நேபாள், ஈரான், சீனா, தமிழ்நாடு
- தமிழா….தமிழா!
- கண்ணன் காலடியில்
- இந்தியாவில் இயற்கை அழிவா ? யாருக்கெல்லாம் அதில் மகிழ்ச்சி!
- வின்சன்ட் வான்கோவின் இரத்தம்
- எப்படிக் கொல்லுவது ( மூலம் – கெய்த் டக்ளஸ் )
- மனைவியின் சிநேகிதர்
- கணவனின் தோழியர்
- தொப்புள் கொடி!
- கவிதை
- உனது மொழியை பு ாியாத பாவி நான்
- சாலையோர நடைபாதை
- குருவிகள்