விசிதா
திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு,
வணக்கம். கடந்த வாரத் திண்ணையில் ஜோதிர்லதா கிரிஜாவின் இன்னொரு புலம்பல் கட்டுரை. அவருக்கு ஒன்று புரியவில்லை , புகை பிடிப்பது,குடிப்பது போன்றவை தனி நபர் தெரிவுகள்.இதனால் உடல் நலம் கெடும் என்று வேண்டுமானால் சொல்லலாம்.பெண்கள் குடிக்கக் கூடாது என்று சட்டமில்லையே. பெண்கள் குடித்தால் அது ஒழுக்ககேடு என்று அவராக கற்பனை செய்து கொள்கிறார். அதற்கும் பெண்ணுரிமைக்கும் என்ன தொடர்பு. பாலியல் சுதந்திரம், திருமணம் இன்றி சேர்ந்து வாழ்வது இதெல்லாம் அவருக்கு ஒழுக்கக் கேடாகத் தெரிகிறது. பெண்ணுரிமை இயக்கத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று சொல்ல இவர் யார். என்னைக் கேட்டால் அவர் குருமூர்த்தியுடன் வேறுபடும் கருத்துக்களை விட, அவர் குருமூர்த்தியுடன் ஒத்துப் போகும் கருத்துக்கள் அதிகம்.இருவருக்கும் அடிப்படைக் கருத்துக்களில் வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.குடிக்கும் பெண்கள் இழிவான பெண்கள் என்று எழுதுபவர் பேசாமல் காஞ்சி மடத்தில் சேர்ந்தோ அல்லது ஆர்.எஸ்.எஸ். சின் மகளிர் பிரிவில் சேர்ந்தோ ‘பண்பாட்டைக் ‘ காப்பாற்றலாம். ஸ்வீடனைப் பற்றி குருமூர்த்தி தரும் புள்ளிவிபரம் குறித்து
மூலக்கட்டுரையில் என்ன சான்றாதாரம் தரப்பட்டுள்ளது என்பதைப் பார்க்காமல் கருத்துக் கூற விரும்பவில்லை. இந்தியச் சூழலில் பெண்கள் மீதான வன்முறை குறித்து குருமூர்த்தி என்ன எழுதியுள்ளார் என்பது
எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்றைச் சொல்ல முடியும், ஸ்வீடன் மனித வளர்ச்சி குறியீட்டு எண்ணில்
(Human Development Index) உலகில் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக உள்ளது. அங்கு சமத்துவம்
என்பது நடைமுறையில் உள்ளது.எல்லாச் சமூகங்களில் உள்ளது போல் அங்கும் சில பிரச்சினைகள்
இருக்கலாம்.அதே சமயம் ஆண்-பெண் சமத்துவம், அனைவருக்கும் கல்வி, சுகாதார வசதி, தனி நபர்
உரிமைகள், மனித உரிமைகள் போன்றவற்றில் அது இந்தியாவை விட பல படி முன்னே உள்ளது
என்பது உண்மை. ஜோதிர்லதா கிரிஜாவின் போலி பெண்ணுரிமை வாதம் குருமூர்த்தியின் கன்சேர்வேட்டிசத்தின் இன்னொரு வடிவம்தான்.
வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் குறித்த கட்டுரை மிக நன்றாக உள்ளது. மொழிபெயர்ப்பாளருக்கு
என் பாராட்டுகள். இது குறித்து மேலும் சில கட்டுரைகளை திண்ணையில் வெளியிட வேண்டும் என்று
கேட்டுக்கொள்கிறேன். indiatogether இணையதளம், திட்டக்குழு இணையதளம், பொதுவான குறைந்தபட்சத்திட்டம் குறித்த ஆலோசனைக்குழுவின் இணையதளம், எக்கானமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி இணையதளம் – இவற்றில் வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பிற்கான உத்தரவாதம், கிராமப்புற வேலைவாய்ப்புத்திட்டங்கள் பற்றி பல கட்டுரைகள் உள்ளன.
விசிதா
http://wichitatamil.blogspot.com/
- ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு, எம் யுவன் எழுதிய பகடையாட்டம் வெளியீட்டுவிழா – டிசம்பர் 14, 2004
- சர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15 , 2005
- சான் ஃப்ரான்சிஸ்கோ தமிழ் மன்றம் நாடகவிழா – டிசம்பர் 11 , 2004
- கடிதம் – டிசம்பர் 9,2004 – ஜெயமோகனின் ஐந்தாவது மருந்து– ஒரு குறிப்பு
- கடிதம் டிசம்பர் 9,2004
- சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வழங்கும் மார்கழி நாடக விழா
- கடிதம் டிசம்பர் 9,2004 – நேருவின் வரலாற்றறிவு ஒரு விளக்கம்
- கடிதம் டிசம்பர் 9,2004
- கடிதம் டிசம்பர் 9,2004 – சோதிப்பிரகாசமும் பாவாணரும்
- கடிதம் டிசம்பர் 9,2004
- கடிதம் டிசம்பர் 9,2004 – நேச குமாரின் கூற்று!
- பாரதியும் கடலும்
- சிறு வயது சிந்தனைகள் – பகுதி 1
- சில சென்றவார செய்திகள் (யுக்ரேன், டார்பார், ஏர் இந்தியா, JNUSU, ஊடகவியலாளர்கள், ஐராக்)
- உயிர்களை அலட்சியப்படுத்தும் நச்சு தொழிற்சாலைகள்
- ஜோ டி குரூஸின் ‘ ஆழிசூழ் உலகு ‘ – கடலறிந்தவையெல்லாம்…
- பாரதிக்கு வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்திரம் ( ‘மகாகவி பாரதி வரலாறு ‘ நூலின் முன்னுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்
- மக்கள் தெய்வங்களின் கதை 13 – வன்னியடி மறவன் கதை
- பேட்டி
- ஆதலினால் கவிதை செய்வீர். . .
- சரணமென்றேன் (காதல் கவிதைத் தொகுப்பு) : முன்னுரை
- புத்தர்களும் சித்தர்களும்
- நீங்க வெட்கப் படுவீங்களா ?
- ஆணி அடிக்கப்பட்ட ஆத்மாக்கள் ( ‘clenched soul ‘ ) பேப்லோ நெருதாவின் கவிதைகள்-(4)
- பாப்லோ நெரூதாவின் ‘மாச்சு பிச்சுவின் சிகரங்கள் ‘
- காதல் கடிதம்
- இப்படித்தான்….
- பாரதி இலக்கிய சங்கம் சிவகாசி – சி. கனகசபாபதி நினைவரங்கம் – 28.11.04
- மாச்சு பிச்சுவின் சிகரங்கள் – ஒரு முன் குறிப்பு
- புத்தர்களும் சித்தர்களும்
- பாப்லோ நெரூதாவின் ‘உ ன து பா த ங் க ள் ‘
- வாரபலன் – டிசம்பர் 9,2004 – ராகோல்ஸவம் , குஞ்ஞாலிக்குட்டி சோதனை ,இராதா இசைவிழா
- இஸ்லாத்தில் பர்தா : வரலாறும், நிகழ்வுகளும் – II
- கண்ணில் ஒன்றைக்குத்தி காட்சி கொடுத்தல் தகுமோ ?
- மனநிம்மதிக்கான மாற்றுத்தளம்
- ‘புலன் அடக்கத்தின் பொன் விழா’க் கொண்டாட்டம் – அன்று!,‘புலன் விசாரணை’ யில் சிக்கிய திண்டாட்டம் – இன்று !!
- நீங்களுமா கலைஞரே ?
- சட்டத்தை ஏய்க்க சங்கர புராணம்!
- காஞ்சி மடத்தின் ‘கும்பகோண ‘ மகிமைகள்
- பகையே ஆயினும்….
- நீலக்கடல் – தொடர்- அத்தியாயம் – 49
- மோகனம் 1 மோகனம் 2
- புனிதமானது
- பெரிய புராணம் – 21 ( இயற்பகை நாயனார் புராணம் தொடர்ச்சி )
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 12 : முத்துப்பட்டன் கதை
- மரபுகளை மதிக்கும் விருது
- மெய்மையின் மயக்கம்-29
- கெளரி ராம்நாராயணின் ‘கருப்புக் குதிரை ‘
- அணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன் (2)
- படைக்கப்படாத உயிரின் உதயத்தின் அழகியல்
- பெயரில் என்ன இருக்கிறது ?
- அம்மா
- அடியும் அணைப்பும்
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 6.வீதியோரச்சித்திரங்கள்
- கவிக்கட்டு 39-கனவுதானடி
- கீதாஞ்சலி (7) – என் வாழ்வில் கட்டுப்பாடு (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- அறிவியல் சிறுகதை வரிசை 4 – பூர்ணம்