ராதா ராமசாமி
திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு
நான் திண்ணையில் எழுதுவதில்லை.திண்ணையை தொடர்ந்து படித்து வருகிறேன். திரு.அரவிந்தன் நீலகண்டன் சுலேகா இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரைக்கு என் பதில் அதே தளத்தில் உள்ளது.
http://www.sulekha.com/expressions/articledesc.asp ?cid=307440
என் பதில் சுருக்கமாக உள்ளது.ஏனெனில் அக்கட்டுரையைப் படிக்கும், ஒரளவு விஷய ஞானம் உள்ள எவர்க்கும் அதன் பலவீனங்கள் வெளிப்படையாக தெரியும். கட்டுரையாளர் தனது வழக்கமான மார்க்சிய, கிறிஸ்துவ மத எதிர்ப்பினை அங்கே கொட்டியுள்ளார்.அதற்கு எந்தவிதத் தேவையுமில்லை. மீரா நந்தா ஒரு மதத்திற்கு ஆதரவாக இன்னொரு மதத்தினை விமர்சிக்கவில்லை. இந்த மதத்தினை நான் ஏற்கிறேன் இது அறிவியல் பூர்வமானது என்று எங்கும் அவர் எழுதாத போது அரவிந்தன் இப்படி எழுதியிருப்பது வேடிக்கைதான், ஆனால் அவரது பாவ்லாவிய எதிர்வினைகளை கவனித்தவர்களுக்கு இது புதிதல்ல.
அரவிந்தனால் ஒரு கோர்வையான, மீராவின் வாதங்களின் அடிப்படைகளை கேள்விக்குட்படுத்தும் பதிலைக்
கூட தரமுடியவில்லை.அவர் வைக்கும் வாதங்களின் படி பார்த்தால் அறிவியல் ரீதியாக மதத்தின் கோட்பாடுகளை ஆராய வேண்டும், கொள்ளத்தக்கன இவை, தகாதவை இவை என பிரித்திட வேண்டும். இது கேட்க சுவாரசியமாக இருக்கும். ஆனால் அறிவியலின் தத்துவம் குறித்த விவாதங்களை அறிந்தவர்கள் இதைக் கேட்டுச் நகைப்பார்கள். ஏனெனில் இதுதான் ஒரே அறிவியல் கண்ணோட்டம் என்று ஒன்றை நிருவுவது கடினம். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்றால் முதலில் கடவுள் என்றால் என்றுதான் கேட்க வேண்டிவரும். அப்புறம் அதை நிரூபிக்க முடியுமா, முடியுமெனில் எப்படி, உதாரணமாக பரிசோதனைகள்
மூலமா, ஆம் எனில் எந்தப் பரிசோதனைகள், எந்தக் கருவி கொண்டு … எனக் கேள்விகள் விரியும்.அப்புறம்
நிரூபணம் என்பது குறித்த கேள்விகளும் எழும். இங்கு மொழி, பொருள் குறித்த பிரச்சினைகளும் உண்டு.
எங்கும் நிறை பரம்பொருள் என்பது tautology. இதை எப்படி நிரூபிப்பது. அரவிந்தன் பதில் சொல்வார்
என்று எதிர்பார்க்கிறேன்.
இறந்தவர் நினைவாகக் செய்யப்படும் சடங்குகளுக்கு எனக்குத் தெரிந்த வரை அறிவியல் பூர்வமான நிரூபணம் இல்லை, எனவே அவை வீண் என்று அரவிந்தன் கூறுவாரா. விவேகானந்தர் அறிவியலுக்கு எதிரியல்ல, மீரா கேள்விக்குட்படுத்துவது அவர் முன்வைத்த சில கருத்துக்களை.அவர் அறிவியலுக்கு ஆதரவு தெரிவித்தார் என்பதற்காக அவர் கூறியவை எல்லாம் சரியாகிவிடாது. இந்த வேறுபாடு மிக அடிப்படையானது, அது அரவிந்தனுக்கு புரியவில்லை. ரிச்சர்ட் டாகின்சும், ஜே கோல்டும் வேறுபடும் புள்ளிகள் உண்டு. இருவரும் சிலவற்றில் ஒரே மாதிரி கருத்துத் தெரிவித்திருக்கலாம். ஆனால் வேறுபடும் புள்ளிகள் மிக முக்கியமானவை. எல்லாவற்றையும் இரண்டு சாக்குகளுக்குள்,இதற்கு ஆதரவு, எதிர்ப்பு என்று போட்டுப் புரிந்து கொள்ள முடியாது.மீராவின் கட்டுரையின் நோக்கம் வேறு, அதை சரியாக தன் கட்டுரையில் கூறியுள்ளார். இன்றைய ஹிந்த்துவ சிந்தனைக்கு சவால்விடும் கட்டுரை அது. அரவிந்தனால் அதை சரியாக எதிர்கொள்ள முடியாமல் போனதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒன்று அவருக்கு இதில் அறிவியல் தத்துவம் குறித்த பிரச்சினைகள் எவை என்பது புரியாதது.இரண்டாவது தன் தரப்பிற்கு வலுச்சேர்க்கும் ஆதாரங்கள் குறித்து அவர் அறியாதது. மூன்றாவது எதையும் மார்க்சிய எதிர்ப்பு அல்லது ஆதரவுக் கண்ணோட்டமாக கருதுகின்ற மனப்பாங்கும், அதன் விளைவான பாவ்லோவிய எதிர்வினையும். இது அவருடைய பிரச்சினை.இதற்கான தீர்வினை அவரே கண்டுபிடிக்கட்டும். இறுதியாக மீராவின் எழுத்துக்கள் பல polemical pieces என்று கருதத்தக்கவை. இதை எதிர்கொள்ள polemicsல் பயிற்சி வேண்டும். அரவிந்தனுக்கு அது இல்லை.எனவே தேவையற்றவற்றை முன் வைத்து தன் வாதத்தினை பலமிழக்க வைக்கிறார்.
வணக்கத்துடன்
ராதா.R
—-
radha100@rediffmail.com
- ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு, எம் யுவன் எழுதிய பகடையாட்டம் வெளியீட்டுவிழா – டிசம்பர் 14, 2004
- சர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15 , 2005
- சான் ஃப்ரான்சிஸ்கோ தமிழ் மன்றம் நாடகவிழா – டிசம்பர் 11 , 2004
- கடிதம் – டிசம்பர் 9,2004 – ஜெயமோகனின் ஐந்தாவது மருந்து– ஒரு குறிப்பு
- கடிதம் டிசம்பர் 9,2004
- சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வழங்கும் மார்கழி நாடக விழா
- கடிதம் டிசம்பர் 9,2004 – நேருவின் வரலாற்றறிவு ஒரு விளக்கம்
- கடிதம் டிசம்பர் 9,2004
- கடிதம் டிசம்பர் 9,2004 – சோதிப்பிரகாசமும் பாவாணரும்
- கடிதம் டிசம்பர் 9,2004
- கடிதம் டிசம்பர் 9,2004 – நேச குமாரின் கூற்று!
- பாரதியும் கடலும்
- சிறு வயது சிந்தனைகள் – பகுதி 1
- சில சென்றவார செய்திகள் (யுக்ரேன், டார்பார், ஏர் இந்தியா, JNUSU, ஊடகவியலாளர்கள், ஐராக்)
- உயிர்களை அலட்சியப்படுத்தும் நச்சு தொழிற்சாலைகள்
- ஜோ டி குரூஸின் ‘ ஆழிசூழ் உலகு ‘ – கடலறிந்தவையெல்லாம்…
- பாரதிக்கு வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்திரம் ( ‘மகாகவி பாரதி வரலாறு ‘ நூலின் முன்னுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்
- மக்கள் தெய்வங்களின் கதை 13 – வன்னியடி மறவன் கதை
- பேட்டி
- ஆதலினால் கவிதை செய்வீர். . .
- சரணமென்றேன் (காதல் கவிதைத் தொகுப்பு) : முன்னுரை
- புத்தர்களும் சித்தர்களும்
- நீங்க வெட்கப் படுவீங்களா ?
- ஆணி அடிக்கப்பட்ட ஆத்மாக்கள் ( ‘clenched soul ‘ ) பேப்லோ நெருதாவின் கவிதைகள்-(4)
- பாப்லோ நெரூதாவின் ‘மாச்சு பிச்சுவின் சிகரங்கள் ‘
- காதல் கடிதம்
- இப்படித்தான்….
- பாரதி இலக்கிய சங்கம் சிவகாசி – சி. கனகசபாபதி நினைவரங்கம் – 28.11.04
- மாச்சு பிச்சுவின் சிகரங்கள் – ஒரு முன் குறிப்பு
- புத்தர்களும் சித்தர்களும்
- பாப்லோ நெரூதாவின் ‘உ ன து பா த ங் க ள் ‘
- வாரபலன் – டிசம்பர் 9,2004 – ராகோல்ஸவம் , குஞ்ஞாலிக்குட்டி சோதனை ,இராதா இசைவிழா
- இஸ்லாத்தில் பர்தா : வரலாறும், நிகழ்வுகளும் – II
- கண்ணில் ஒன்றைக்குத்தி காட்சி கொடுத்தல் தகுமோ ?
- மனநிம்மதிக்கான மாற்றுத்தளம்
- ‘புலன் அடக்கத்தின் பொன் விழா’க் கொண்டாட்டம் – அன்று!,‘புலன் விசாரணை’ யில் சிக்கிய திண்டாட்டம் – இன்று !!
- நீங்களுமா கலைஞரே ?
- சட்டத்தை ஏய்க்க சங்கர புராணம்!
- காஞ்சி மடத்தின் ‘கும்பகோண ‘ மகிமைகள்
- பகையே ஆயினும்….
- நீலக்கடல் – தொடர்- அத்தியாயம் – 49
- மோகனம் 1 மோகனம் 2
- புனிதமானது
- பெரிய புராணம் – 21 ( இயற்பகை நாயனார் புராணம் தொடர்ச்சி )
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 12 : முத்துப்பட்டன் கதை
- மரபுகளை மதிக்கும் விருது
- மெய்மையின் மயக்கம்-29
- கெளரி ராம்நாராயணின் ‘கருப்புக் குதிரை ‘
- அணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன் (2)
- படைக்கப்படாத உயிரின் உதயத்தின் அழகியல்
- பெயரில் என்ன இருக்கிறது ?
- அம்மா
- அடியும் அணைப்பும்
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 6.வீதியோரச்சித்திரங்கள்
- கவிக்கட்டு 39-கனவுதானடி
- கீதாஞ்சலி (7) – என் வாழ்வில் கட்டுப்பாடு (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- அறிவியல் சிறுகதை வரிசை 4 – பூர்ணம்