ரவி ஸ்ரீநிவாஸ்
திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு,
கல்லால் அடித்துக் கொல்லப்படுவது போன்ற தண்டனைகள் எந்த நாட்டில் கடைபிடிக்க்ப்பட்டாலும், எந்த மத சிந்தனையின் கீழ் நியாயப்படுத்தப்பட்டாலும் அவை கண்டிக்கப்பட வேண்டியவைதான். இது போல் இந்தியாவில் பஞ்சாயத்துக்கள் , ஜாதி மற்றும் ஊர் பஞ்சாயத்துக்கள் தரும் தீர்ப்புகள் கொடுரமாக உள்ளன. இவையும் கண்டிக்கப்பட வேண்டியவைதான். நாகூர் ரூமியின் நூலினை நான் படிக்கவில்லை.ரூமி திண்ணையிலும், வேறு சிலவற்றிலும் எழுதியிருப்பதன் அடிப்படையில் பார்க்கும் போது அவரை ஒரு conservative என்றுதான் கருத முடிகிறது, fundamentalist ஆக அல்ல. மேலும் அவர் வலைப்பதிவில் இந்த தண்டனைக் குறித்து ஒரு நீண்ட பதிவினை இட்டுள்ளார். அதுவும் அவரை ஒரு கன்சர்வேடிவ் ஆக காட்டுகிறது.மிகவும் தயங்கியே சிலவற்றை முன் வைப்பது அதில் தெரிகிறது. எடுத்த எடுப்பில் கசையடி போன்ற தண்டனைகள் காட்டுமிராண்டித்தனமானவை என்று அவரால் கூற முடியவில்லை. அவர் எழுதியுள்ள நூலினைப் படிக்காமல் அது குறித்து நான் ஒன்றும் சொல்வதாக இல்லை. நானறிந்த வரையில் ரூமி தீவிரவாதத்தினையோ அல்லது வன்முறையினையோ ஆதரித்து எழுதியதில்லை. ஆனால் அரவிந்தன் நீலகண்டன குஜராத் கலவரம் குறித்து எழுதியது திண்ணையில் தெளிவாக இருக்கிறது. இது குறித்து சூர்யா விமர்சித்திருக்கிறாரா. அப்படியிருக்கும் போது ரூமியைப் பற்றி இவ்வாறு எழுதுவது ஏன். உண்மையான நடுநிலையாளர் என்றால் அரவிந்தன் நீலகண்டன் கருத்தினையும் விமர்சித்திருக்க வேண்டும். இன்று ஹிந்த்துவ ஆதரவு என்பதை நேரடியாகச் செய்யாமல் மறைமுகமாக அதை ஆதரிக்கும் போக்கு இருக்கிறது. இடதுசாரிகளையும், கிறி ?துவர்களையும், இஸ்லாமியரையும் விமர்சிப்பது என்ற பெயரில் ஹிந்த்துவவாதிகள் சொன்னதை வேறு வார்த்தைகளில் சொல்வதுதான் அது. ஜெயமோகனும்,சூர்யாவும் அதைத்தான் செய்கிறார்கள்.
இன்னும் எத்தனை நாள்தான் அரவிந்தன் நீலகண்டன் இப்படி எழுதிக்கொண்டிருப்பார். அவர் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் செய்த மோசடிதான் திண்னையில் வெளிப்படையாக மூலத்துடன் உள்ளதே. அப்படி இருக்கும் போது இன்னார் இதை இப்படி திரித்து விட்டார், இன்னார் இந்த மேற்கோளை இப்படி காட்டிவிட்டார் என்றெல்லாம் எழுதினால் அவர் செய்த மோசடி இல்லை என்றாகிவிடுமா அறிவியல் கண்ணோட்டத்தில் கீதையை ஆய்ந்து அதில் அறிவியலின் அடிப்படையில் எவை தேறும், எவை தேறாது என்று அவர் முதலில் சொல்லட்டும்.
முஸ்லீம் பெண்கள் நிலை குறித்து காட்டப்படும் அக்கறை காரணமாக அனைத்து நாடுகளிலும் முஸ்லீம் பெண்களுக்கு உரிமையே இல்லை, உலகெங்கும் முஸ்லீம் பெண்கள் ஒரே மாதிரியான சட்டங்களால் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற கருத்தினை முன் வைக்கக் கூடாது. மாறாக ஏற்பட்டு வரும் மாற்றங்களையும், பெண்ணிய அமைப்புகள் பல மாற்றங்களை முன்னிறுத்தியிருப்பதையும், மனித உரிமை,சமத்துவம் குறித்து அவை காட்டும் அக்கறையையும், அவை எதிர்நோக்கும் சவால்களையும் கருத்தில்
கொள்ள வேண்டும் எனக் கருதுகிறேன்.இது குறித்து மேலும் அறிய
http://www.wluml.org
அண்மையில் ஷிரீன் எபேதி எழுதியுள்ள ஒரு கட்டுரையில் ஈரானில் உள்ள பல்கலைகழக மாணவர்களில் 63% பெண்கள் என்றும், சம்பளத்திற்கு வேலை செய்வோரில் 43% பெண்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். http://www.nytimes.com/2004/11/16/opinion/16ebadi.html
ஆனால் திண்ணையில் மிகப் பெரும்பான்மையான சமயங்களில் இ ?லாமும், பெண்களும் குறித்த ஒரு அறிவுபூர்வமான விவாதத்திற்கு பதிலாக ஒற்றைப் பார்வையினையே முன்னிறுத்தும் கடிதங்களும், கட்டுரைகளும் படிக்கக் கிடைக்கின்றன. இப்போக்கு மாறினால் நல்லது.
K.ரவி ஸ்ரீநிவாஸ்
—-
k.ravisrinivas@gmail.com
- ஞானப் பெண்ணே
- கடிதம் நவம்பர் 18,2004
- அவளோட ராவுகள் -3
- ஆசாரகீனனின் ஏக்கம் தீர்ந்ததென்றால்
- ஃபோட்டோ செய்தி: தைரியலஷ்மியின் பக்தர் நேரியல் கட்டி…. கைகட்டி பணிவாக…
- பார்த்திபனின் அமெரிக்கத் தமிழர் பற்றிய பேச்சு
- மக்கள் தெய்வங்களின் கதை – 10
- ஓவியப் பக்கம் ஏழு – இஸாமு நகூச்சி – வெளியை உணர்த்தும் ச்ிற்ப உடல்
- தமிழின் மறுமலர்ச்சி – 6
- வையாபுரிப் பிள்ளை – செய்ய வேண்டியவை
- தமிழர்களின் அணு அறிவு
- கடிதம் நவம்பர் 18,2004
- ஒடுக்குமுறைக்கு எதிரான அரங்கு – நவம்பர் 21, 2004
- கடிதம் நவம்பர் 18,2004 – நேசகுமாருக்கு விளக்கம் 1. இறுதி நபி
- கவிக்கட்டு 35 – வசந்தகாலங்கள்
- தீ தந்த மனசு
- கவிதைகள்
- நகரில் தொலைந்த நட்சத்திரங்கள்
- பெண்சிசுக்கொலைகளும் பிரிட்டிஷ் அரசாங்கமும்
- பயங்கரவாதமும், பலதார மணமும்
- ஜெயேந்திரர் கைது பற்றி அறிக்கை
- அணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன்
- கடிதம் நவம்பர் 18,2004 – இயக்குனர் வான் கோவின் குறும்படம்
- கடிதம் நவம்பர் 18,2004 – நேசகுமாருக்கு விளக்கம் 2. பர்தா
- காணாமல் போன கடிதங்கள்
- மெய்மையின் மயக்கம்-26
- பேரணைகள் அனைத்தும் வேதனைகள் அளிப்பவையா ? இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (9)
- ஜெயேந்திரர் கைது – ஜெயலலிதா அரசின் தொடரும் அராஜகம்
- இளித்ததாம் பித்தளை! – துக்ளக் இதழில் குருமூர்த்தி எழுதிய கட்டுரையின் தாக்கம்
- ஆளுநர் பதவியும், ஒரு கேலிக்கூத்தும்
- காஞ்சி சங்கராச்சாரியார் கைது
- சங்கடமடமான சங்கரமடம்
- சகுந்தலா சொல்லப் போகிறாள்
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -46
- வெகுண்டு
- செக்கென்ன ? சிவலிங்கமென்ன ?
- அறிவியல் புனைகதை வரிசை 1 : ஐந்தாவது மருந்து
- போரும் இஸ்லாமும்
- செயேந்திரரும் அவரின் சீட கோடிகளும்
- நெஞ்சுக்குள்ளே ஆசை
- ஒப்புமை சைகையும், இலக்கமுறை சைகையும்
- அணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன்
- பாப்லோ நெரூடாவின் கவிதை : மாச்சு பிச்சுவின் மலை முகடுகள்
- இந்தமுறை
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 3- பெண்புகல்பரிசு
- கீதாஞ்சலி (4) சிறைக் கைதி! (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- பெரியபுராணம் – 18 : 2.தில்லைவாழ் அந்தணர் சருக்கம்
- நன்றி, சங்கரா! நன்றி!!
- எலிமருந்துக்காரனின் பகல் சாப்பாட்டு நேரம் – அருண் கொலட்கர்
- மீரா – அருண் கொலட்கர்
- புரூட்டஸ்