கடிதம் அக்டோபர் 14,2004

This entry is part [part not set] of 46 in the series 20041014_Issue

சி. ஜெயபாரதன்


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

நண்பர் அரவிந்தன் நீலகண்டன் நா. இளங்கோவுக்கு கடிதத்தில் [2004 அக்டோபர் 1] ‘ஈவேராவோ, நேருவோ வரலாற்று அறிஞர்கள் அல்லர் ‘ என்று எழுதி இருந்தார். இந்திய அரசியல் தலைவர்களைப் பற்றி நன்கு அறிந்த அரவிந்தன் பண்டித நேருவைப் பற்றி இவ்விதம் தவறாகத் திண்ணையில் எழுதியதைக் கண்டு நான் மிகவும் வருந்துகிறேன்.

கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த பாரத அரசியல் மந்திரிகளில் பண்டித நேருவைப் போன்று இந்திய வரலாற்றையும், உலக சரித்திரத்தையும் ஆழ்ந்து படித்து, ஆங்கில இலக்கியங்களான ‘Discovery of India (580 pages) ‘, ‘Glimpses of World History (990 pages) ‘ ஆகிய வரலாற்றுக் காவியங்களைப் படைத்தவர் வேறு யாரும் இல்லை! அரவிந்தன் இக்காவியங்களைப் படிக்காது, நேரு வரலாற்று அறிஞர் அல்லர் என்று எழுதியதாகத் தெரிகிறது.

அரவிந்தன் நீலகண்டன் நேருவைப் பற்றித் தவறாக எழுதிய தன் அறியாமைக்கு வருந்தி திண்ணை வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

சி. ஜெயபாரதன், கனடா.

(jayabarat@tnt21.com)

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts