சின்னக்கருப்பன்.
அன்புநிறை நண்பர் பித்தனுக்கு,
நீங்கள் கூறுவது உண்மைதான். ஆட்சிக்கு வந்து 100 நாட்களே ஆனவர்களிடம் வேலை வாய்ப்பு செய்து தரவில்லை என்று கேட்பது சரியல்லதான். ஆனால், நான் அவ்வாறு கேட்கவில்லை. திரு சிவராஜ் பாட்டில் அவர்களது அணுகுமுறையே என் விமர்சனத்துக்குக் காரணம். மணிப்பூரில் இருக்கும் பிரச்னையின்வேர் மூலமே காங்கிரஸ்தான். அதிலும் முக்கியமாக நேரு. காஷ்மீர் பிரச்னையின் வேர்மூலமே காங்கிரஸ்தான். அதிலும் அந்த பிரச்னையை தீவிரப்படுத்தியது நேருவே. மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 100 நாட்களே ஆகியிருக்கின்றன என்று கூறுவதும் சரியல்ல. இடையில் வந்த பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சி தவிர சுதந்திரமடைந்து இதுவரை ஆட்சி செய்துவந்தது காங்கிரஸ் அல்லது காங்கிரஸிலிருந்து வெளியேறிய காங்கிரஸ் கலாச்சாரத்துடன் ஆட்சி செய்த ஜனதா கட்சியினர்தாம்.
மேலும் நீங்கள் குறிப்பிடும் திட்டங்கள் போல பல ஆயிரக்கணக்கான திட்டங்கள் காங்கிரஸ் கட்சியினரால் அறிவிக்கப்பட்டு நடுகல்கள் போல நாடெங்கும் நின்றுகொண்டிருக்கின்றன. அதனால்தான் நான் பாரதிய ஜனதா கட்சி கோல்டன் குவாட்டிலேட்டரல் அறிவிக்கும்போது , இது எந்தக் காலம் நிறைவு பெறும் என்ற தேதியோடு அறிவித்திருந்ததைப் பாராட்டினேன். அது ஏறத்தாழ இன்று நிறைவு பெற்றிருக்கிறது.
மேலும் பணத்தை பூட்டி வைத்தால் பொருளாதார வளர்ச்சி ஏற்படாது. இந்த பட்ஜட் பற்றி நான் தனியே ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். வரவுக்கு ஏற்ற செலவு செய்தால்தான் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பணவீக்கம் எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒவ்வொரு மாதமும் 200 ரூபாய் (அப்போது பெரிய தொகை) சேமித்து வந்தவர்கள், இந்திரா காந்தி ராஜீவ்காந்தி காலத்தில் பைசா பெறாது என்பதை திடாரென்று உணர்ந்தார்கள்.
உதாரணமாக, பணவீக்கம் 10 சதவீதம் இருக்கும்போது, சேமிப்பு கொடுக்கும் வட்டி வீதம் 10 சதவீதமாக இருந்தால், உங்கள் பணம் அப்படியே இருக்கிறது, அதிலிருந்து உண்மையிலேயே கிடைக்கும் வட்டி சதவீதம் 0 என்று பொருள். பணவீக்கம் 3 சதவீதமாக இருந்து, சேமிப்பு கொடுக்கும் வட்டி வீதம் 8 சதவீதமாக இருந்தால், உண்மையிலேயே கிடைக்கும் வட்டி வீதம் 5 சதவீதம். 10 சதவீதம் வட்டி கொடுப்பது பெரிய விஷயமல்ல. 3 சதவீதமாக பணவீக்கம் இருக்கும்போது அதைவிட அதிகமாக வட்டி கொடுப்பதுதான் பெரிய விஷயம்.
பணவீக்கம் பெரும் ஆபத்து. உலகவங்கி பொருளாதார மேதைகளுக்கு அது தெரியாது. அவர்களைப் பொறுத்தமட்டில் அது இன்னொரு தோல்வியடைந்த பரிசோதனை. காமராஜர் போன்ற மக்கள் தலைவர்களுக்குத்தான் அதன் சொந்தக்கதை சோகக்கதை புரியும்.
மன்மோகன்சிங் உலகவங்கியில் பொருளாதார நிபுணராக இருந்தவர். உலகவங்கியின் அட்டூழியங்களுக்கு அவர் எந்த அளவு பொறுப்பாளி என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆதரவாக, ஆப்பிரிக்கா தென்னமெரிக்கா போன்ற மூன்றாம் உலக நாடுகளில், உலகவங்கி பண்ணிய அட்டூழியங்கள் இன்று ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இன்று இந்திய அரசுக்கு பொருளாதார ஆலோசனை சொல்ல உலக வங்கி, ஐ .எம். எஃப் ஆட்கள் என்று அமெரிக்க ஐரோப்பிய ஆட்களை கொண்டுவந்து உட்காரவைத்திருக்கிறார் மாண்டெக் சிங் அலுவாலியா. இவர் மன்மோகன் சிங்கால் திட்டக்கமிஷனின் டெபுடி சேர்மனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் ஐஎம்எஃப் (இண்டெர்நேஷனல் மானட்டரி ஃபண்டு) ஆள். இந்த அமெரிக்க ஐரோப்பிய ஆட்கள் இந்திய பொருளாதாரத்தை நிர்வகிப்பது மாபெரும் ஆபத்து. இதுபோன்றுதான் நடக்கும் என்று சோனியா பிரதமராகக்கூடாது என்று எழுதிய கட்டுரையில் எழுதியிருக்கிறேன். இந்த ஐரோப்பிய அமெரிக்க ஆலோசகர்கள் அர்ஜெண்டைனா, பிரேசில் போன்ற நாடுகளில் உருவாக்கிய தீயவிளைவுகள் நமக்குத் தெரியா வண்ணம் நம் பத்திரிக்கைகள் செயல்படுகின்றன. நான் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட இவ்வாறு மாண்டெக் சிங் அலுவாலியா நியமிக்கப்பட்டிருப்பதை எதிர்த்திருக்கின்றன.
ஐ எம் எஃப், உலகவங்கி போன்றவை எந்தக்காலத்திலும் எந்த நாட்டிலும் நல்லதை செய்ததே இல்லை. இந்த அமைப்புக்களின் அட்டூழியங்களை விவரித்து திண்ணையில் ஏராளமான கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.
நட்புடன்
சின்னக்கருப்பன்.
- அவசியம் படியுங்கள்:வேல்முருகன் போன்ற அன்பர்களுக்கு உதவ வேண்டும்
- கடிதம் செப்டம்பர் 16,2004
- கடிதம் செப்டம்பர் 16,2004
- வாக்கிற்காக ஒரு வாக்
- சமைந்தவர்கள்(பிறைநதிபுரத்தானுக்கான பதில் அல்ல இது. சமைந்தவர் அத்தனைபேரின் பார்வைக்கும்…)
- கருணாநிதிக்கு ஒரு வார்த்தை…
- கர்நாடக சங்கீத நிகழ்ச்சி -செப் 25,2004
- கடிதம் செப்டம்பர் 16,2004
- கடிதம் செப்டம்பர் 16,2004
- வைகறை இலக்கிய வாசல்-18-09-04
- கவுரியின் எதிர்காலம் ?
- திண்ணையும் மரத்தடியும் இணைந்து நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி
- கடிதம் செப்டம்பர் 16,2004
- தமிழ் தெய்வீகம் இஇணைய தளங்கள்
- கடிதம் செப்டம்பர் 16,2004
- மெய்மையின் மயக்கம்-17
- பசுமைப் புரட்சி….
- எங்கள் பாரதி ஒரு தென்றல்.
- அந்தத் தருணங்களில்…!
- கவிக்கட்டு 25-காதலின் மறுவடிவம்
- தேடுகிறேன் தோழி
- ஆட்டோகிராஃப் 18-ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருள் என்னவோ ?
- சொன்னார்கள்
- அனைத்துலக அரங்கில் தமிழ்
- சித்தனாய் நானிருந்தால்.. ?
- அந்தத் தருணங்களில்…!
- பாரதி (பா)ரதத்தின் சாரதி
- பூகம்பம்
- பெரியபுராணம் – 9
- வாழ்வதற்காக சாகத்துணிந்த மீனவர்களும் சேது சமுத்திரமும்
- ஆய்வுக் கட்டுரை: முகப்பேறு ஆய்வு
- சுந்தர ராமசாமியுடன் ஒரு கலந்துரையாடல் – செப்டம்பர் 19,2004
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 37
- அக்கினி விதைகள்
- இரவுத்தினவுகள்
- பெ அய்யனாரின் ‘அலை புரளும் வாழ்க்கை ‘- நூல் அறிமுகம்
- சமூக விரோதியாகிய கார்
- ஓர் இனிய மாலைப் பொழுது இயக்குனர் சேரனுடன்…
- வாசிப்பும் எழுத்தும் எதிர்வினையும்
- சரித்திரப் பதிவுகள் – 2 : U – படகுகள்
- பூச்சிகளைத் தின்னும் செடிகள்
- உயர் இரத்த அழுத்தம் – ஓர் அமைதிக் கூற்றுவன்
- நாட்குறிப்பு
- கழுதைகளுக்குத் தெரியுமா….
- தோப்பு