கடிதம் செப்டம்பர் 9,2004

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

அரவிந்தன் நீலகண்டன்


திருவாளர். தம்மாம் கூறியவற்றை அப்படியே எடுத்துக்கொண்டு பரிசீலிக்கலாம். அவர் கூறும் விடுதலைப் போராட்ட வீரர் ஐந்து வருடங்கள் அந்தமானில் கழித்தார் -1930களில். வீர சாவர்க்கர் 16 வருடங்கள் அந்தமான் செல்லுலார் சிறையில் கழித்தார் – 1910களில். இரண்டு கால கட்டங்களுக்கும் அனேக வேறுபாடுகள் உண்டு. 1910களில் இருந்த மனிதத்தன்மை சிறிதுமற்ற, கைதிகள் விலங்குகளை விட கேவலமாக நடத்தப்படும் நிலை பின்னர் அவ்வளவாக இல்லை. வீர சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததை இந்த சூழலில் மட்டுமே பரிசீலிக்க வேண்டும். மேலும் வீர சாவர்க்கர் பலமுறை தம் இணைப்புத்திறனை நிரூபித்துள்ளார். சியாம்ஜி கிருஷ்ண வர்மா ஆகட்டும், மேடம் காமா ஆகட்டும், ராஷ் பிகாரி போஸ் ஆகட்டும், வீர சாவர்க்கர் உலகெங்கும் பரவியிருந்த பாரத விடுதலைப் போராளிகளில் இணைப்பதில் கண்ட திறமையும் வெற்றியும் தன்னிகரல்லாதது. அதற்கு இணையான ஒரு மேதமையை இஸ்ரேலின் டேவிட் பென் கொரியனிடம் மட்டுமே காணமுடியும். இந்து-முஸ்லீம் இரு தேச கோட்பாடு அன்றைய சூழலில் நடைமுறை உண்மையாக இருந்தது. டாக்டர் அம்பேத்கரும் அதன் யதார்த்தத்தினை அங்கீகரித்தார். வீர சாவர்க்கர் கூறியதைக் காட்டிலும் கடுமையான வார்த்தைகளில் அவர் அதைச் செய்தார். பாரத ஆன்மிக ஒருமைக்கும் ஊறு விளைவிப்பதாக வர்ணித்த அவர் முஸ்லீம் மக்கள் தொகை முழுமையாக பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட வேண்டியது இந்திய சமுதாய நலத்திற்கு முக்கியமானது என கருதினார்.(இதில் எனக்கு உடன்பாடு இல்லை. எந்த அளவுக்கு ஒரு ஹிந்துவுக்கு வேத உபநிஷத பாரம்பரியத்தில் உரிமை உண்டோ அதேஅளவு ஒரு பாரத முஸ்லீமுக்கும் உண்டு. பாரத பாரம்பரியத்துக்கு அன்னியமானது வகாபிய இஸ்லாமிய அடிப்படைவாதம்தானே ஒழிய முஸ்லீம்கள் அல்ல) சர்.சையது அகமது கானில் தொடங்கி மிகுந்த கவனத்துடனும், பிரிட்டிஷ் ஆதரவுடனும் விதைக்கப்பட்ட அந்த நச்சுவிதைக் கோட்பாடு சமூக யதார்த்தம் ஆனதில் பெரும் பங்கு வகித்தது கிலாபத் இயக்கம். இந்தச் சூழலில் வீர சாவர்க்கர் இரு தேசக் கோட்பாட்டின் சமூக யதார்த்தத்தை காங்கிரஸ் மேலிடம் புரிந்து கொண்டது மிகவும் காலம் கடந்துதான். பாகிஸ்தானை ஒரு தனி நாடாக அங்கீகரித்ததன் மூலம் காங்கிரஸ் தலைமை இரு தேச கோட்பாட்டின் முன் மானம் கெட்ட முறையில் மண்டியிட்டது. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் சிறிதே யதார்த்தவாதிகளாக முன்னரே செயல்பட்டிருந்தால், இலட்சக் கணக்கான ஹிந்து-சீக்கிய-முஸ்லீம் உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்க முடியும். சீக்கியர்களுக்கு எதிராக மிகக்கொடுமைகளை செய்த வரலாறு இஸ்லாமினுடையது. மற்றும் இஸ்லாமிய அரசாக இந்தியாவை மாற்றுவதற்கான முன்னேற்பாடாக இன்று நடைபெறும் போலி மதச்சார்பின்மைவாதிகளுடையது. லாகூரில் இருந்த சீக்கிய மற்றும் இந்து குடும்பங்கள் இன்று எங்கே போயின ? அவற்றை துடைத்தழித்த புகழ் யாருடையது ? லயால்பூர் கலசா கல்லூரியின் முதல்வராக இருந்த சர்தார் குர்பஜன் சி தாலிப் அவர்களால் சேகரிக்கப்பட்டு 1950 இல் சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியால் வெளியிடப்பட்ட அறிக்கையிலிருந்து ஒரு பகுதி:

‘The effect of such assurances, multiplied by the utterances of other important Muslim League leaders was that exodus of Hindus and Sikhs from Lahore for the moment decreased. Hindu and Sikh capital was fast flowing out of Lahore. Banks, companies and business houses were obtaining permission to shift their headquarters from Lahore. But the effect of these assurances lasted only for a very short while. Hindus and Sikhs realized with a rude shock that the speeches of the Muslim League leaders were merely a smoke-screen to conceal their designs of securing complete elimination of the minorities from their own areas, and were meant only to lull them into a false sense of security. These very leaders were financing and guiding the operations of the goondas of the Muslim League, who in collaboration with the police did the work of arson and stabbing. It was after this appeal that on the 10th July 7 Hindus and Sikhs are reported to have been killed and 40 injured in the Muslim attack on the Lahore Loco Workshop. It was during this time that Sikhs continued to be murdered in Baghbanpura, Singhpura, Faizbagh, Mozang, Shahi Mohalla, Garhi Shahu and other areas wherever the Muslims wanted to carry on their operations. In July it was that bombs began to be thrown on non-Muslims in trains, such as at Moghalpura, and murders of groups took place in trains as at Harbanspura. In arson, Bhati Gate, Tibbi, Chauk Surjan Singh, Landa Bazar etc. figured. Sikh Gurdwaras were burned inside the city. By the end of July it was all going as the Muslims desired. Localities burned were: Shish Mahal Road, Chaumala Sahib Gurdwara, Mela Ram Road, Pipal Vehra, Moti Panda Bazar, Fleming Road, Bazar Sathan, Moti Bazar, Bazar Tutian, Dabbi Bazar, Bazaz Hatta, Chauburji, Krishna Nagar, Mohalla Sarin and the new Shalamar Garden situated to the Western side of the city. Even the Mall was no longer safe, where several cases of arson occurred and Hindu and Sikh property was burned. ‘

தி ஸ்டேட்ஸ்மன் ஏப்ரல் 15, 1947 ராவல்பிண்டி தோகா கால்ஸா மாவட்டத்திலிருந்து கொடுத்த செய்தி அறிக்கை: ‘3000-பேர் கொண்ட , ஆயுதமேந்திய முஸ்லீம்கள் அங்கு சிறுபான்மையினராக இருந்த ஹிந்து-சீக்கியரை தாக்க ஆரம்பித்தனர். அனைத்து ஹிந்து சீக்கிய ஆண்களும் போராடி மடிந்தனர். அங்கிருந்த 90 பெண்கள் தங்கள் மானத்தைக் காப்பாற்ற கிணற்றில் குதித்தனர். மூவரே உயிர் தப்பினர் ஏனெனில் அங்கு போதுமான நீர் இல்லை.” இருதேசக் கோட்பாட்டு யதார்த்த நிலையை காலம் கடந்த பின்னரும் ஏற்காத ஒரே தலைவர் மகாத்மா காந்திதான். பாகிஸ்தானை ஒரு அன்னிய தேசமாகக் கணக்கில் எடுக்கவே அவர் மறுத்து வந்தார். இது பஞ்சாபில் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு பலியாகி தப்பி வந்த இந்து -சீக்கியர்களுக்கு மகாத்மா 1 மே 1947 இல் அளித்த செய்தி., “முஸ்லீம்கள் இந்துக்களைக் கொல்ல வந்தால் அவர்கள் புன்சிரிப்புடன் மரணத்தை ஏற்க வேண்டுமென நான் கூறுவேன். நான் கொல்லப்படுகையில் என் மரணத்திற்கு என் மகன் பழி தீர்ப்பான் எனும் எண்ணம் எனக்கு எழுமானால் நான் உண்மையிலேயேI ஒரு பாவிதான். நான் எவ்வித வருத்தமும் இன்றி சாக வேண்டும். …நீங்கள் கேட்கலாம், அப்படியானால் அனைத்து ஹிந்துக்களும் சீக்கியர்களும் சாக வேண்டியதுதானா ? என்று. ஆம் என்றே நான் பதிலளிப்பேன். அத்தகைய புனித மரணம் நிச்சயமாக வீண் போகாது.” (Collected Works of Mahatma Gandhi, vol.LXXXVII, p.394-5) சீக்கியர்கள் விவகாரத்திற்கு வருவோம். இன்றைக்கு சீக்கியர்கள் மட்டுமல்ல ராமகிருஷ்ண இயக்கம், ஆரிய சமாஜம், நாராயண குரு இயக்கம், ஐயா வைகுண்டரின் ‘அன்பு வழி ‘ கூட தங்களை சிறுபான்மையினர் என்றுதான் கூற விரும்புகின்றனர். காரணம் சிறுபான்மையினராக மாறினால் அரசு தொந்தரவு இல்லாமல் இருக்கலாம் என்பதுடன் சலுகைகளும் கிடைக்கும் என்பதால். குரு கிரந்த சாகிப்பில் ஸ்ரீ ராமனின் பெயர் 2500 முறை வருகிறது. நிர்க்குண பிரம்மமாக விளங்கும் இறைவனுக்கு சீக்கியம் அளிக்கும் பெயர் குதாவோ அல்லது அல்லாவோ அல்ல மாறாக ‘ஏக் ஓம்கார் ‘ என்பதாகும். ராமனுக்கு மிகப்பிரியமான (அப்துல் கலாமுக்கும் பிரியமான) ஸ்ரீ ராகத்தில் குருகிரந்த சாகேப் தொடங்குகிறது. நானக்கின் சிருஷ்டி கானம் ரிக்வேத எதிரொலியாக விளங்குவதை பல சீக்கிய ஞானிகள் மீண்டும் மீண்டும் வியந்து கூறியுள்ளனர். சீக்கிய வாழ்வின் முடிவில் சிதையூட்டலின் பின் பாடப்படும் குரு கிரந்த சாபேப் பாடல்களின் ராகம் ராமகலி. ஒருவருடத்திற்கு முன் தி வீக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் எம்.எஸ்.கில் கூறினார், ‘ஜிகாத் என்பது நம் (ஆம்- நம்) கலாச்சாரத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட சமயப்போர். ‘ மேலும் சீக்கிய காஷ்மிர் பயங்கரவாதங்களை ஒப்பிடுகையில் அவர் கூறியதாவது சீக்கியர்களுக்கும் ஹிந்துக்களுக்குமான உறவின் தனித்தன்மை சீக்கிய பயங்கரவாதத்தை அழிப்பதில் பேருதவியாக இருந்தது என்று. பிறைநதிபுரத்தானுக்கு குரு நானக்கின் பாடலையே அழைப்பாக வைக்கலாம்:

‘நல்லமனிதர்களுக்கு நன்மை அளிப்பது ஹரியிடம் அடையும் சரணமே

வேத புராணங்களினைப் படிப்பதால் கிடைக்கும் பலன்

ஹரியின் நாமத்தை தியானிப்பதே.

பேராசையும், அறிவு மயக்கமும், வீணான செல்வமும்

எவரை மயக்குவதில்லையோ அவரே துன்பமும் இன்பமும்

ஒன்றெனக் கருதும் இறை பிம்பமாக ஒன்றியவர்

அத்தகையவரே காக்கப்படுவார் – நானக் உறுதியாக உரைத்திடுகிறான்

இன்ப துன்பத்தில் சமநிலை உடையோனே உண்மை ஞானி ‘ (குரு கிரந்த சாகிப் கெளரி 2.7)

ஆதிக்கப் பேராசையையும், ஆபிரகாமிய மத அறிவு மயக்கத்தையும், பெட்ரோ-டாலர்களின் கொழுப்பினால் போடும் மதி மயங்கிய வெறியாட்டங்களையும் துறக்கவேண்டும். சீக்கியராகவோ, ஹரி பக்தராகவோ மாறி ஹரியின் நாமத்தை தியானித்து ஹரியின் சரணத்தை அடைந்து, ஹரி மந்திருக்குச் சென்று அமிர்த தடாகத்தில் மன அழுக்குகளை கரைத்து வாருங்கள் சகோதரரே. சத்தியமும், சுந்தரமும், நிரந்தரமுமான சத் ஸ்ரீ அகால் என விளிக்கப்படும் ஏக ஓங்கார இறைவன் உங்களுக்கு அருள் செய்ய பிரார்த்திக்கிறேன். கூடவே தம்மாம் துண்டு தகவல்களுடன் கடலாழத்தை வாலால் நரி அளக்க முற்பட்டது போல வீர சாவர்க்கரின் வீரத்தை ‘தி ஹிண்டு ‘வின் அரை வேக்காட்டுப் பத்திரிகைச்செய்தி துணுக்குகளுடன் ஆழம் பார்க்க நினைப்பவர்களுக்கும் ‘சன்மதி தே பகவான் ‘.

—-

infidel_hindu@rediffmail.com

Series Navigation

author

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்

Similar Posts