தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம். (எந்தத் தேர்தலாயிருந்தால் என்ன?)

This entry is part [part not set] of 28 in the series 20090409_Issue

ஈஷா ஷக்தி


அ.இ.அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் தொடர்ச்சி:

ஒகேனக்கல்:
– உடனடியாக ஒகேனக்கல் பிரச்சினை தீர்க்கப்பட்டு ஒகேனக்கல் குடி தண்ணீர் மதுரைக்கும் விரிவுபடுத்தப்படும்.

காஞ்சிப் பிரச்சினை:
– சங்கர ராமன் கொலையில் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடித்து, அவர் எந்தச் சமயத்தைச் சார்ந்தவராக இருப்பினும், தண்டனை பெற்றுத் தந்து, நிச்சயம் வழக்கை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவோம்.

பலியில் மாற்றம்:
– ஆடு, மாடு பலி கொடுப்பதை மட்டுமல்ல உண்மையான புலியைப் பலி கொடுப்பதையும் ஆதரிப்போம். மாற்றங்களை எப்போதும் வரவேற்போம்.

பிரதம வேட்பாளர்:
– சுப்பிரமணிய சாமியை பிரதமர் வேட்பாளராக அ.தி.மு.க. முன்னிறுத்தும். ஆல்டெர்னேடிவ் வேட்பாளராக ஜெயலலிதா பெயரையும் கொடுப்போம்.

உலகப் பொருளாதாரம்:
– உலக பொருளாதார மந்தத்தைப் போக்க உட்வாட்டர் கிரேப்வாட்டரை அனைத்து நாட்டுக் குடிதண்ணீரிலும் கலந்து கொடுக்கப்படும்.

வருவாய் மேம்பாடு:
– வருமானமே இல்லாத அதிமுக உறுப்பினர் யாரும் இல்லை எனும் வண்ணம் அனைவருக்கும் வருவாய் கிட்ட வழிமுறை செய்யப்படும். ஒருவர் முதல் ஆண்டிலிருந்து தனது ஆயுள் காலம் வரையில் அதிமுகவில் எவ்விதம் முன்னேற முடியுமென்பதற்கு ரோட் மேப் செய்யப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம். (எந்தத் தேர்தலாயிருந்தால் என்ன?)

தே.தி.மு.க வாக்குறிதிகள்:

விஜய்காந்த் முன்னுரை:
தி.மு.கவும், அதிமுகவும் இதுவரையில் மாற்றி மாற்றி உங்களைக் கொள்ளை அடித்திருக்கிறார்கள். இந்த முறை எங்களுக்கு வாய்ப்பளியுங்கள்.

முதலில் என்னை ஏழைகளின் ரஜினிகாந்த், டூப்ளிகேட் ரஜினிகாந்த் என்றார்கள். எனக்கு நானோ மக்கள் ”கலைஞர்”எனப் பெயர் வைத்துக் கொண்டேன் . ஆனால் பின்னர் எனது மன்றத்தினர் யாருக்கும் கேட்காமள் எனக்கு மட்டும் கேட்கும்படி என்னை கறுப்பு எம்.ஜி.ஆர் என்றார்கள்.

இறந்து போன எம்.ஜி.ஆருக்கு அல்வா கொடுக்களாமா என்று என்னைக் கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்று சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். உயிரோடு இருக்கும் கருணாநிதிக்குத்தான் முதலிள் தங்கப் பேனாவெள்ளாம் கொடுத்து அல்வாக் கொடுத்தேன். ஏனோ அவர் என்னைக் கண்டுகொள்ளவில்லை.

எனவேதான் என்ன செய்யளாம் என்று யோசித்தபோது, ஆபத்பாந்தவனாக எங்களூர் சுப்பிரமணியசாமிதான் இறந்தவருக்கு அல்வா கொடுக்கும் வளியை யுத்தியை எனக்குக் காட்டினார். அவர் யார் இறந்தாளும், அவருக்கே தெரியாத பள உண்மைகளைச் சொல்லி உளகத்திற்கே அல்வாவும் உதாரணமும் காட்டியிருக்கிறார். அவர் இந்திரா, எம்.ஜி.ஆர், ராஜீவ் காந்தியைப் பற்றிச் சொன்னதெள்ளாம் உங்களுக்கு நினைவுக்கு வரலாம். எனவேதான் அவரைப் பின்பற்றி எம்.ஜி.ஆருக்குக் கனவிலேயே நான் ரசிகன் என்றெள்ளாம் சொள்ளவேண்டியது ஆயிற்று.

தமிளர்களே ஒன்று மட்டும் சொள்ள ஆசைப் படுகிறேன். நான் எவருக்கும் கொடி தூக்கியவன் கிடையாது. எள்ளாரையும் எனக்குத் தூக்க வைப்பதுதான் எனது நோக்கம். இன்று உங்களுக்கு எம்.ஜி.ஆரின் மீது சத்தியம் செய்து சொள்கிறேன் – வருங்காளத்தில் எம்.ஜி.ஆரைத்தான் சிவப்பு விஜய்காந்த் என்று நீங்கள் சொள்ளும்படி செய்வேன்.

தேவைப்பட்டிருந்தால் கோடிகளை வாங்கிக் கொண்டு எப்போதோ உங்களுக்கெல்லாம் டாடா காட்டிவிட்டுப் போயிருப்பேன். ஆனால் சில கோடிகளுக்காகவா நான் அப்படிச் செய்வேன்.? என் மனைவி நான் கொடுத்த அயன் பாக்ஸ் ஸ்கீமிற்கே சென்னையில் பாதி எங்களுக்குத்தான் சொந்தமாகி இருக்க வேண்டுமென்று சொன்னார். எனவே அப்படியெல்லாம் அவசரப்பட்டு அரை குறைக் காரியம் செய்ய மாட்டோம். எனவே உங்களுக்குக் காரியம் செய்யவே கடன் வாங்கியாவது கட்சி வளர்ப்போம், கஞ்சி குடித்தாவது உங்களுக்குத் தொண்டு செய்வோம்.

திமுக, அதிமுக, பாமக யாராவது உங்களுக்குக் காரியம் செய்யக் கவலைப் பட்டிருக்கிறார்களா? குறைந்த பட்சம் சிந்தித்து ஒரு ஸ்டேட்மெண்டாவது விட்டிருக்கிறார்களா? உங்கள் வீடு தேடி வந்து காரியம் செய்யவே நான் இருக்கிறேன். கட்சியில் என்னை மீறி எவனும் உங்களை நெருங்கினால் தொளைத்து விடுவேன்.

இளங்கைப் பிரச்சினையில் நான் மவுனமாக இருக்கிறேன் என்கிறார்கள். நான் என்ன போராளியா துப்பாக்கி எடுத்து அரசியலில் போரிட? டூப்ளிகேட் இல்லாமல் சண்டை போட முடியுமா? தொழில் நசிந்து விடும். பிரச்சினையெல்லாம் பேசியேதான் தீரவேண்டும்!!!! வேறு வழியில்லை.

வித்தியாசமான அணுகுமுறையில் நான் எப்படி அரசியல் செய்கிறேன் என்பதை இண்டர்வெள்ளுக்கு மன்னிக்கவும் தேர்தளுக்கு அப்புறம் பாருங்கள். உங்களுக்கும் (எங்களுக்கும்) எல்லாருக்கும் நல்வளி பிறக்க, எங்களைத் தேர்ந்தெடுக்க எப்படியாவது ஒரு முறை வாய்புத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இதோ எங்களது வாக்குறுதிகல்:

– வீடு தேடி வரும் ரேஷனோடு பால், பேப்பர் அனைத்தையும் நாங்களே உங்களுக்கு வீடு தேடி தருவோம்.

– குழந்தைகளைப் பெறுவதோடு கவளையை விடுங்கள். பள்ளி அட்மிஷனிளிருந்து காளேஜ் அட்மிஷன் வரை வீடு தேடி வரும்.

– கண்டிப்பாக அனைவருக்கும் இளவச இஸ்திரிப் பெட்டி, தையல் இயந்திரம் மற்றும் தண்ணீர் குடம்.

– பள்ளி மாணவர்களுக்கும்/இளைஞர்களுக்கும் பம்பரம் விடப் பயிற்சி, முக்கியமாக தொப்புளில்

– தமிள் வளர்க்க ஒரு தனித் தொலைக் காட்ச்சி (பிரேம்லதா TV?)

– பாகிஸ்தானோடு ஒப்பந்தம் போட்டு ராகெட் விடுவோம். தமிள் திரைப் படங்களை பாகிஸ்தானில் அதிகம் காட்டச் சொல்லி வற்புறுத்துவோம். யாருமே செய்யத் துணியாததை செய்றதுதான் நம்ம ஸ்டையில்.

பாகிஸ்தான் அணிக்கு பாம்ப் வைக்கிற வெளிநாட்டு சதித் திட்டத்தை இந்தியாவிளிருந்து அதுவும் தமிளகத்திலிருந்து போற ஹீரோ எப்படி முறியடிக்கிறார்ங்கிற கதையை அரசாங்கச் செளவிலே தமிளிலே பாகிஸ்தான் மண்ணுக்கே போய் முதள் முறையா படப் பிடிப்பு நடத்தி வருவோம்.

– எம்.பி.ஏ படிச்சுட்டு மாணவர்கள் வெளி நாட்டுக்குப் போறதுக்கு பதிளா, வெளிநாட்டிலே எம்.பி.ஏ படிச்ச மாணவர்களுக்கும் இந்தியாவிள வேளை தருவோம்.

– எங்கள் ஆட்சிக் காலம் முழுமைக்கும் இளங்கைப் பிரச்சினையை பேசியே தீர்ப்போம்.

– கள்ளெடுக்க அனுமதிப்போம். அதைப் பாக்கெட் மூளம் பார்களில் விற்க வசதி செய்து தரப்படும். முந்திரி, ஊறுகாய் போன்றவை அதிரடியாக விளை குறைக்கப்பட்டு ஒவ்வொரு ஏழைக்கும் சென்றடைய வளி வகுப்போம்.

– சினிமாத் துறைக்கு டைடெல் பார்க் போளவே ஒவ்வொரு மானிலத்தின் தலை நகரங்களிலும், மற்றும் பெரிய நகரங்களிலும் சினிமா பார்க்குகள் துவங்கப்படும். அவற்றில் ஸ்டுடியோக்களும், திரை சம்பந்தப்பட்ட அனைத்து அளுவளகங்களும் இருக்கும். ஒவ்வொரு பார்கிலும் குறைந்தது 6 தியேட்டர்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுவோம்.

– மிளிட்டரி மற்றும் போளீஸ் துறைக்கு கறுப்புக் கண்ணாடி கட்டாயமாக்கப்பட்டு அரசால் இளவசமாக வளங்கப்படும்.

– வக்கீள் போளீஸ் பிரச்சினைள பாதிக்கப்பட்டவுங்களுக்காக எங்கள் கட்சி சார்புள ஒரு படம் எடுத்து இளவசமாக கொடுப்போம். அந்தப்படம் அஞ்சு கோடி பட்ஜெட்டாணாளும் அம்பது கோடி பட்ஜெட்டாணாளும் சரி எங்கள் கட்சி இளவசமா எடுத்துக் கொடுக்கும்.

– வேட்டி துவைக்கவும், சேலை துவைக்கவும் கட்சி நடத்துகிறவர்களுக்கெல்லாம் இளவச சோப் கொடுப்போம்.

– மன்சூர் அலிகானுக்கு ராஜ்ஜிய சபை உறுப்பினர் பதவி.

– பிரேமலதாவை பிரதமர் வேட்பாளராக அறிவிப்போம். தமிளக முதல்வர் பதவி எனக்குப் போதும்.

– பள்ளிப் பிள்ளைகளும், காலேஜ் பசங்களும் சரியாப் படிக்காததுக்குக் காரணத்தை யாராவது சொன்னாங்களா? ஆசிரியர்களுக்கு சரியான சம்பளங் கொடுகிறாங்களா? ஆசிரியர்கள் சரியாப் படிச்சிறுக்காங்களான்னு யாரவது சொன்னாங்களா ? சந்திரனுக்கு ராக்கெட் அனுப்புண இந்தியா, செவ்வாய் கிரகத்துக்கு ஏன் அணுப்பளண்ணு தெரியுமா? ஒகேனக்கல்லு குடிநீர் திட்டம் என்ன ஆச்சுண்ணு கர்நாடகக் காரனும் கேட்கள, தமிழ் நாட்டுக் காரனும் கேட்கள. ஆனாள் நாங்களும் இதுவரைக்கும் கேட்கள. ஆனா காரணம் என்னன்னு உங்கள்ள யாருக்காவது தெரியுமா? இதுக்கெள்ளாம் தீர்வு எங்களுக்கிட்டே இறுக்கு. ஆனாள் நாங்க சொன்னா மற்ற கட்சிக்காரங்கள்ளாம் தெரிஞ்சுகிட்டு எங்களுக்குப் போட்டியா ஏதோ அவங்களே சொல்ற மாதிரி சொள்ளிருவாங்க. அதனாளே எங்களைத் தேர்தெடுங்க, இதுமாதிரி எள்ளாப் பிரச்சினைக்கும் தீர்வுகளை அள்ளி அள்ளித் தருவோம். நன்றி.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம். (எந்தத் தேர்தலாயிருந்தால் என்ன?)

பாமக வாக்குறிதிகள்:

– அன்புமணிக்கு எந்த அரசாங்கமாக இருந்தாலும் மத்திய மருத்துவ மந்திரி பதவி. நாங்கள் சொல்லும் திட்டங்களை நடைமுறைப் படுத்தும், அல்லது வழிவகுக்கும் பிரதமமந்திரி மற்றும் அவரது கட்ச்சியையே ஆதரிப்போம் அல்லது அந்த அணிக்கு பாமக தாவும்.

– வன்னியருக்குத் தனி மானிலம் அமைக்கப் போராடுவோம். இதை 2034 க்குள் அமைப்போம். அவ்வமயம் வன்னியர் அல்லாதவர் வேறு மானிலத்திற்கு நாடு அதாவது மானிலம் கடத்தப்படுவர்.

– வன்னியர் பல்கலைக் கழகம் அமைக்கவும், வன்னியர் ரீஜினல் இஞ்சினீயரிக் காலேஸ் மற்றும், வன்னியர் மேனேஜ்மெண்ட் கல்லூரிகள் அமைக்கவும் மத்திய அரசையும், மானில அரசையும் வற்புறுத்துவோம். இதற்கு ஒவ்வாத கட்சிகளிடமிருந்து பாமக கட்சி அணியை மாற்றி அமைக்கும்.

– காடுவெட்டி குருவை பிரதம வேட்பாளராக பிரகடனப் படுத்தி அவரைப் பிரதமர் பதவிக்கு முன்னிலைப் படுத்துவோம். மருத்துவர் ஐயாவிற்கு பதவி ஆசையே கிடையாது. அன்பு மணிக்குக் கூட மக்கள் மிகவும் விரும்பிக் கேட்டதாலும், இல்லையென்றால் உண்ணாவிரதமிருப்போம் என்று போராட்ட குணத்தோடு அனைத்துப் பிரிவினரும் வேண்டிக் கொண்டதால் மட்டுமே பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அவர் தமது மருத்துவ மந்திரி பதவி மட்டுமல்லாது பிரதமரையும், மற்ற மந்திரிகளையும் அவரவர் தம் கடமையைச் செய்ய மிகவும் வலியுறுத்துயுள்ளார் என்பதை அமெரிக்காவும், பிரிட்டனும் கொடுத்துள்ள பரிசுகளைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம். எனவேதன் அன்பு மணி ஆயுள் காலத்திற்கும் பதவியில் இருக்க வேண்டுமென பாமக விரும்புகிறது.

– தமிழகத்தின் அரசுவைக் கட்டுப்படுத்தும் கட்சியாக பாமக எப்போதும் செயல்படும்.

– நாட்டில் பனைமரங்கள், தென்னை மரங்கள் கள் எடுப்பதற்காகப் பயன் படுத்தப்பட்டால் அவற்றை முழுவதுமாக வெட்டி எறிய பாமக தயங்காது.

– நாட்டிலுள்ள சாராயக் கடைகள், பார்கள், பான்பீடாக் கடைகள், சிகரெட் பீடி விற்பனை நிலையங்கள் அனைத்தையும் மூட ஆவன செய்யப்படும்.

– பொது இடங்களில் சிகரெட், பீடி பிடிப்பவர்களாகட்டும், தனியாக வீட்டில் பிடிப்பவர்களாகட்டும் அரசால் பிடிக்கப்பட்டால் சிங்கப்பூர், துபாயில்குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவது போல் முதற் குற்றத்திற்கு 1 சாட்டை அடியும் பிற்பாடு ஒவ்வொரு முறை தவறுக்கும் சாட்டை அடிகள் கூட்டப்பட்டு அதிகபட்சமாக 5 அடிவரை அனுமதிக்கப்பட்டு பிற்பாடு தலை துண்டிக்கப்படுவர்.

– புகையிலை, பீடி, காஞ்சா உற்பத்தியை முழுவதுமாக நிறுத்தப்படும். உலக நாடுகளில் முதன் முறையாக புகை வளமற்ற நாடாக இந்தியாவை உருவாக்குவோம்.

– சாராயம், சுருட்டு படைக்கப்படும் கடவுள் வழிபாடு பாமக வினரால் நாடு முழுவதும் அகற்றப்படும்.

– நல் வழிகளை வலியுறுத்தாத திரைப் படங்களைத் திரையிட அனுமதிக்க மாட்டோம். இது ஃபாரின் படத்திற்கும் பொருந்தும்.

– காவிரிப் பிரச்சினை, ஒகேனக்கல் பிரச்சினையெல்லாம் பிரச்சினையே அல்ல. இவை பெரிது படுத்தப் பட்டுக் காட்டப் பட்டிருக்கின்றன. இவற்றைக் களைய மாபெரும் தமிழர் பேரணியை அமைத்து அவர்களை ஒகேனக் கல்லிலும், காவிரி எல்லைப் பகுதியிலும் நிறுத்துவோம். அவர்களுக்கு அரசாங்கம் மூலமாக குடங்கள் வழங்கப்பட்டு மனிதச் சங்கிலித் தொடராக தண்ணீரை தமிழகத்திற்குக் கொண்டு வருவோம். இதனால் மக்களும் உடல் ஆரோக்கியத்துடன் திகழ்வர். வேலை இல்லாத் திண்டாட்டமும் பெருமளவில் தீர்க்கப்படும்.

– பாமக மிகவும் கட்டுப்பாடான ஒரு ஜனனாயகக் கட்சி, ஜனனாயகத்தில் முழுவதும் நம்பிக்கை வைத்துள்ளோம். எனவே ராமதாஸின் எண்ணங்களே சட்டமாக்கப்படும். மற்றைய எண்ணங்கள் நேரத்தை வீணடித்துவிடும், தேசியப் பொருளாதாரத்தை வீழ்த்திவிடும் என்பதாலேயே மருத்துவர் ஐயா இந்த முடிவை மேற் கொண்டுள்ளார்.

– பாமக எப்போதும் பிற கட்சிகளைச் சார்ந்திருப்பதால், தேர்தலில் எந்த அணியுடன் சார்ந்திருக்கிறோமோ அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளை நாங்கள் வழி மொழிவோம். இதனால் வாக்காளர்களுக்குக் குழப்பம் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

– வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள். வாக்குச் சாவடிக்குப் போகும் முன்னர் பாமக எந்த அணியில் உள்ளோம் என்பதைத் தெளிவாய் தெரிந்து கொண்டு செல்லவும். இது கடைசி நேர அணி மாற்றம் எதையும் மருத்துவர் ஐயா அவர்கள் செயல் படுத்தி இருந்தால் அதை மறக்காமல் அறிந்து கொள்ளவே.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

(தொடரும்)

– ஈஷா ஷக்தி

Series Navigation

author

ஈஷா ஷக்தி

ஈஷா ஷக்தி

Similar Posts