சந்திரசேகர்
மத்தவன் செல்லு வெச்சுகிட்டா நமக்கென்னன்னு கேக்கறீங்களா ? அதுலயும் பல தொல்லைகள் இருக்கு!!
புதுப் புருஷன் மாதிரி புதுசா மொபைல் வெச்சிருக்கிறவன் பண்ற இம்சைகள் நிறைய!
நல்லா கும்பல் இருக்குற பஸ் நெறிசல்ல திடார்னு பைக்குள்ள கைய விடுவான்! அடுத்தவன் தாடைல குத்துவிட்டோமேங்கிற கவலையில்லாம!!
டக்னு காதுல வெச்சு, ‘ஓ, சரி ப்லீஸ் வெயிட், ஜஸ்ட் கமிங் ‘னு பீட்டர் விடுவான்! இல்ல, உட்கார இடம் கிடைச்சுருச்சுன்னா, பல விதமான டயல் டோன்களை மாத்தி, மாத்தி, ஒண்ணு இறங்க வேண்டிய ஸ்டாப்பின்ங்ல இறங்க மறந்துடுவான், இல்ல இந்த டயல் டோன் இம்சை தாங்காத பக்கத்து சீட்டுக்காரன், இறங்க வேண்டிய ஸ்டாப் வரதுக்கு முன்னாடியே, இறங்கி ஓடிடுவான்!
கொஞ்ச திடார் பணக்காரங்க மொபைல் வெச்சுகிட்டு பண்ற அலம்பல் இருக்கே, அது தனி ரகம்! பெரிய குரல் எடுத்து, என்னமோ பேசுறது, நேரா கேக்குற ஆளோட காதுலயே போய் நுழையிற அளவுக்கு ை ? டெஸிபல்லில், கத்துவான்! அது ஆஸ்பத்திரியா இருந்தாலும் சரி! என் நண்பன் மொபைல் கடை நடத்துறான். அவன் சொன்ன ஒரு திடார் பணக்கார மொபைல் ஆசாமி, இவன் கடைல போயி, ‘என்னய்யா,இந்த SMS, அது இதுன்றாங்க, பாட்டு படிக்கும்னாங்க, TMS அ காணோமே ? பழைய தலைவர் பாட்டெல்லாம் வராதா ?பின்ன என்னாத்துக்கு வேஸ்டா, க்ரெடிட் கார்டுல (அதுவும் இருக்குதுன்னு எல்லாருக்கும் தெரியணும்ல ?) 12,000 ரூபா பிடிச்ச ? ‘ ன்னு, இவன பிடிச்சுகிட்டாறாம்!! அவருக்கு தனியா ஒரு ட்ரெய்னர் போட்டு, மொபைல எப்படி யூஸ் பண்றதுன்னு ஒரு நாள் முழுக்க சொல்லவேண்டியதாப் போச்சாம்!
—-
chandra_jgp@yahoo.co.uk
- வாளி
- கனவு மெய்ப்படுமா ?
- அங்கே இப்ப என்ன நேரம் ? (கட்டுரைகள்) : அ.முத்துலிங்கம்
- The Elephants Rally-யா னை க ளி ன் ஊ ர் வ ல ம்
- கவிதையோடு கரைதல்..!
- போல் வெர்லென் ((Paul Verlaine 1844-1896)
- மொபைல் புராணம்
- சொன்னார்கள்
- அருவி அமைப்பு நடத்தும் சுடர் ஆய்வுப் பரிசு வழங்கும் விழா
- கடிதம்
- உண்மை நின்றிட வேண்டும்!
- விமர்சனங்களும், வாழ்த்துரைகளும்….
- விளக்கு தமிழிலக்கிய மேம்பாட்டு நிறுவனம் – ஞானக் கூத்தனுக்கு புதுமைப்பித்தன் இலக்கிய விருது
- பாரதியை தியானிப்போம்
- கடிதம் கை சேரும் கணம்
- இரு கவிதைகள்
- சிக்குவும் மழையும்….
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- வண்டிக் குதிரைகள்
- எல்லை
- யூதர்களுக்காக ஏங்கும் இஸ்லாமியர்
- நமது பத்திரிகை உலகமும் அதில் எனது சொற்ப ஆயுளும்
- சிறு குறிப்புகள். (பன்றிவதை, e-pill, சுனாமி ஆராய்ச்சி நிலையம், டிசி, அமைச்சர் அன்புமணி)
- அப்ப… பிரச்சனை… ? பெண்மனசு
- எடின்பரோ குறிப்புகள் – 3
- கீதாஞ்சலி (53) நான் பாட குழந்தை ஆட! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- மறதி
- பெரியபுராணம் – 69 – 33. நமிநந்தியடிகள் நாயனார் புராணம்
- நான் உன் ரசிகன் அல்ல..
- திண்ணை