சொதப்பப்பா
Father roots for Tamil, son differs
அப்பா சொல்கிறார் தமிழ் வாழ்க, மகன் சொல்கிறார் ஆங்கிலம் வாழ்க
செப் 27,2004
ஊருக்குத் தான் உபதேசம் , உனக்கும் எனக்கும் இல்லை என்பது அரசியல்வாதிகளின் தாரக மந்திரம். லயன்ஸ் கிளப்பின் உலக இருதய தினம் அன்று லயன்ஸ் கிளப் தலைவர் தமிழில் பேசினார். ஆனால், பிரதம விருந்தினர் அன்புமணி ராமதாஸ் கறுப்பு சூட் கோட்டில் வந்திருந்தார். ‘சூட்டு எல்லாம் போட்டுகிட்டு வந்திருக்கேன். இங்கிலீஷ்லேயா பேசறேன் ‘ என்று ஆங்கிலத்தில் பேசினார்.
தமிழ் பாதுகாப்பு இயக்கத்தை ஆரம்பித்து நடத்தி வரும் ராமதாஸ் , பொது வாழ்க்கை, திருமணம், நீதிமன்றம், கடைப் பலகை, பள்ளிக்கூடம் இவற்றில் தமிழை வலியுறுத்தி வருகிறார்.
(செய்தி இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்)
‘சென்னையில் பணி புரிபவர்கள் தம்முடைய கம்பெனிக்கு மிகவும் விசுவாசமாக இருக்கிறார்கள். ‘
அமிதாப் ஸ்ரீவாத்சவா, சான்ஸா கம்பெனியின் இயக்குநர். (பெங்களூரிலிருந்து ஏன் கம்பெனிகள் சென்னைக்கு நகர்கின்றன என்பதற்குச் சொல்லும் காரணம்.)
சேகர் என்றில்லாமல் உங்களால் குற்றம்சாட்டப்பட்ட பெரும்பாலான போலீஸார் நீங்கள் சொல்வது பொய் என்கிறார்களே.. ?
(உக்கிரமாக) ‘‘ஏன் சொல்லமாட்டாங்க ? ஏதாவது ஒரு வீட்டில் ஒருத்தரைப் பிடிக்க முடியல்லேன்னா, அந்தக் குடும்பத்தையே கொண்டுபோய் ஸ்டேஷனில் வச்சு மிரட்டுவாங்க. ஏதாவது வீட்டில் அடைச்சு வைப்பாங்க. அவங்க தேடற ஆள் வர்ற வரை சித்திரவதை செய்வாங்க. என் விஷயத்திலேயும் அப்படித்தானே நடந்துச்சு. ஆனால் இப்ப இன்ஸ்பெக்டர் இளங்கோவனைப் பிடிக்க முடியல்லேன்னு பாவ்லா காட்டுறாங்க. அவரைப் பிடிக்கணும்னா அவர் மனைவி பிள்ளைகளை ஸ்டேஷன்ல பிடிச்சு வச்சு விசாரிக்கட்டும். தன்னால வந்திடுவாரில்லையா.. ?
குமுதம் ரிப்போர்ட்டரில் ஜெயலட்சுமி
(இளங்கோவன் தற்போது சரண் அடைந்துள்ளார். திண்ணை குழு)
கோஷ்டி பூசல்: இளங்கோவன் பேட்டி
மத்திய இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று (செப்டம்பர் 26) சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது,
கேள்வி: கோஷ்டி மோதல் மீண்டும் தலைதூக்கி உள்ளதே ?
பதில்: எங்கள் கட்சியில் எனது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தது, கூட்டம் நடத்தியது இவை எல்லாமே எங்களுடைய உள்கட்சி பிரச்னை. இதுகுறித்து நான் கட்சியின் மேலிடத்தில் சொல்லியிருக்கிறேன். விரைவில் இந்த பிரச்னைக்கு சுமூகத் தீர்வு ஏற்படும்.
கேள்வி: காங்கிரஸ் கட்சி செயல்பட வேண்டுமென்றால் மாநில தலைமையை மாற்ற வேண்டுமென்று கருதுகிறீர்களா ?
பதில்: என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நான் மேலிடத்தில்தான் தெரிவிக்க முடியும். இதுகுறித்து கட்சி சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நடவடிக்கை இல்லை என்பது எங்களுடைய கருத்து. அதைத்தான் நாங்கள் மேலிடத்தில் தெரிவித்துள்ளோம்.
தி.மு.க., அ.தி.மு.க., உள்பட எல்லா கட்சியிலும் கோஷ்டி பூசல் உள்ளது. காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் அதிகம் என்பதால் கோஷ்டி பூசல் பெரியதாக தெரிகிறது.
கேள்வி: காங்கிரஸ் கட்சி உங்கள் ஆதரவாளர்களாக உள்ள மாவட்ட தலைவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளதே ?
பதில்: நான் மாவட்டம் முழுவதும் உள்ள தலைவர்களிடம் விசாரித்ததில் இதுவரை விளக்கம் கேட்டு எந்த கடிதமும் வரவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
கேள்வி: ஜி.கே.வாசன் அமைச்சர் ஆகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளதே ?
பதில்: ஜி.கே.வாசன் மேலும் மேலும் வளரவேண்டும். அவர் மத்திய அமைச்சராக வேண்டும். அந்தமான் கவர்னராக வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
(விகடன்)
‘கொல்கத்தா எலெக்றிக் சப்ளை கார்ப்பரேஷன் தான் இதற்குப் பொறுப்பேற்கவேண்டும். ‘
‘மாற்று மின்சார ஏற்பாடுகளுக்காக மானில அரசிற்கு விண்ணப்பித்தபோது, எங்களுக்கு ஹாட்லைன் (நேரடி தொலைபெசி ) இருப்பதால் தங்குதடையற்ற மின்சார அமைப்பு தேவையில்லை என்று அரசாங்கம் தெரிவித்துவிட்டது. ‘
மின்வெட்டால் ஐந்து குழந்தைகள் அரசு மருத்துவமனையில் இறந்தது பற்றி மிருணாள் சட்டர்ஜி , மருத்துவ மேலாளர்.
வைரமுத்துவின் கவிதைகளைக் கேட்கும்போது , பாரதியார் என் நினைவுக்கு வருகிறார்
– சாகித்ய அகாதெமி தலைவர் கோபிசந்த் நாரங்
தமிழர்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் என்று பரப்பப்படும் தவறான பிரசாரம் பொய் என்பதற்கு இன்னொரு உதாரணம் தான் வைரமுத்து கவிதைகளின் இந்தி மொழியாக்க நூல் வெளியீடு. கருணாநிதி ஏற்கனவே , தனது புத்தகங்களை சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தியில் வெளியிட்டிருக்கிறார். அவரது சீடரான வைரமுத்துவும் இப்போது அதே பாதையில் செல்கிறார்.
மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன்.
தினமணியில்
- அ.முத்துலிங்கம் பரம்பரை -2
- செல்லமே – ஆனந்த விகடன் சினிமா விமரிசனம் (கரெக்ட் செய்யப்பட்டது)
- ஆட்டோகிராஃப்-20 – – “பூங்கதவே தாள் திறவாய்”
- புத்தகம் : ஹா ஜின் எழுதிய ‘காத்திருப்பு ‘ : அதிகாரத்தின் வாசலில் யாசிக்கும் கைகளுடன்….
- Submission – ஒரு குறும்படம், மற்றொரு ஃபட்வா
- மெய்மையின் மயக்கம்-19
- தார்மீகமிழந்த சாமர்த்தியங்கள்
- பதுங்கியிருக்கும் பாளையப்பட்டு…:
- முப்பதாண்டு கால முயற்சி
- சொன்னார்கள்
- கடிதம் செப்டம்பர் 30,2004 : வசூல்ராஜா NRI. அல்லது பாத்திரம் அறிந்து பிச்சையிடு.
- கடிதம் செப்டம்பர் 30 ,2004 : Forrest Gump – சிப்பிக்குள் முத்து…. பற்றி கமல்
- உரத்த சிந்தனைகள்- 1
- கடிதம் செப்டம்பர் 30,2004 – தமிழ்ச்செம்மொழி – பார்வைகள்!
- மோசடி மேற்கோள்கள் மூலம் ஒரு ஜிகாத்
- கடிதம் செப்டம்பர் 30,2004
- கடிதம் செப்டம்பர் 30,2004
- கடிதம் செப்டம்பர் 30,2004 – திரு.நாக.இளங்கோவன் அவர்களின் சிந்தனைக்கு சில
- கடிதம் செப்டம்பர் 30,2004 – மஞ்சுளா நவநீதனுக்கு ஒரு வேண்டுகோள்!
- கடிதம் செப்டம்பர் 30,2004 – பித்தனுக்குக் கடிதம்
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 3-தோட்டுக்காரி அம்மன் கதை
- காவேரி உற்பத்தியாகும் கர்நாடகம்
- ஒரு முன்னோடியின் பின்னாடி
- சினிமா — முக்கிய அறிவிப்புகள்
- சென்றவாரம் பற்றி சில குறிப்புகள் (9/29/2004, பெரியாரின் பெண்ணுரிமை கருத்து, சாதி ஒழிந்தால்தான், வருமானம் 3,068 பில்லியன் டாலர்,
- அறிவிப்பு: நியூயார்க் மாநகரில் உத்தமர் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்
- மெல்ல விழுங்கும் மாஃபியாக்கள் (சென்ற வாரத் தொடர்ச்சி)
- எதிர்பார்ப்பு
- பிழை திருத்தம்
- எனக்கென்று ஒரு மனம்
- ஐந்து கவிதைகள்
- பெரியபுராணம் — 11
- பிரிக்க முடியாத தனிமை
- பகவத் கீதை எனும் உண்மையான உதய சூரியன்
- இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (2)
- சிலந்தி வலை சிக்கல்கள்
- இந்திய அணுவியல் விஞ்ஞான மேதை டாக்டர் ராஜா ராமண்ணாவின் மறைவு (1925-2004)
- அதிசயம்
- இயற்கைக் கோலங்கள்
- களை…
- கூர் பச்சையங்கள்
- நீலக் கடல் -(தொடர்) – அத்தியாயம் – 39